Total Pageviews

Tuesday, November 15, 2011

அய்யாச்சாமி-இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

     

 “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
      “
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....



ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய   வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
 மாணவர்கள்: புரியல சார்...



 போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
  டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல   க்கத்தில  இருந்தேன்.


 மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா



மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....



 நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


 முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் செல்லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?



லவ் லட்டருக்கும், எக்ஸாம்க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது..
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?



கணவன்: காலெண்டர்ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...



 நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...



இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.

No comments:

Post a Comment