Total Pageviews

Thursday, August 4, 2016

காவிரி ஆறு

 
காவிரியின் கதை:-

கங்கையை விடப் புனிதமான காவிரி என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள்!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இடத்தில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி உருவாகிறது.

பிறப்பிடம்:-

இந்தியத் தீபகற்பத்தின் தெற் குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற் குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக் காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்று கிறது.

காவிரியின் நீளம்:-

காவிரியின் மொத்த நீளம் 800 கிலோ மீட்டர். இதில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழ்நாட்டிலும் பாய்கிறது. இரு மாநில எல்லையிலும் 64 கி.மீ. தூரம் ஓடி இரு மாநிலத் துக்கும் பொதுவான நதி காவிரி என்று சொன்னால் மிகையாகது.

காவிரி ஓடும் இடங்கள்:-

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக காவிரி ஓடுகிறது.

தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திரு ச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென் று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.

துணை நதிகள்:-

ஹேமாவதி, ஹேரங்கி, லட்சு மண தீர்த்தம், கபினி, சுவர்ண வதி என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் துணை நதிகள் காவிரியுடன் வந்து கலக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் சங்கமம் ஆகும் இந்த நதிகள் பெரிய காவிரியாக உருவெடுக்கிறது. இதில் சிம்ஷா, அர்க்காவதி ஆகிய ஆறுகளும் சேர காவிரி மிகப் பெரிய நதியாக கம்பீரமாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது.

மேட்டூருக்கு கீழே தெற்கு நோக்கி திரும்பும் காவிரியுடன் பவா னி, நொய்யல், அமராவதி ஆகிய துணை நதிகள் கலக்கிறது. இதனால் காவிரி மேலும் விரிவடைகிறது.

அணைக்கட்டுகள்:-

மேட்டூர் அணை, கிருஷ்ண ராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்ட ப்பட்டுள்ள அணை களாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

2 அருவிகள்:-

கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும். ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

கொள்ளிடம், கல்லணை:-

திருச்சி மேல்அணை அமைந்துள்ள இடத்துக்கு முன்பு அது 2 கிலோ மீட்டர் அளவுக்கு அகன்று அகண்ட காவிரி ஆகிறது. மேல் அணையில் இரு பிரிவு களாக பிரிந்து வடக்கு பகுதி யில் உள்ள பிரிவு கொள்ளிடம் ஆகிறது.

தென்பகுதி, காவிரியாக ஓடி கல்லணைக்கு செல்கிறது. அங்கிருந்து வெண்ணாறு பிரிகிறது. பின்னர் காவிரியின் இரு நதிகளும் பல கிளைகளாக பிரிந்து 36 கிளை நதிகளாக பாய்ந்து வளங்களை வழங்குகிறது. இறுதியில் பூம்புகார் அருகில் சிறிய ஓடை யாக மாறும் காவிரி கடலில் கல க்கிறது.

புனித நதி:-

கங்கை புனித நதி. கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலை யும் என்பது புராணங்கள் கூறும் செய்தி. சிவபெருமானின் ஜடா முடியினுள் கங்கை இருக்கி றாள். அதனால் சிவனுக்கு “கங்காதரன்” என் றும் ஒரு பெயர் உண்டு. கங்கையைக் கடவுள் நதி என்று கம்பன் போற்றுகிறான். கங்கையை விடப் புனிதமான ஒரு நதி இருக்கிறது என்று புராணங்களும், மகரிஷிகளும் கூறுகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா, ஆனால் அது தான் உண்மை.

“கங்கையிற் புனிதமாய 

கவிரி” என்கிறார் ஆழ்வார்.

சேர நாட்டினரான இளங்கோ வடிகள்

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப

மணிப்பூ ஆடை அது போர்த்தும்

கருங்கயற்கண் விழித்து ஓல்கி

நடந்தாய் வாழி! காவேரி!

கருங்கயற்கண் விழித்து ஓல்கி

நடந்த எல்லாம் நின் கணவன்

திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி காவேரி!”

இதன் பொருள் என்ன தெரியுமா?

“காவிரி நடை பயின்று வருகின்ற வழி யெல்லாம் கழனிகள் எல்லாம் பச்சைப் பசுங்கம்பளங்கள் போல் திகழ்கின்றன. புனல் பெருகும் வழியெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ்சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டி னரான இளங்கோவடி களும், கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார்.

`காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.

காவேரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது. இங்கு சுகமாக ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.

“அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்” என்ற வார்த்தை சரியானது தானே?

காவேரியம்மன் கோவில்:-

அதைவிட மிக முக்கியமான தாக விளங்குவது சிறப்பு வாய் ந்த காவே ரியம்மன் கோயில்! ஆம் காவிரி த்தாய் சக்தியின் வடிவமாகி நிற்கும் திருக்கோயில் இங்குதான் உள்ளது. நீண்ட நெடுங்காலத்திலேயே காவிரித் தாய்க்குக் கோயில் அமைத்து தமிழ் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பிற்காலத்தில் சிலர் தேச நாதி ஸ்வரர் கோயில் என்று எழுதி வைத்திருக்கலாம்.

ஆனால், இப்பொழுதும் மக்கள் காவேரியம்மன் கோயில் என்றே அழைக்கின்றார்கள். காவிரி அம்மையும், காவிரியப்பனும் இணைந்து அமர்ந்துள்ள சிலையை மக்கள் போற்றி வழி படுகின்றனர்.

இப்பகுதியில் வாழும் மக்கள் பலருக்கு காவிரியப்பன், காவிரியம்மாள் என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. அடுத்து பிரபலமான பெயராக மாதையனும், மாதம்மாளும் காணப்படுகிறது.

சிவாலயங்கள்:-

காவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கூடுமிடம் வரை காவிரி செல்லும் வழிநெடுக சிவாலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவேர முனிவன் காவிரியைக் கொண்டுவரக் காரணமானவன் என்பது புராணச் செய்தி.

அகத்திய முனிவர்:-

அந்தக் காவேரமுனிவரே அகத்திய முனிவர். காவிரிக் கரையில் அகத்திய முனிவரால் வணங்கப் பெற்ற ஐந்து புண்ணிய சிவ ஸ்தல ங்களுள் காவிரியம்மன் கோயிலும் ஒன்று. இந்தப் பூதலிங்கங் களையும் காவிரி அம்மனையும் இவர் வணங்கினார் என்பது மக்களிடத்தில் வழங்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று.

சக்தியின் வடிவமான காவிரி அன்னை இருக்கும் திருக்கோயிலில் சிவன் இல்லாமலா போய்விடுவார்? இங்கு அமைக் கப்பட்டுள்ள ஐந்து சிவலிங்கம் பிரசித்தி பெற்ற லிங்கங்களின் வரிசையில் போற்றப்படுகிறது. பெரிய பெரிய அளவில் ஐந்து லிங்கங்கள் ஆலயத் திற்குள் ஒரே இடத் தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கங்களை ஐந்து பூத லிங்கங்கள் என்று சிவனடியார்கள் போற்றி வணங்குகின்றனர்.

இங்கு நிறுவப்பட்டுள்ள நந்திச்சிலை சிறந்த கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலுள்ள சிறந்த நந்தி களில் இதுவும் ஒன்று.

திருச்சி காவேரியில் ஆடிப்பெருக்கு விழா:-

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு வருவதுண்டு.

அதுமட்டுமல்ல பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றுக்கு வருவார்கள்.

மேட்டூர் அணை:-

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரில் அமைந்துள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும்.

கல்லணை:

கல்லணை இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது திருச்சிக்கு அருகில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது பெரிய அதிசயம் ஆகும்.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் கட்டப்பட் டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
 
விவசாயம்:-

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அதில் நெல் சாகுபடியே முக்கிய தொழிலாகும். நெல் சாகுபடிக்கு மேட்டூரி லிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அது காவிரி டெல்டா பகுதி யில் கடைமடை பகுதிவரை சென்றால்தான் அதில் சாகுபடியை முழுமையாக செய்ய இயலும்.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் திருச்சி, புதுக்கோட் டை, கடலூர் எனச் சில பகுதி களை இணைத்துக் காவிரி நீர்ப் பாசன மண்டலமாகப் பிரித் திருக்கிறார்கள். இந்தக் காவிரி நீர்ப்பாசன மண்டலத்தில் குருவை, சம்பா, தாலடி என்னும் மூன்று பருவமும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற நெல் ரகங்கள் உரப் பரிந்துரை, பயிர்ப் பாதுகாப்பு முறை ஆகியவற்றைப் பற்றிக் கையேடு தயார் செய்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளும் அந்தப் பரிந்து ரைகளைப் பின்பற்றி அவற்றில் குறிப்பிடடுள்ள 90% மகசூலைப் பெறுகிறார்கள்.
காவிரியைச் சுற்றி பார்க்க விருப்பமா....

No comments:

Post a Comment