Total Pageviews

Tuesday, December 27, 2011

ஏ. ஆர். ரஹ்மான்

இந்தியத் திரையிசை மேதைகளில்
 இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை "சென்னையின் மொஸாட்" என செல்லமாக அழைக்கப்படும்
ஏ. ஆர். ரஹ்மான்




     ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார் 1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000 




2020இற்குள் வறுமையை இந்தியாவிலிருந்து விரட்டும் நோக்குடன் இவரால் "A. R. Rahman Foundation" எனும் சேவை அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. இதில் எவ்வினத்தவர்க்கும் பாரபட்சமில்லாது ஏராளமான உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றது.

இந்த சாதனை மன்னன், வெற்றியின் மற்றொரு பெயரான 'ரஹ்மான்' பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அவர் பெற்ற விருதுகளில் சர்வதேசப் புகழ்வாய்ந்த விருதுகளின் பெயர்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
                                                                             

ரஹ்மான் Oscar விருதுகளுடன்...
ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-

* Grammy விருது- 2 முறை

* MTV Asia விருது- 2 முறை

* MTV வீடியோ இசை விருது- 1 முறை

* Academy விருது- 2 முறை

* BAFTA விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Satellite விருது- 1 முறை

* World Soundtrack விருது- 1 முறை

* தேசிய திரைப்பட விருது- 4 முறை

* Filmfare விருது- 14 முறை

* Filmfare(தெற்கு) விருது- 12 முறை

* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை

* விஜய் விருது- 1 முறை

* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.

இதை எழுதும்போதுதான் இவ்வருடம் ரஹ்மானுக்கு "பத்மபூஷன்" விருது கிடைத்துள்ளதாக அறிந்தேன். இவை தவிர இவர் பெற்ற விருதுகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது Anna, Aligarh மற்றும் Middlesex ஆகிய பல்கலைக் கழகங்கள் இணைந்து ரஹ்மானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கியதாகும்.

எத்தனை புகழ் தன்னைத் தேடி வந்தாலும் அத்தனையையும் இறைவனிடமே அர்ப்பணித்துவிட்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனும் கொள்கையுடன் வாழ்ந்துவரும் இவ் இணையில்லாக் கலைஞன் அண்மையில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரை நானும் நீங்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்தினால் தப்பேதுமில்லையே?

மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம்



கடல்நீரின் மேல்பகுதி​​ நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .


பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள்.​ இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும் இவால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும்.​ இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது.​ மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன.

பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும்​​ மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது.​ இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது.​ மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் ​ அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது.​ ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வரை வளரக் கூடியது.

சுமார் 100கிலோ வரை எடையுடைய இம்மீன்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறதாம்.​ ஒரு மீன் மட்டுமே குறைந்தது 2 லட்சம் மைல்களுக்கு மேல் கடலில் பிரயாணம் செய்வதுடன் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கும் மாறி​​ மாறிச் சென்று கொண்டேயிருக்கும்.

ஒரு மீன் மட்டும் 45லட்சம் முட்டைகள் வரை சங்கிலித் தொடர் போல இடுகிறதாம்.​ இடப்பட்ட முட்டைகள் தட்ப வெட்ப சூழ்நிலைகளைத் தாங்கி அதற்கேற்றவாறு மீன்குஞ்சுகளாக மாறிக் கொள்கின்றன.​ மத்தி​​ வஞ்சிரம்​​ கணவாய் மற்றும் தவளைகள் போன்றவையே இவற்றின் விருப்ப உணவு.​ இந்த மீனும் பெரும்பாலும் மனிதர்கள் சமைத்து சாப்பிடத்தான் பயன்படுகிறது என்றாலும் இவற்றைப் பிடிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடல் விட்டு கடல் மாறிச் சென்று கொண்டே இருப்பதால் இவற்றின் இருப்பிடங்களைச் சரியாக அறிந்து கொண்டு அவற்றைப் பிடிக்க முடிவதில்லை.​ கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் ராக்கெட் வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 109 கி.மீ வேகத்தில் செல்கிறது . (
68 miles per hour or109 km per hour)

இந்த ஃபாஸ்ட் சுவிம்மிங் ஜீவன்.


USED கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!




புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக்கொண்டு பலர் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வழிமுறைகள் குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப் 10 டிப்ஸ்...

பட்ஜெட்&கார் தேர்வு: செகண்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்தபின்,பட்ஜெட்டிற்கும்,குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும்,தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய ரக ஹேட்ச்பேக் கார் போதுமானது.அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு எஸ்யூவி மாடல்கள் பொருத்தமாக இருக்கும்.அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.

மார்க்கெட் நிலவரம்: நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம்.காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

விற்பனையாளர் தேர்வு: பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.எனவே,நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம்.

மாருதி,ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.

பைனான்ஸ்: பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன.காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள்,டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு,அதி்ல் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

டெஸ்ட் டிரைவ்: விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும்.உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால்,கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம்.தவிர,கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியது என்பதும் அறிந்து கொள்வது அவசியம்.

அதன் மைலேஜ்,காரின் முந்தைய உரிமையாளர்கள் பற்றிய விபரங்களையும் விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.பளபளப்பாக இருக்கும் கார்களை கண்டு ஏமாந்துவிடாதீர்கள். ஏனேனில்,சில விபத்துக்குள்ளான கார்களை சரிசெய்து,ரீப்பெயிண்டிங் அடித்து பளபளப்பாக விற்பனைக்கு வைத்திருப்பர்.

காரின் ஜாதகம்: காரை தேர்வு செய்தபின்,அதன் பதிவுபுத்தகம் (ஆர்.சி.,புக்),சாலை வரி செலுத்தியதற்கான ரசீது,இன்ஷ்யூரன்ஸ்,ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது.

கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால்,கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி.,புத்தகத்தில் ஹைப்பத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால்,விற்பனையாளரிடம் அதை ஆர்.டி.ஒ.,அலுவலகத்திலிருந்து நீக்கி தர சொல்லுங்கள்.

ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும்,காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.

காரின் வரலாறு : பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில்,திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே,காரின் சர்வீஸ் புத்தகம்,டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து காரின் வரலாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால்,நம்பிக்கையான,நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள்.அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கார் டீல்: காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு,காரை வாங்க முடிவு செயதபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள்.காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால்,உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.

பதிவு மாற்றம்:காரை வாங்கும்போது,அதனுடன் சேர்த்து காரின் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் வாங்கிவிடுங்கள்.மேலும்,பழைய உரிமையாளரிடமிருந்து,உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29,காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். http://www.rediffmail.com/cgi-bin/red.cgi?red=http%3A%2F%2Fwww%2Etn%2Egov%2Ein%2Fsta%2FApplicationForms%2Ehtml&isImage=0&BlockImage=0&rediffng=0 என்ற வெப்சைட் முகவரியிலிருந்து மேற்கண்ட பார்ம்களை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில்கொண்டால் நிச்சயம்,அருமையான செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம்.

Sunday, December 25, 2011

அய்யப்பனின் அறுபடை வீடுகள்




தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல், அய்யப்பனுக்கும் 6 கோவில்கள் உள்ளன. அவற்றை அய்யப்பனின் அறுபடை வீடுகள் என்றே சொல்லலாம்.
 
சபரிமலை
கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.
 
எருமேலி
இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.
 
ஆரியங்காவு
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்.
 
அச்சன்கோவில்
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.
 
பந்தளம்
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
 
குளத்துப்புழா
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை

பணக்காரன் ஆக வேண்டுமா?

 
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித்.
 
பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.
 
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.  -வீப்பர்.
 
நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை.ஆனால் ஒழுக்க முள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.
 
பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். -ல்டேர்.
 
பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.
 
பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.  - ஷோப்பன் ஹொபர்.
 
சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!  - கோல்ட்டஸ்.
 
பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.
 
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.
 
பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.
 
பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.  - தாமஸ் புல்லர்.
 
பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.
 
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.
 
பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை  - ஆஸ்திரேலியாப் பழமொழி

Thursday, December 15, 2011

புதுமொழி

CORPORATE CULTURE AMONGST YOUNGSTER

காலை எழுந்தவுடன் MAIL BOX
வாலைக்  குமரியுடன் GTALK
சாலை முழுவதும் CELL TALK
மாலை முடியும் வரை  CHIT CHAT
மாலை முடிந்ததும் WORK HOUR START
பொய்யுரை எழுத  STATUS REPORTS
மெய்யுரை சொல்ல COMPANY REPORTS
பொய்யை மெய்யாக்க STATUS CALL
மெய்யை உறுதியாக்க CONFERENCE CALL
பொய்யும் மெய்யும் கலந்த LIVE CALL
டாகுமென்ட் எழுத COPY & PASTE
ப்ரோக்ராம் எழுத CUT & PASTE
மறந்ததைப்  படிக்க  E-LEARNING
படிக்காமல் உறங்க AUDIO-LEARNING
படித்ததை நினைவூட்ட GOOGLE SEARCH
கூடிப் பேச CONFERENCE HALL
கடலை போடா COFFEE BREAK
காதல் செய்ய LIVE CHAT
குறட்டை விட TRAINING SESSION
அரட்டை அடிக்க LUNCH BREAK
ஓசியில் திங்க TEAM LUNCH
தின்றதைச் செரிக்க GYM SPORT
ஊரைச் சுற்ற TEAM OUTING
ஆடிப்  பாட TEAM FESTIVAL
ஓடி விளையாட SPORTS MEET
பொழுது போக்க BIRTHDAY PARTY
இதையும் மீறி FRIDAY PUB
அதையும் மீறி WEEKEND PARTY
ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND
 
Posted by  M.Muthusamy

Wednesday, December 14, 2011

கடற்கன்னி

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.
Real Mermaid found in  Lolo   Island  (  Abu Dhabi  )
For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)

For Latest And Cool Stuff Visit (Www..xcitefun.net)



For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)

For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



Sunday, December 11, 2011

இல்லாமல் இல்லை



தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை

தீமை இல்லாமல் நன்மை இல்லை

சுமை இல்லாமல் சுகம் இல்லை

வேதனை இல்லாமல் இன்பம் இல்லை

கண்ணீர் இல்லாமல் வாழ்கை இல்ல

Tuesday, December 6, 2011

உயிரினங்களில் சில வினோதம்



பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள்

தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது

நண்பர்கள்



md;G + ftdpg;G     mk;kh

md;G + gak;        mg;gh

md;G + cjtp       rNfhjhp

md;G + rz;il      rNfhjud;

md;G + tho;f;if     fztd; / kidtp;


md;G + ftdpg;G + gak; +

 cjtp + rz;il + tho;f;if      ez;gh;fs;


Thanks to  Gokila Jeyakumar