Total Pageviews

Tuesday, May 26, 2026

கலைஞானம் அவர்களின் வார்த்தைகள்! சொன்னபடி சொந்த வீடு வாங்கி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த்.

 

ஒரு சில உண்மைகளை அந்த மேடையில் படார் படார் என போட்டு உடைத்தார் நடிகர் சிவகுமார்.

அது கதாசிரியர் கலைஞானம் அவர்களுக்கான பாராட்டு விழா.

2019 ல் நடந்தது.

சிவகுமார் சொன்ன விஷயத்தைக் கேட்டு விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள். வி.ஐ.பி.க்கள் வியந்து போனார்கள். அரங்கில் கூடி இருந்த பொதுமக்கள் அசையாதிருந்தார்கள்.

மேடையில் இருந்த ரஜினிகாந்த் கூட அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்.

நம்பக் கூடிய விஷயமா சிவகுமார் சொன்னது ?

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் சம்பந்தப்பட்ட கலைஞானமும் அதே மேடையில்தான் அமர்ந்திருந்தார். சிவகுமார் சொன்னதைக் கேட்ட பின்னரும் அமைதியாகவே அவர் இருந்தார்.

சிவகுமார் சொன்ன விஷயம் இதுதான்.

பல ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் தயாரிப்பாளர் கலைஞானம் இன்னமும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறாராம்.

ரஜினியை முதன்முதலாக

கதாநாயகனாக்கி 'பைரவி' படத்தை எடுத்தவர். பல படங்களின் கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர். இவ்வளவு இருந்தும் சொந்த வீடு வாங்க முடியவில்லையாம். காரணம் பணத்தை விட தன்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர் கலைஞானம்.

அதனால்தான் சினிமா உலகில் தனக்கு மற்றவர்கள் மூலம் வர வேண்டிய பணத்தை வற்புறுத்தி வாங்காமல் விட்டு விட்டு, இப்படி வறட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரஜினி அதே மேடையில் தன் அருகே அமர்ந்திருந்த கலைஞானத்தை மெல்லத் திரும்பிப் பார்த்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது பேசிக் கொண்டது இப்போது ரஜினியின் நினைவுக்கு வந்தது.

அதை கலைஞானமே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதோ, கலைஞானம் அவர்களின் வார்த்தைகள்:

“ரஜினி சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில் ஒருநாள். ஏவி.எம். ஸ்டூடியோவில் எதிரும் புதிருமாக சந்தித்துக் கொண்டோம்.

அன்புடன் என்னை நலம் விசாரித்தவர் அடுத்து என்னிடம் கேட்ட கேள்விதான் முக்கியமானது.

"நீங்கள் எப்போதும் சந்தோஷமாக காணப்படுகிறீர்களே,

அது எப்படி?'' என்று கேட்டார்.

அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன்: "ரெயில் பெட்டிகளில் ஒரு வாசகம் எழுதியிருப்பதை நீங்களும் படித்திருப்பீர்கள். `லக்கேஜை எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ, அவ்வளவு சுகமாக இருக்கும் உங்கள் பயணம்'' என்ற அந்த வாசகம் என் விஷயத்திலும் பொருந்தும்.

எல்லாப் பிரச்சினைகளையும் நம் தலைமேல் தூக்கி சுமக்காமல் முடிந்த மட்டும் குறைத்துக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழமுடியும்,'' என்றேன்.

இந்தப் பதிலுக்கு ரஜினி அமைதியாக இருந்தார். சிந்திக்கிறார் என்பதை உணர முடிந்தது.”

ஆம். அப்போது மட்டும் அல்ல. இப்போதும் இந்த விழா மேடையிலும் ரஜினி சிந்தித்தார்.

ஏனெனில் ஏகப்பட்ட லக்கேஜ்களை அன்று முதல் இன்று வரை சுமந்து கொண்டிருப்பவர் ரஜினி.

ஊருக்குத்தான் அவர் சூப்பர் ஸ்டார். உள்ளத்துக்குள் ஆயிரம் சொல்ல முடியாத சுமைகள்.

அப்படி ரஜினி தலையில் இருந்த ஏதோ ஒரு சுமைதான் அவர் கண்ணை மறைத்திருக்க வேண்டும். அதனால்தான் கலைஞானத்தின் நிலையை இவ்வளவு காலம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டும்.

ரஜினி இப்போது நிமிர்ந்து அமர்ந்தார். தன் இருக்கையை விட்டு எழுந்தார். அந்த மேடையிலேயே அப்போதே அறிவித்தார், கலைஞானம் அவர்களுக்கு, தானே தன் பணத்திலேயே ஒரு சொந்த வீடு வாங்கி கொடுப்பதாக.

சொன்ன சில நாட்களிலேயே சொன்னபடி சொந்த வீடு வாங்கி கொடுத்து விட்டார் ரஜினிகாந்த்.

சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு அது.

இந்த நல்லதொரு விஷயத்தை செய்ததற்காக ரஜினியைப் பாராட்டும் அதே வேளையில் இன்னொருவரையும் கூட இங்கே பாராட்டியாக வேண்டும்.

நடிகர் சிவகுமார்.

அவர் மட்டும் அன்று அந்த விழா மேடையில் உண்மைகளைப் போட்டு உடைத்திருக்காவிட்டால் இந்த நல்ல காரியம் நிச்சயம் நடந்திருக்காது.

கலைஞானம் அவர்களின் வாழ்க்கையும், அந்த மேடையில் அன்று நடைபெற்ற இந்த சம்பவமும் ஒரு உண்மையை நமக்கு சொல்லித் தருகிறது.

சத்தியம், நேர்மை, தர்மம்.

இவை அனைத்தும் என்றென்றும் இந்த பூமியில் நிலைத்திருக்கும்.

நீங்கள் நினைத்திராத நேரத்தில்

நிச்சயம் கை கொடுக்கும்.

"சத்தியத்தை நீங்கள்

காத்திருந்தால்

சத்தியம் உங்களை காத்திருக்கும்."

இது நிச்சய உண்மை.

நிரந்தர உண்மை.

John Durai Asir Chelliah

(on this day)

Wednesday, May 20, 2026

நான் இதய நோயளி!

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். கோயம்புத்தூர் செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக நின்றது. முதல் வகுப்புப் பெட்டியில் தமிழ்ச்செல்வன், கீழ்ப்படுக்கையில் (லோயர் பர்த்) படுப்பதற்குத் தயாராகத் தலைகாணியில் காற்றை ஊதிக் கொண்டிருந்தான்.
 

அப்பொழுதுதான் அவர் அவசர, அவசரமாக உள்ளே வந்தார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். வாட்டசாட்டமான உருவம். முன்னால் வழுக்கைத் தலை. உயர்ரக மூக்குக் கண்ணாடி. இடுப்பில் தூய வெள்ளைக் கதர் வேட்டி. ஸ்டார்ச் போட்டு இஸ்திரி செய்த கதர்ச்சட்டை. பணக்காரக்களை தெரிந்தது!

“தம்பி, கோயம்புத்தூருக்கா?’ அவர், தமிழ்ச் செல்வனிடம் கேட்டார்.
 
“ஆமாங்க…” அவன் அசுவா ரசியமாகப் பதில் கூறினான். அவனுக்கு வயசானவர்களை அவ்வளவாகப் பிடிக்காது. சளசளவெனப் பேசுபவர்கள் என ஓர் அருவருப்பு!


“தம்பி ஒரு சின்ன உதவி. எனக்கு மேல்படுக்கை (அப்பர் பர்த்) போட்டிருக்காங்க. நான் சர்க்கரை நோயாளி…அடிக்கடி பாத்ரூம் போவேன். நீங்க உங்க கீழ்ப் படுக்கையை எனக்கு மாத்திக் கொடுப்பீங்களா?….’ பெரியவர் கேட்டார்.

“இல்லை சார்… நான் இதய நோயளி… மேல்படுக்கை எனக்குச் சரிப்படாது…’ அப்பட்டமான பொய் ஒன்றைச் சொன்னான், தமிழ்ச்செல்வன்.

சிறிய வசதிக் குறைவைக்கூடப் பொறுத்துக்கொள்ளாதவன், அவன்.
 
“அடடே, அப்படியா? இந்தச் சின்ன வயசிலே உங்களுக்கு இதயக் கோளாறா? மன்னிக்கணும், நீங்க சௌகரியமாப் படுங்க.. நான் மேலேயே படுத்துக்கிறேன்…” என்று கூறியவாறு, பெரியவர் மேல் படுக்கைக்குச் சென்றார்…

அடுத்த நாள்… காலை பத்து மணி… அந்தப் பெரிய தொழிற்சாலையில் முதன்மைப் பொறியாளர் பதவிக்கான நேர்காணலில் தமிழ்ச்செல்வன் தேர்வுபெற்றான். பெரிய சம்பளம்… பங்களா.. கார் இத்தியாதி சலுகைகள்!
 
நிர்வாக இயக்குநர், ஒப்புதல் அளிக்க வேண்டும்!

அழைப்பு வந்தது. உள்ளே சென்றான், தமிழ்ச் செல்வன். நாற்காலியிலிருந்த அவரைப் பார்த்தபொழுது அவனுக்குத் தலை சுற்றியது. இரவு ரயிலில் சந்தித்த பெரியவர்!

“உட்காருங்க‘ என்றார் அவர், ஆங்கிலத்தில்.

தமிழ்ச்செல்வன் நெளிந்தபடி உட்கார்ந்தான்.

“தம்பி, உங்களை மறுபடி சந்திக்கிறேன். கொஞ்சமும் எதிர்பார்க்கலே.. எங்க தேர்வுக் குழுவினர், உங்களைத் தேர்வு செய்திருக்காங்க… பெரிய பொறுப்பு… எந்திரங்கள் பலகோடி மதிப்பு… மூனு ஷிப்ட்… ஆயிரம் பேர் வேலை செய்கிற இடம். பாவம் நீங்க இதய நோயாளி.. வேலை, ஆளைச் சாப்பிட்டுடும்… தம்பி, இலேசா, இலகுவா இருக்கிற வேற வேலை தேடிக்குங்க… இந்த வேலை உங்களுக்கு வேண்டாம்.. உடம்பைப் பாத்துக்குங்க… குட்லக்.’

நிர்வாக இயக்குநர், கை கூப்பி, கைகுலுக்கி விடை கொடுத்தார்.

தமிழ்ச்செல்வனுடைய உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது! தளர்ச்சியுடன் வெளியே நடந்தான்.

Tuesday, May 19, 2026

மறக்க முடியா எழுத்தாளர் திருமதி.ரமணிச்சந்திரன் அவர்கள் !

 

  • முதன் முதலில் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்த போது விரும்பி படித்த நாவல்கள் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் அவர்களின் புதினங்கள்தான்.

  • திருமதி ரமணிச்சந்திரன் அவர்கள் 1938 July 10 திருச்செந்தூரில் பிறந்தார்.
  • ரமணிசந்திரன் முதன்முதலாக 1964 ஆம் ஆண்டில் ராணி இதழில் சிறுகதை எழுதினார். பின்னர் தினத்தந்தி இதழில் நெடுங்கதைகள் எழுதினார்.
  • இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள்’.
  • ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய "வண்ணவிழிப் பார்வையிலே" என்ற நெடுங்கதைக்காக 2003 ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது.
  • அப்பரிசிற்குரிய வெள்ளிப்பட்டயம், 50000 உருபாய்க்கான பொற்கிழி, பொன்னாடை ஆகியவற்றை நீதிபதி கி.கோவிந்தராசன் 2003 செப்டம்பர் 28ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில் வழங்கினார்.
  • திருமதி ரமணிச்சந்திரன் அவர்களின் பால் நிலா நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றதாகும்.
  • இந்த நாவலை நான் பல முறை வாசித்திருக்கிறேன்.
  • ரமணிச்சந்திரன் எழுதிய மயங்குகிறாள் ஒரு மாது, மானே மானே, கண்ணே கண்மணியே,அவரது 100 - வது நாவலான என்ன என்ன ஆசைகளோ என அனைத்தும் அருமையாக இருக்கும்.
  • இவரது நாவல்களின் வழியாகவே நான் முதன் முதலில் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அறிந்தேன்.
  • ஆம் இவரது நாவல்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு இடத்தில் பொன்னியின் செல்வன் நாவல் பற்றி குறிப்பிட்டிருப்பபார்.
  • அதனை படிக்கும் போது அந்த நாவலில் அப்படி என்னதான் இருக்கிறது என அறிய விரும்பியே பொன்னியின் செல்வனை ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கி முதன் முதல் வாசித்தேன்.
  • மறக்க முடியா ஒரு அனுபவம். அதன் பின் இன்று வரை எண்ணிலடங்கா முறை வாசித்து விட்டேன்.
  • இப்படி ஒரு அற்புதமான நாவலை எனக்கு அறிமுகப்படுத்தி சோழ வரலாறு பற்றிய தேடுதலை எனக்குள் விதைத்த திருமதி.ரமணிச்சந்திரன் அவர்களை வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாது.

ஒரு வாசகி ரமணிச்சந்திரன் பற்றி பகிர்ந்தது:

  • மயங்குகிறாள் ஒரு மாது என்ற கதையில், அப்பா சொல்லும் காந்தியக் கொள்கை போலே உலகம் இருக்கும் என எண்ணி இந்தச் சமூகத்தை நம்பும் பெண் கடைசியாக உண்மையை உணர்ந்து உடையும்போது சமூகத்தின் உண்மை முகத்தை கிழித்திருப்பார். ’
  • வீட்டை விட்டு பெண் வெளியேறினாலே அவளுக்கான மரியாதை போனதாகிறது... அதில் குடும்பத்தையும் இந்த சமூகம் சேர்த்தே சிதைக்கிறது’ என்பதை மிகத் தெளிவாக கதைபடுத்தியிருப்பார்.
  • எந்த அளவுகோலில் இந்த சமூகம் அளக்கிறது என்பது இன்று வரையுமே தெரியாத ஒன்று.
  • அவரின் கதைகளில் சாதி இருக்காது... மதம் இருக்காது... அரசியல் கருத்துகளோ காட்சிகளோ இருக்காது. காதலும் காதல் சார்ந்த பிரச்னைகளும் குடும்பங்களில் இன்னும் நிலவும் ஏற்ற இறக்கங்களும் மனித மனத்தின் போக்குகளும் அதற்கான தூண்டுகோல்களும்தாம் இருக்கும்.
  • தனிமனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். ஆனால், அது எப்படி தனிமனிதனைப் பாதிக்கிறது என்பதை எல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகவும் மற்ற இடங்களில் தூவிவிட்டும் சென்றிருப்பார் ரமணிசந்திரன்.
  • எவ்வளவு கோபம் இருந்தாலும் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் கையில் எடுப்பது ரமணிசந்திரன் கதைகளைத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் இங்கு இருக்க மாட்டோம்.
  • கதையோடு பயணித்து கொண்டிருப்போம். சமூகத்தைப் பற்றி, குடும்பச் சூழலில் இருக்கும் சில சிக்கல்களைப் பற்றி எல்லாம் புரிதல் வந்தது என்றால் அதற்கு அவர்தான் காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.
  • நல்ல சமூக சிந்தனையும் நிறைய புத்தகங்கள் வாசிப்பதற்கான ஊக்கத்தையும் அவரிடமிருந்தே பெற்றேன். இப்படி என் வாழ்க்கையில் மாற்றத்துக்கான விதையானது கிழக்கு வெளுத்த போதே விதைக்கப்பட்டு விட்டது.
  • ஆம். மாற்றங்களே மாறாதது!
  • உங்களுக்குள்ளும் திருமதி.ரமணிச்சந்திரன் அவர்களை பற்றிய தேடுதல் இருந்தால் இங்கு பகிருங்களேன்.

Wednesday, May 13, 2026

குழந்தை_இல்லாத_தம்பதிகளுக்கு #மறுபிறவி கிடையாது..

குழந்தை_இல்லாத_தம்பதிகளுக்கு #மறுபிறவி கிடையாது..

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

இதை,

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்

கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

மனிதர் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு ஜீவராசியாக பிறக்கின்றனர். ஒருவர் செய்யும் பாவ புண்ணிய அடிப்படையில் ஒவ்வொரு பிறப்பிலும், மரம், செடி, விலங்கு, பறவை என இறைவனால் படைக்கப்படுகின்றனர்.

ஒருவருக்கு குழந்தைகளை இல்லை என்றால் அவர்களுக்கு கர்மபலன் எல்லாம் முடிந்து அவர்கள் பகவானின் ஆசாரியரின் திருவடிகளை அந்த பிறவியுடன் அடைந்துய்வர் மறுபிறவி இல்லை என்பதே அர்த்தம்

பெண்பிள்ளை மட்டும் பிறந்தால் அந்த பெண்பிள்ளையின் மகன் (தன் தகப்பனாருக்கு பின்) செய்யும் தர்பணத்துடன் அந்த கர்மாவும் முடிந்து அவர்கள் பகவானின் திருவடிகளை (அந்த குழந்தையின் காலத்துக்கு பின்) அல்லது ஆசாரியன் திருவடிகளை அடைந்து உய்வர்கள்......

திருமணம் ஆகி இத்தனை வருடமாகியும் குழந்தை இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.....

Sunday, May 3, 2026

படையப்பா படத்தை மறுத்த மீனா!

தேடி வந்த வாய்ப்பை மறுத்த மீனா.! சௌந்தர்யாவுக்கு அடித்த ஜாக்பாட்.! ரூ.100 கோடி வசூலித்த அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா ஒரு பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் அந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்தது. அந்த படம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனா மறுத்த பட வாய்ப்பு

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின்களாக இருந்தவர்கள் மீனா மற்றும் சௌந்தர்யா. இருவரும் ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்து கலக்கினார்கள். ஆனால், மீனா வேண்டாம் என்று சொன்ன ஒரு பட வாய்ப்பு, சௌந்தர்யாவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா? அந்த சுவாரஸ்ய பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

முன்னணி நடிகைகளாக விளங்கிய மீனா, சௌந்தர்யா

மீனா, சௌந்தர்யா இருவரும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஸ்டார் நடிகர்களுடன் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா முதல், தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல ஜாம்பவான்களுடன் இருவரும் திரையைப் பகிர்ந்து கொண்டனர்.

சௌந்தர்யா குறித்து மனம் திறந்த மீனா

சௌந்தர்யா இளம் வயதிலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், மீனா இப்போதும் 'த்ரிஷ்யம்' போன்ற படங்களில் கதாநாயகியாகவே நடிக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், சௌந்தர்யா குறித்த ஒரு ஷாக்கிங் தகவலை மீனா பகிர்ந்துகொண்டார்.

படையப்பா படத்தை மறுத்த மீனா

சௌந்தர்யாவின் கரியரில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று, ரஜினிகாந்துடன் நடித்த 'படையப்பா'. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யாவும், நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்தனர். இந்த அப்பாவி பெண் வேடத்திற்கு முதலில் மீனாவைத்தான் படக்குழு அணுகியது.

படையப்பா கதையை மீனாவின் அம்மா நிராகரித்தார்

ஆனால், 'இந்த கேரக்டர் உனக்கு செட் ஆகாது' என்று மீனாவின் அம்மா இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். இதற்கு முன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் 'முத்து' படத்தில் மீனா நடித்திருந்தார். அதே இயக்குநர் என்பதால், 'படையப்பா'விலும் மீனாவையே நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அம்மா மறுத்ததால் அந்த அதிர்ஷ்டம் சௌந்தர்யாவுக்குச் சென்றது.

படையப்பாவால் உயர்ந்த சௌந்தர்யாவின் இமேஜ்

இந்தப் படம் சௌந்தர்யாவின் இமேஜை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது. ஒருவேளை மீனா இந்த படத்தில் நடித்திருந்தால் சௌந்தர்யாவிற்கு ஒரு சிறந்த படம் கைநழுவி போயிருக்கக்கூடும். சௌந்தர்யாவின் திரை வாழ்வில் ஒரு முக்கிய படத்தை இழந்திருப்பார். சௌந்தர்யா ஏற்கனவே ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்திருந்தாலும், படையப்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றி அவருக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்தது. ரஜினி-சௌந்தர்யா ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நீலாம்பரி கதாபாத்திரம்

இதேபோல், வில்லி கதாபாத்திரமான 'நீலாம்பரி'யாக நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராய், சிம்ரன், நக்மா போன்ற முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்குச் சென்றது. அது அவரது திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது.

படையப்பா செய்த வசூல்

1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா சுமார் ரூ.70 கோடி அளவில் வசூலை குவித்தது. (இன்றைய பணமதிப்பின்படி இது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒரு பிரம்மாண்ட வெற்றியாகக் கருதப்படுகிறது). தமிழ்நாட்டில் ரூ.30 கோடியும், வெளிநாடுகளில் ரூ.20 கோடியும், தெலுங்கில் சுமார் ரூ.15 கோடி வசூலையும் பெற்று சாதனை படைத்திருந்தது. 2025 ஆம் ஆண்டு இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது முதல் நாள் ரூ.6 கோடி வசூலையும், பின்னர் மொத்தமாக ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருவரின் வாழ்விலும் நிகழ்ந்த சோகம்

சௌந்தர்யா அரசியலுக்கு வந்த சில நாட்களிலேயே விபத்தில் இறந்தார். மீனா தன் கணவர் வித்யாசாகரை 2022-ல் கொரோனா தொற்றால் இழந்தார். அதன்பின், தனுஷுடன் இரண்டாவது திருமணம் என வதந்திகள் பரவின. 'இந்த மாதிரி செய்திகளை எங்கிருந்துதான் கிளப்புறாங்களோ' என மீனா வருத்தத்துடன் விளக்கம் அளித்தார்.

தேன் மொழி

Saturday, May 2, 2026

மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக !

 

மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்

மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியே போயிருந்த நிலையில் அங்கு இருந்த பென்ஸ் காரை பார்த்து வியந்து போய் அதை தொட்டதற்காக அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த காரின் உரிமையாளர் அவரை அடித்துவிட்டார் என்ற ரகசியத்தை பல வருடங்கள் கழித்து பிரபல நடிகரான ஆர் ஜே பாலாஜி கூறி இருக்கிறார்.

சாதாரண மக்களாக இருந்தாலும் சரி சின்ன சின்ன நடிகர்களாக இருந்தாலும் சரி கார் என்பது எல்லோருக்கும் கனவுதான். சிலருக்கு ஆடம்பரமாகவும் பலருக்கு அது அடிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தங்களுக்கு மனதிற்கு பிடித்த காரை வாங்க முடியவில்லை என்றாலும் அது தங்கள் கண்முன்னே போகும்போது ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் பலருக்கு ஏற்படத்தான் செய்யும் .

அந்த வகையில் பல நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட தயாரிப்பு நிறுவனம் காரில் தான் போக முடியும். சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்களுக்கு கார் கிடையாது. அதனால் அவர்களுக்கான கார் வாங்குவது ஒரு பெரிய லட்சியமாக வைத்திருக்கின்றனர். அந்த அதுபோல மறைந்த நடிகர் மயில்சாமிக்கும் பெரிய ஆசை இருந்திருக்கிறது. நடிகர் மயில்சாமி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்திருக்கிறார்.

அதுபோல சின்ன சின்ன நடிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். அதனால் தான் அவருடைய மறைவுக்கு பலரும் அவர் செய்த உதவிகளை சொல்லி ஃபீல் பண்ணி இருந்தனர். இப்போ வரைக்கும் அவருடைய மறைவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு புயல் பாதிப்பு ஏற்பட்ட போது கூட மயில்சாமி வாழ்ந்த பகுதி மக்கள் எல்லாரும் மயில்சாமி இருந்திருந்தால் எங்களுடைய நிலைமை நல்லா இருந்திருக்கும்.

எங்களுக்கு சில உதவிகளை அவர் செய்திருப்பார் என்று ஃபீல் பண்ணி பேசி இருந்தனர். அந்த அளவிற்கு மயில்சாமி பலருக்கும் உதவி செய்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலும் சில அவமானங்கள் ஏற்பட்டிருக்கிறது.. ஒருமுறை மயில்சாமி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்திருக்கிறார்.

அப்போது அந்த காரின் சொந்தக்காரருக்கும் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. காருக்கு சொந்தக்காரர் மயில்சாமியை எப்படி என் காரின் மீது கை வைக்கலாம் என்று கேட்டு பிரச்சனை செய்ய அதற்கு ஆரம்பத்தில் மயில்சாமி பொறுமையாக பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது காரின் சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம். ஆனால் அதே மயில்சாமிக்கு அவருடைய ஐம்பதாவது பிறந்த நாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்கள் என்று ஆர்.ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் நிகழ்ச்சியோடு பேசி இருக்கிறார். அந்த மாதிரி தான் யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் என்று சொல்ல முடியாது .

முகநூல் பதிவு- பிரசாந்த் 🥀

ஆறிலிருந்து அறுவது வரை....1979

 

ஆறிலிருந்து அறுவது வரை....1979 !

பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த படம் இது.

பஞ்சு அருணாசலம் தயாரிப்பாளர். படத்தின் கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம்தான் எழுதியிருந்தார்.

🌹வீட்டுக்கு வரும் வழியில்

ஒரு பெண்ணைக் காப்பாற்றுவார். ‘புள்ளகுட்டிங்களோட நீங்க நல்லாருக்கணும்’ என்று ரஜினியை வாழ்த்துவார் அந்தப் பெண்.

வீட்டுக்கு வந்தால், மனைவி படாபட் இறந்துவிடுவார். ’அந்த அம்மா,புள்ளகுட்டிங்களோ நல்லா இருன்னுதான் சொன்னா.

பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா இருன்னு சொல்லலையே...’ என்று அழுவார் ரஜினி. ஒரு சாதாரண வார்த்தை, மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்திவிடும் நமக்கு!

ரஜினி, ஜெயா, சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி, சோ, சுருளிராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள்.

படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் தனி ரகம்.

*‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ என்ற பாடல் இன்றைய இரவுப் பாடல்களின் பட்டியலில் டெளன்லோடு செய்யப்பட்டு, எத்தனையோ பேரின் செல்போனுக்குள் காவியம் படைத்துக் கொண்டிருக்கின்றன.

பஞ்சு அருணாசலம் படம். இசை இளையராஜா என்று சொல்லவேண்டுமா என்ன?

ஸ்ரீநிவாஸ்..

மலேசியா வாசுதேவன் !


மெலடி ( மலேசியா ) வாசுதேவன்

எஸ்பிபியின் நிழலில் மனோவும், யேசுதாஸின் நிழலில் ஜெயச்சந்திரனும் மறைக்கப்பட்டிருந்தாலும், யாராலும் மறைக்க முடியாத தனித்துவமான குரல் மலேசியா வாசுதேவனுடையது, ஆனால் அந்தந்த நேரத்தில் அவர் புகழுக்கேற்றபடி கொண்டாடப்பட்டாரா என்றால் இல்லை.

இன்று 2கே கிட்ஸ் கொண்டாடிய அளவுக்கு 'பேர் வச்சாலும்…' பாடலை வேறு யாரும் கொண்டாடிவிடவில்லை. ஆனாலும் அவருடைய குரலின் அத்தனை கோணங்களையும் தமிழ் மக்கள் கண்டனர் என்றுதான் கூறவேண்டும்,

அவர் கவனிக்கப்படாமல் போனவர் அல்ல! அவருடைய சிறப்பம்சமே அவர் குரலில் ததும்பும் கொண்டாட்ட தொனி தான். அதற்காகவே எண்ணற்ற குத்துப்பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், பக்திப்பாடல்களை பாடவைத்து ரசித்திருக்கிறது தமிழ் சமூகம்.

"நெஞ்சுக்குள் அச்சம் இல்லை

யாருக்கும் பயமும் இல்லை

வாராதோ வெற்றி நிச்சயம்…"

என அவர் பாட அதை கேட்கும்போதே நெஞ்சுக்குள் வீரம் பொங்கி, முரட்டுக்காளை ரஜினியாக மாறும் வல்லமை கொண்டது அவர் குரல்.

இது மட்டுமல்ல, ஆசை நூறுவகை, சிங்கமொன்று புறப்பட்டதே போன்ற பல மாஸ் பாடல்கள் ரஜினி திரைப்படங்களில் பாடியுள்ளார். இப்படி தமிழில் கிட்டத்தட்ட 8,000 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது குரல் ஒலிக்காத விசேஷங்கள் இன்றும் இல்லை அன்றும் இல்லை.

ஏன் இவர் குரல் அவ்வளவு தனித்துவம் உடையது என்றால், யேசுதாஸ், எஸ்பிபி போன்ற வளைவான குரல் அல்ல இவருடையது. நாமோ, நம் தந்தையோ பாடினால் யதார்த்தமாக வரும் குரல் என்பதாலேயே இதயத்துடன் அவ்வளவு நெருங்கி வருகிறார்.

இது இளையராஜாவுக்கும் தெரியும். 'பூவே இளைய பூவே' பாடலின் இன்டர்லூடில் இளையராஜா தனது ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருப்பார், சரணம் வந்ததும் எல்லாவற்றையும் முடிப்பார், வாசுதேவனின் குரல் மட்டும் மேலோங்கும்.

'குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

விழியிரண்டு கடலானதே

எனது மனம் படகானதே…'

என அந்த வரிகளில் அவர் குரலுக்காகவே உருகியவர்கள் பலர்.

மலேசியா வாசுதேவன் என்றாலே, மாரியம்மா மாரியம்மா, தண்ணி கருத்துருச்சு, காதல் வைபோகமே, ஊரு விட்டு ஊரு வந்து போன்ற குத்துப்பாடல்கள், பக்திப் பாடல்கள்

பலருக்கு நியாபகம் வரலாம். ஆனால் பல உள்ளம் நெகிழவைக்கும் குரலை பல மெலடி பாடல்களுக்கும், சோகப்பாடல்களுக்கும் கொடுத்தவர்தான் வாசுதேவன்.

முதல் மரியாதை திரைப்படத்தில், 'பூங்காற்று திரும்புமா', 'வெட்டிவேரு வாசம்', தர்ம யுத்தம் திரைப்படத்தில் 'ஒரு தங்க ரத்தத்தில்', விடியும் வரை காத்திரு திரைப்படத்தின், 'நீங்காத எண்ணம் ஒன்று', தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின், 'தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி', நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தின், 'ஆயிரம் மலர்களே', கிழக்கே போகும் ரயிலின் 'கோவில் மணி ஓசை தன்னை' போன்ற பல உருகவைக்கும் பாடல்களை பாடியுள்ளார். அதில் அவர் குரலே ஓங்கி நிற்கும் என்பதுதான் தனிச்சிறப்பு.

1985இல் சின்ன வீடு என்ற பாக்யராஜ் திரைப்படத்திற்கும், முதல் மரியாதை திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே சிச்சுவேஷன், ஆனால் முற்றிலும் வேறு வேறு ஸீன். பாக்யராஜ் தன் மனைவியை விட்டு வேறு பெண் மீது மையல் கொள்வதையும், சிவாஜி பாடும் பாட்டிற்கு ராதா எசப்பாட்டு பாடும் முதல் பாடலும்தான் அது. இரண்டிற்கும் இசை அளவில் அவரால் முடிந்த வேறுபாட்டை இளையராஜா கொடுத்தார் ஆனால் இரண்டு பாடலுக்கும் அடிநாதம் 'என்டர் இன்டு தி நியூ லைஃப்' எனப்படும் ஒரு 200 வருட பழைய சிம்ஃபனி தான். இருவருமே புதிய ஒரு வாழ்க்கைக்குள் செல்வதால், 'ஏ குருவி, சிட்டுக்குருவி' பாடலிலும், 'சிட்டுக்குருவி வெட்கப்படுது' பாடலிலும் வேண்டுமென்றே பயன்படுத்தினார் இளையராஜா.

ஆனால் அந்த இரு பாடல்களும் ஒன்றென தெரியாததற்கு பெரும் காரணம் வாசுதேவனின் தனித்துவமான குரல், மற்றொன்றை எஸ்பிபி பாடினார். இந்த வேறுபாட்டை கொடுக்க அப்போது இளையராஜாவுக்கு இருந்த ஒரே துருப்புச்சீட்டு வாசுதேவன் தான்.

அந்த வேறுபாட்டை பெரிதும் ரசித்தவரும் கூட என்று சொல்லலாம். 'ஏ ராசாத்தி', என்ற பாடல் அந்த காலத்தில் கிட்டத்தட்ட ஒரு 'ஆக்கப்பெல்லா' தான். அவ்வளவு வித்யாசமாக வாசுதேவன் குரலை பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. வாசுதேவன் அவரால் முடிந்த அளவிற்கு எல்லா கோணங்களையும் அந்த பாடலில் கொடுத்திருப்பார். அதே போல அவரது குரலின் முற்றிலும் வேறு கோணத்தை எடுத்தது 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல்'. கிட்டத்தட்ட மிமிக்ரி செய்து பாடியது போலவே இருக்கும், அந்த பாடலில் சப்பாணி கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தமான குரலை வேறு யாராலும் தந்திருக்க முடியாது. முக்கியமாக இரண்டு ஹீரோக்கள் இணைந்து பாடும் பாடல்களுக்கு பெரிதும் இளையராஜா விரும்புவது வாசுதேவனை தான்.என்னம்மா கண்ணு சவுக்யமா பாடலாகட்டும், தென்மதுரை வைகை நதி பாடலாகட்டும். ரஜினிக்கு எஸ்பிபி வாய்ஸ் என்றால், அடுத்து இருப்பவருக்கு மலேசியா வாசுதேவன் என்பது இளையராஜா வைத்திருந்த எழுதப்படாத விதி.

படித்ததில் பிடித்தது - - - - - - -

Friday, May 1, 2026

இயக்குனர் மகேந்திரன்!


இயக்குனர் மகேந்திரன் எப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளைத் தந்தவர் என்பது நமக்குத் தெரியும். வசனகர்த்தாவாக இருந்த காலகட்டத்தில பக்கம் பக்கமாக வசனம் எழுதிய அவர் ஒரு இயக்குனர் ஆனதற்குப் பின்னால திரைமொழி என்பது வசனம் அல்ல என்பதை சரியாகப் புரிந்து கொண்டார். அதே நேரம் மிகச்சரியாக தன்னோட படங்கள்ல திரைமொழியைக் கையாண்டார்.

அப்படி அவர் உருவாக்கிய படங்கள் தான் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், கூத்தாடும் கூத்துக்கள் போன்ற படங்கள். ஒரு படைப்பாளி என்ற நிலையைத் தாண்டி படைப்புகளை விமர்சனம் செய்யும் விமர்சகராகவும் ஒரு காலகட்டத்துல மகேந்திரன் இருந்தார்.

அப்படி விமர்சனக் கலையிலே அவர் மிகச்சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் இயக்குனர் பிஎன்.ரெட்டி. அவரிடம் தான் அதற்குரிய பாடங்களைப் படித்தார் மகேந்திரன். இவரது பேராசிரியரான ரங்கன் பிஎன்.ரெட்டியின் மிகப்பெரிய விசிறி. அதன் காரணமாகவே அவருடன் நல்ல ஒரு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலே மகேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் பிஎன்.ரெட்டியைப் பார்க்கும்படிச் சொன்னார் ரங்கன்.

அந்தக் கடிதத்துடன் பிஎன்.ரெட்டியைப் போய் பார்த்தபோது, வயதில் இளையவராக இருந்தாலும் அப்படி ஒரு மரியாதையைக் கொடுத்து உபசரித்ததோடு மட்டும் இல்லாமல், தன்னோட தயாரிப்புகளில் உருவான பல படங்களை எனக்காகப் போட்டுக் காட்டச் சொன்னார் பிஎன்.ரெட்டி. அந்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. படங்களைப் போட்டுக் காமிச்ச உடனே நான் அவரது அலுவலகத்துக்குப் போவேன். அங்கு 12 மணி வரை அந்தப் படத்தைப் பற்றிப் பேசுவேன். நான் பார்த்த படங்களில் பல காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டது?

எதனால் அந்தக் காட்சி அமைக்கப்பட்டது என்பது பற்றியும் பல விளக்கங்களை பிஎன்.ரெட்டி என்னிடம் சொல்லி இருக்கிறார். நான் திரையுலகில் நன்றாக செயல்படவும், விமர்சனங்களை ஓரளவுக்கு நன்றாக எழுதவும் காரணமாக அமைந்ததுன்னா அன்றைக்கு பிஎன்.ரெட்டி எனக்கு எடுத்த பாடங்கள் தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மகேந்திரன். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Thursday, April 30, 2026

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

 

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

பதினாறு வயதினிலேயே சூட்டிங் ...

அப்போது, 4 வகையான உணவு வருமாம்.

முதல் தரம் கமலுக்கானது,

இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானது,

மூன்றாவது தரம் ஸ்ரீதேவி உடையது.

மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு. தரம் என்பது, உணவு வகைகளை பொருத்தது.

ரஜினி தினமும் சூட்டிங் வருவாராம்; தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு காட்சியே தரவில்லை.

உண்மையில் அப்போது ரஜினியின் நிலையும் அது தான்

கமல், ஸ்ரீதேவிக்கு அப்போதெல்லாம்

இலட்சங்களில் சம்பளம்,

ரஜினிக்கு அந்த படத்தில் மூன்று ஆயிரம் சம்பளம்

மற்றவர்களை போல அவரை அழைத்து வர அங்கு காரெல்லாம் வராது. அவராக எதையாவது பிடித்து சூட்டிங் ஸ்பாட் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் கடந்து மதியம் ஒருநாள் உணவுக்காக புரொடக்ஷனில் அமர்ந்துள்ளார்.

அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க...’ என்று கேட்டுள்ளார்.

இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது...’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்திருக்கிறார்.

காலங்கள் கடந்தது. ரஜினி...

பெரிய ஹீரோ என்பதை கடந்து,

சூப்பர் ஸ்டாராக நிற்கிறார். பிறகு ஒருபடத்தில் சூட்டிங்கில் 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அதே பரிமாறிய நபர், முதல் தர உணவை ரஜினிக்கு பரிமாறியுள்ளார். அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா...’ என்று கேட்டுள்ளார். அந்த நபரோ... ‛இதோ... இப்போ கொண்டு வர்றேன்...’ என ஓட முயற்சித்துள்ளார்.

உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா...’ என கிண்டலடிக்க, எதிரில் இருந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை;

தன்னை ஒதுக்கப்பட்ட இடத்தில் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி யால்

பதிலடி கொடுத்தவர் ரஜினி

இன்றும் ஷுட்டிங் கில் சகமனிதனாக

அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுவது,

எல்லோரும் சாப்பிட்டார்களா என கேட்பார்

என்று அவருடன் பணியாற்றிவர்கள் சொல்ல கேட்டேன்

தான் கடந்த வந்த பாதை எதையும் மறக்காததால் தான் அவர் இன்றைக்கு இவ்வளவு முன்னேறவும் முடிந்தது.

யாரையும் எப்போதும் இவன் இப்படி தான் என்று

கணிக்க கூடாது என்பது நான் வாழ்க்கையில் கற்ற பாடம் என்று சொல்கிறார்.

உண்மை அது தானே!

முகநூல் பதிவு-பிரசாந்த்!

Monday, April 20, 2026

தஞ்சை பெரிய கோயில் !

 

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

படித்ததில் பிடித்தது