Total Pageviews

Tuesday, August 23, 2022

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு?

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???*

 சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு...

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்...

 அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்...

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

ஏன் கோவிலை கட்டினார்கள்?

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???

பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.

வாழ்க தமிழ்
வெல்க பாரதம்
வந்தேமாதரம் 🚩🙏
இதுதான் உண்மையான வரலாறு...

NEW K10 -ALTO CAR 2022 ON ROAD PRICE AT DELHI

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க? 

எஸ்டிடி வேரியண்ட்:  Std(Petrol) (Base Model) Rs.4,36,841/-  Delhi On Road Price

  மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 காரின் எஸ்டிடி வேரியண்டில் 13 அங்குல வீல்கள் சென்டர் கேப்புடன் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் உட்பக்கத்தில் பாட்டில் ஹோல்டர்கள், சன் விஷர்கள், கேபின் ஏர் ஃபில்டர், ரிமோட் ஃப்யூவல் லிட் ஓபனர், ரிமோட் பூட் ஓபனர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக ரியர் சைல்டு லாக், முன் பக்கத்தில் ப்ரீ டென்ஷனுடன் கூடிய சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ட்யூவல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்:  LXI Model - Rs.5,26,070 /-  Delhi On Road Price

மேலே பார்த்த எஸ்டிடி வேரியண்டைக் காட்டிலும் சற்று அதிக அம்சங்கள் கொண்ட தேர்வாக எல்எக்ஸ்ஐ வேரியண்ட் இருக்கின்றது. இந்த தேர்வில் பாடி நிறத்திலான பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீட்டர் வசதிக் கொண்ட ஏசி, பவர் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் எஸ்டிடி வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும் எல்எக்ஸ்ஐ வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விஎக்ஸ்ஐ வேரியண்ட்: VXI Model - Rs.5,44,884/-  Delhi On Road Price
உடல் நிறத்திலான டூர் ஹேண்டில்கள், ரூஃப் அன்டென்னா, முன் பக்கத்தில் பவர் விண்டோக்கள், அக்சஸெரி சாக்கெட், இன்டர்நெல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், 2 டின் ஸ்மார்ட் பிளே ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் மற்ற கீழ் நிலை வேரியண்டுகளில் இடம் பெறாத அம்சங்களாக விஎக்ஸ்ஐ வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், எஞ்ஜின் இம்மொபிலைசர், சென்ட்ரல் டூர் லாக்கிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

விஎக்ஸ்ஐ பிளஸ்: VXI PLUS Model  Rs.5,81,435 Delhi On Road Price
மேலே பார்த்த ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்விலேயே மிக அதிக வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மேலே பார்த்த அனைத்து வேரியண்டுகளிலும் இடம் பெற்றிருக்கும் அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல புதிய மற்றும் கூடுதல் அம்சங்கள் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

கூடுதல் அம்சங்களாக சில்வர் அக்செண்டுகள் காரின் உட்பகுதி டூர் ஹேண்டில், சென்டர் கார்னிஷ், சைடு லூவர்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரிமோட் சாவி, 17.78 அங்குல ஸ்மார்ட் பிளே திரை (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), மல்டி ஃபங்க்சன்கள் கொம்ட ஸ்டியரிங் வீல், ரியர் பகுதியில் பார்சல் டிரே, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிறப்பு வசதிகளிலும், அலங்கார அம்சத்திலும் மாறுபட்டுக் காணப்படும் இந்த வேரியண்டுகள் எஞ்ஜின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக 24.39 கிமீ தொடங்கி 24.90 கிமீ வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அவை மைலேஜ் தரும்.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2022/2022-maruti-alto-k10-hatchback-variant-wise-features-details/articlecontent-pf302593-032978.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider