பணம் எனும் மந்திரச்சாவி கொண்டு
வாழ்க்கையை திறக்க முற்படுகின்றோம்
உயிர் எனும் குகைக்குள் அது
புதைந்து கிடப்பதை மறந்து
உலகெங்கும் வன்முறை
கோரதாண்டம் ஆடிக்கொண்டிருக்கிறது
எங்கே மனிதநேயம்?
மனிதநேயம் சில அமைப்புகளுக்கு மட்டுமே
சொந்தம் என எண்ணுகின்றோம்
உலகம் நாளை இளைஞர்கள் கையில்
இன்றே அதன் வம்சங்கள்
அழிக்கபடுகின்றனவே - எங்ஙனம்
நாளைய இளைஞர்கள்
விழித்துகொள்வோம் வன்முறை
நம் வாசலில் தீ வைக்கும்முன்
புகட்டுவோம் பிள்ளைகளுக்கு
மனிதநேயத்தை
உருவாக்கிடுவோம் நாளைய நம்
சமுதாயத்தை அமைதியாக
No comments:
Post a Comment