Total Pageviews

Tuesday, November 15, 2011

மனிதநேயம்


பணம் எனும் மந்திரச்சாவி கொண்டு
வாழ்க்கையை திறக்க முற்படுகின்றோம்
உயிர் எனும் குகைக்குள் அது
புதைந்து கிடப்பதை மறந்து

உலகெங்கும் வன்முறை
கோரதாண்டம் ஆடிக்கொண்டிருக்கிறது
எங்கே மனிதநேயம்?
மனிதநேயம் சில அமைப்புகளுக்கு மட்டுமே
சொந்தம் என எண்ணுகின்றோம்

உலகம் நாளை இளைஞர்கள் கையில்
இன்றே அதன் வம்சங்கள்
அழிக்கபடுகின்றனவே - எங்ஙனம்
நாளைய இளைஞர்கள்
விழித்துகொள்வோம் வன்முறை
நம் வாசலில் தீ வைக்கும்முன்
புகட்டுவோம் பிள்ளைகளுக்கு
மனிதநேயத்தை
உருவாக்கிடுவோம் நாளைய நம்
சமுதாயத்தை அமைதியாக

No comments:

Post a Comment