கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.
* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது
* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது
* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது
* கோயிலுக்குள் தூங்கக் கூடாது
* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது
* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது
* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது
* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது
* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது
* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது
* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது
* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது
* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.
* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,
* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.
No comments:
Post a Comment