Total Pageviews

Friday, November 18, 2011

இலவசங்களுக்கு ஆப்பு

இலவசங்களுக்கு ஆப்பு! பொது நல வழக்கு விசாரணைக்கு வருகிறது

மதுரை : ஏப்ரல் 13 ல் நடைபெற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளான  தி.மு.க., – அ.தி.மு.க. மற்றும் பாஜக கட்சிகள், வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை நீதியின் குரல் அறக்கட்டளை நிர்வாகி எம்.எஸ்.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் வீட்டு உபயோகப் பொருட்களை இலவசமாக தருவதாக அறிவித்தன. தி.மு.க. சார்பில் இலவசமாக கிரைண்டர், மிக்சி, லேப்-டாப்,  போன்றவைகளும் அ.தி.மு.க. சார்பில், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் தருவதாக அறிக்கையில் குறிப்பிட்டன. இந்த இலவசங்களை அக்கட்சிகள் கட்சி நிதியிலிருந்து தரவில்லை மாறாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து தருகின்றன.

ஏற்கனவே தமிழக அரசு, உலக வங்கியிடம், 1 லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இலவசங்களை அறிவிப்பதால், அதிக கடன் வாங்கும் நிலை நேரிடும். அவை வரிப்பணமாக மக்கள் மீது விழும். இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இனி வரும் தேர்தல்களில் இலவச அறிவிப்பு வெளியாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

Wednesday, November 16, 2011

தேர்தல் கூட்டணி

அடிக்கும் கொள்ளையில்,

ஆளுக்கு எவ்வளவு?
கொள்ளையில் மக்களுக்கும்
பங்கு...ஓட்டுக்கு காசு!
யாரும் தடுக்காதீர்கள்
கொள்ளையடித்தப் பணம்
கொடுத்துவிட்டுப் போகட்டும்
மலையளவு அடித்தக் கொள்ளையில்
மடுவளவுதான் தருகிறார்கள்
நெற்றி வியர்வைத் தன்னை
நிலத்தில் சிந்தி சம்பாதிதத்தன்று
குடிமக்களிடமிருந்து அடித்தப் பணம்
குடிமக்களுக்கேப் போகட்டும்
தேர்தல் நிதி என்று நியமனங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் செலவிற்கு என்று இடமாற்றங்களில்
திரட்டியப் பணம் செலவாகட்டும்
தேர்தல் அறிவித்ததும் ஏழைகள் மகிழ்ந்தனர்
ஒரு வாரமாவது பசிப் போக்கலாம் என்று
யார் கொடுத்தாலும் வாங்கட்டும்
யாரும் தடுக்காதீர்கள் தயவுசெய்து
வறுமையில் பலர் வாடுவது உண்மை
வயிற்றுப் பசிப் போக்கட்டும்
வாழ்வாதாரங்களைச் சிதைத்துப் பெற்ற
வளமான செல்வங்களை செலவழிக்கட்டும்
கொடுப்பதை வாங்கிக் கொண்டு
கொடுத்தவர்களுக்குப் போடாதீர்கள்
மனதிற்கு நல்லவர் என்று தெரிந்தால்
மனதார வாக்களியுங்கள்
யாருமே நல்லவர் இல்லை என்றால்
யாருக்கும் இல்லை என்பதைப் பதியுங்கள்

ஒரே ஒரு வேலை கொடு




கணினி இலவசம்

காணி நிலம் இலவசம்

கடன் வட்டி இலவசம்

கரன்சி நோட்டு இலவசம்

இன்னும் எத்தனையோ இலவசம்

உலக வங்கியின் கடன் மட்டும்

8000 கோடி

இலவசங்களை விற்றால்

அடைக்கலாம் உலக வங்கியின் கடன்

அடைத்து

நாம் இருக்கலாம் உலக வங்கியாக

ஏன் யோசிக்க மறுக்கிறாய் மனிதா

என் நாடு பட்டதாரிக்கு வேலை கிடைத்தால்

எல்லாம் இருக்கும் வீட்டில்

பிறகேதெர்க்கு இலவசம்

வேண்டாம் அந்த துளி விஷம்

ஒரு வேலை கொடு

ஒரே ஒரு வேளை கொடு

உடற்கூறு தத்துவங்கள் 96



1‍‍> உட‌ல் த‌த்துவ‌ம் (இதை நாம் அறிவிய‌லாக‌வும்)
2 > உள்ள‌ (ம‌ன‌து) த‌த்துவ‌ம் (இதை நாம் ஆன்மிக‌மாக‌வும்)

உடற்கூறு தத்துவங்கள் 96
**********************************************
1. பூதம் ————– ——————- 5
2. புலன்கள்———– —————— 5
3. பொறிகள் ———- ————— 5
4. கன்மேந்திரியங்கள் ———–5
5. ஞானேந்திரியங்கள்— ——— 5
6. கரணம் ———– —————- 4
7. அறிவு —————————- 1
8. நாடிகள் ———————— 10
9. வாயுக்கள் ——————— 10
10. ஆசயங்கள்– ——————– 5
11. கோசங்கள்—- —————— 5
12. ஆதாரம் ——- —————– 6
13. தோசம் ——— —————–3
14. மலம் ————- —————-3
15. மண்டலம் ——– —————3
16. ஈடனை ———– —————3
17. குணம் ————— ———— 3
18. வினை ————– ———— 2
19. விகாரம் ———— ———— 8
20. அவஸ்தை ———- ———–5
———————
மொத்தம் 96
———————-



1) ஐம்புதங்கள்
************************
1.நிலம் 2. நீர் 3.தீ 4.காற்று 5.ஆகாயம்
————————————————————————————————–
2) பொறிகள் 5
*******************************
1.மெய் 2.வாய் 3.கண் 4.மூக்கு 5.செவி
—————————————————————————————————-
3)புலன்கள் 5
*****************************
1. பார்த்தல் 2. கேட்டல் 3. சுவைத்தல் 4.நுகர்தல் 5. உணர்தல்
——————————————————————————————————-
4) கன்மேந்திரியங்கள் 5
****************************************
1.வசனம்: இது ஆகாயத்தினிடமிருந்து வசனிக்கும்.
2. தானம்: இது வாயுவினிடமிருந்து இடுதல், ஏற்றல் செய்யும்.
3. கமனம்: இது தேயுவினிடமிருந்து நின்று நடப்பிக்கும்.
4. விசர்கம்:இது அப்புவினிடமிருந்து நின்று மலசலங்களை கழிக்கும்.
5. ஆனந்தம்:இது பிருதிவியினிடமிருந்து நின்று மர்மஸ்தானங்கலில் ஆனந்தத்தை விளைவிக்கும்
——————————————————————————————
5) ஞானேந்திரியங்கள் 5
*************************************
1. சப்தம்: இதை ஆகாயத்தினிடமிருந்தறிவது.
2. ஸ்பரிசம்: இதை வாயுவினிடமிருந்து அறிவது.
3. ரூபம்: இதை தேயுவினிடமிருந்து அறிவது.
4. ரசம்: இதை அப்புவினிடமிருந்து அறிவது.
5.கந்தம்: இதை பிருதிவியினிடமிருந்து அறிவது.
————————————————————————————————-
6) கரணம் 4
**************************
1. மனம்: இது வாயுவின் கூறாக அலைந்து விசையங்களை நினைக்கும்.
2. புத்தி: இது தேயுவின் கூறாக ரூப பேதங்களை தெரிவிக்கும்.
3. அகங்காரம்: இது பிருதிவியின் கூறாக விசையங்களை கொண்டெலுப்பும்.
4. சித்தம்: இது அப்புவின் கூறாக விசையங்களை பற்றசெய்யும்.
————————————————————————————————
7) அறிவு 1
************************
உள்ளம்: இது ஆகாயத்தின் அம்சமகையல் உச்சியில் நின்று சகல விசயங்களையும் நோக்கும். பகுத்தறிவிக்கும்.
—————————————————————————————————
8)நாடிகள் 10
***********************
1. இடகலை: இந்த வத நாடியானது வலது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் மார்க்கமாய் இதயத்திற்கு சென்று, இடப்புறமாய் கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள சந்திர மண்டலத்தை அடைந்து இடது நாசியின் வழியாக சென்று இடக்கரத்தில் பாயும்.



2. பிங்கலை: இந்த பித்த நாடியானது இடது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் வழியாய் இதயத்தின் வலப்புறமாக கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள அக்கினி மண்டலத்தை அடைந்து வலது நாசியின் வழியாக சென்று வலக்கரத்தில் பாயும்.



3. சுழிமுனை: இந்த கப நதியானது இவ்விரண்டிற்கும் இடையே மூலாதாரத்தில் நின்று உச்சிவரை ஓடி சூரிய மண்டலத்தை அடைந்து வலது, இடது நாசித்துவாரங்களுக்கு இடையே இயங்கி நாடு நாடியாய் தையில் முட்டி நிற்பது.



4. சிங்குவை: உள் நாக்கில் நின்று உணவு, நீர் ஆகியவற்றை விழுங்கச் செய்யும்.



5. புருடன்: மூலாதாரத்தில் தொடக்கி வலது கண்ணில் நின்று பார்வையைதரும்.



6.காந்தாரி: மூலாதாரத்தில் தொடக்கி இடது கண்ணில் நின்று பார்வையைதரும்.



7.அத்தி: மூலாதாரத்தில் தொடக்கி வலது காதில் நிற்கும்.



8. அலம்புடை: மூலாதாரத்தில் தொடக்கி இடது காதில் நிற்கும்.



9. சங்கினி: குறியில் நின்று கொடிபோல் சுற்றிக்கொண்டிருக்கும்.



10. குருநாடி: மூலாதாரத்தில் தொடக்கி அபானத்தில் நிற்கும்.
————————————————————————————————–
9) வாயுக்கள் 10
*************************
1) பிராண வாயு: மூலதாரத்தில் தோன்றி மூக்கின் வழியே 12 சென்று மீண்டும் 8 உள்ளே பாய்ந்து 4 அங்குலம் வீணாகும். காற்று வாங்குதலும், விடுதலும் செய்யும். இது தலை, மார்பு, தொண்டை இவற்றில் தங்கும். புரிந்து கொள்ளல் இருதய இயக்கம், உணர்வுகளை தூண்டுதல், மூளை இயக்கம், தும்மல், எப்பம்விடல் ஆகியவற்றை செய்யும். உண்ணும் பல்வேறு உணவுகளை எல்லாம் சீரணிக்கச்செய்யும். நீல நிறமாயிருக்கும். இதற்கு கடவுள் சந்திரன். நாழிகை 1 க்கு 360 சுவாசமாக 1 நாளுக்கு 21600 சுவாசம் உண்டாகும். அவற்றில் 14400 சுவாசம் உள்ளடங்கி 7200 சுவாசம் வெளியேசெல்லும்.இடம்: இருதயம், பித்தத்திற்கு ஆதாரம். வாயுவின் கூறு.



2) அபானவாயு: உடலின் நடுவான ப்க்குவாசயத்தை இருப்பிடமகக்கொண்டு வயிறு முற்றிலும் வாழ்ந்து உண்ட உணவு, நீர்ப்பொருள்களை செரிப்பதற்குரிய அக்கினியை விருத்தி செய்து சரத்தையும், திப்பியையும் வெவ்வேறாக பிரித்து இடுப்பு, தொடை, பிறப்புறுப்புகள், அடிவயறு முதலிய உறுப்புகளை இயங்கச்செய்கிறது. கீழ் நோக்கிச்சென்று மலம், சிறுநீர், விந்து, சூதகம், சிசு முதலியவற்றை வெளிக்கொணரும். இதற்கு கடவுள்: வரதராஜன். வாதத்திற்கு ஆதாரம் . நெருப்பின் கூறு.
3) வியான வாயு: இது தோளிலிருந்து 72000 நாடி நரம்புகளிலும் சென்று உடல் உறுப்புகளை நீட்டல், மடக்கல், நடத்தல், தோலில் நின்று உணர்சியரிதல், கண்சிமிட்டல், விழித்தல், முதலிய தொழில்களை செய்யும். உணவின் சாரத்தை இரத்தத்தில் பரப்பி உடலைக்காக்கும். கடவுள்: யமன். இருப்பிடம்: இருதயம். ஆகயத்தி கூறு.



4) உதான வாயு: இது வயிற்றிலுள்ள சடராக்னியிலிருந்து தோன்றி உணவின் சாரத்தில் சேர்ந்து அதை ஆங்காங்கே நிறுத்தும். மார்புக்கு மேல் மூக்கு வரை மேல்நோக்கிச் சென்று கழுத்து, தொப்புழ், மூக்கு, மூதளியவ்றில் தங்கி பேச்சு, நினைவு உறுப்புகளை இயங்கசெய்கிறது. மனதிடம், உடல்திரம் முதலியவற்றை உண்டாக்குகிறது. நிறம்: மின்னல், கடவுள்: அக்கினிதேவன் மண்ணின் கூறு.



5) சமான வாயு: தொப்புழிலிருந்து கால் வரையிலும் சீரகப்பரவி பிரவாயுக்களை சமனப்படுத்தி நீர், உணவு முதலியவற்றை உடலில் சேர்க்கும். பசயுண்டக்கும். வயிறு, ஈரல் முதலிய உறுப்புகளில் அலைந்து திரியும். நிறம்: புட்பராகம். கடவுள்:சூரியன். கபத்திற்கு ஆதாரம்.



6) நாகன்: கலைகள் அனைத்தையும் கற்குமாறு அறிவை எழுப்பும். பண்களை பாடுவிக்கும். கண்ணிமைத்தல், மயிர் சிலிர்த்தல் முதலிய செயல்களை செய்விக்கும். பொன்னிறம். கடவுள்; அனந்தன்.



7) கூர்மன்: மனதில் தோன்றி கண்ணிலிருந்து இரு விழிகளைப் பார்க்கவும் இமைகளை மூடவும் செய்கிறது. கொட்டாவி விடல், வைமூடல், கண்நீர்விடல் முதலிய செயல்களைச் செய்யும். வெண்மை நிறம். கடவுள்: திருமால்.
கிரிகரன்: நாக்கு, மூக்கு இவற்றில் கழிவையுண்டக்கும். இருமல், தும்மல் வரச்செய்யும். நிறம்: கருமை. கடவுள்: சிவன்.



9)தேவதத்தன்: வட்டவடிவமாய்த் தோன்றி சோம்பளையுண்டக்கும். உடல் முரித்தலைச் செய்யும். தூங்கி எழுந்ததும் களைப்பை உண்டாக்கும். கண்ணை பல இடங்களிலும் உலவச் செய்யும். சண்டையிடல், வதடுதல் செய்யும். நிறம்; படிகம். கடவுள்: தேவேந்திரன்.



10) தனஞ்செய்யன்: வார்த்தைகளை நாவிலிருந்து எழுப்புதல் மூக்கை தடித்து வீங்கச்செய்தல், காதில் கடல்போல் இரைச்சலை உண்டாக்குதல் செய்யும். உடலில் இருந்து உயிர் நீங்கியபின் அனைத்து வாயுக்களையும் வெளிப்படுத்தி மூன்றாம் நாள் தலை வெடித்து பின் வெளியேறும். கடவுள்: தன்வந்திரி நிறம்: நீலம்.
—————————————————————————————————



10) ஆசயங்கள் 5
***********************************
1.அமராசயம்: (இரைப்பை) உண்ட உணவு செரிக்குமிடம்.
2. பகிராசயம்: (சிறுகுடல்) உணவின் சாரம் பிரியுமிடம்.
3. சலாசயம்: (நீர்ப்பை) நீர் பிரியுமிடம்.
4. மலாசயம்: (மலக்குடல்) மலம் பிரியுமிடம்.
5. சுக்கிலாசயம்:(சுக்கிலப்பை) சுக்கிலம் பிரியுமிடம்.
———————————————————————————–
11. கோசங்கள் 5
*************************************
1. அன்னமய கோசம்: தூல சரிரத்தை உடையது.
2. பிராணமயகோசம்: பிராண வாயுவும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.
3.மனோமய கோசம்: மனதும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.
4. விஞ்ஞானமய கோசம்: புத்தியும் பொறிகளும் சேர்ந்தது.
5. ஆனந்தமய கோசம்: காரண உடலுக்கு ஆதாரமானது.
———————————————————————————–
12) ஆதாரம் 6
*****************************
1. மூலாதாரம்: இது காலெலும்பு இரண்டும் கதிரெலும்பு இரண்டும் கூடிய இடம், குய்யத்திற்கும், குதத்திற்கும் இடையே உள்ளது. குண்டலி வட்டமாய் அதன் நடுவே நாலிதழ்களை உடைய வட்டமான கடம்பம் பூவைப் போல இருக்கும். அந்த புஷ்பத்தின் நடுவில் ஓங்கார எழுத்தில் விநாயகர் தேவி வல்லபை தோன்றுவர்.
2.சுவாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு 2 விரல்கடை மேலுள்ளது. நாற்கொனமும் அதன் நடுவே 6 இதழ்களுடைய புஷ்பமும் நடுவில் லிங்க பீடமும் நகார எழுத்தும் நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரமன் தேவி சரஸ்வதி தோன்றுவர்.
3. மணிபூரகம்: சுவாதிஷ்டானத்திற்கு 8 விரற்கடை மேல் கோழிமுட்டை வடிவில் 1008 நரம்புகள் சூழ இருக்கும். பிறை வடிவம் அதன் நடுவே 10 இதழ்களுடைய புஷ்பமும், அதன் நடுவே மகார எழுத்தும் அதன் நடுவில் மகாவிஷ்ணு தேவி மகாலட்சுமி அமர்ந்திருப்பர்.
4. அனாகதம்: மணிபூரகத்திற்கு 10 விரற்கடை மேல் முக்கோண வடிவில் 12 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே சிகார எழுத்தும் அதன் நடுவில் ருத்திரனும் தேவி ருத்திரியும் அமர்ந்திருப்பார்.
5.விசுத்தி: அனாகதத்திற்கு 10 விரற்கடை மேல் கண்டஸ்தானத்தில் அறு கோணமாக இருக்கும். அதன் நடுவே 16 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே வகார எழுத்தும் அதன் நடுவில் மகேஷ்வரரும் தேவி ம்கேஷ்வரியும் இருப்பர்.
6. ஆக்கினை: விசுத்திக்கு 12 விரற்கடை மேல் இருக்கும். 3 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே யகார எழுத்தும் அதன் நடுவில் சதாசிவனும் தேவி மனோன்மணியும் இருப்பர்.
————————————————————————–
13) தோஷம் 3
*****************************
1.வாதம்: இது வாயுவினால் உற்பத்தியாகி பிராணவாயு பிரசண்டமாகி அக்கினியும் அப்புவுங்கலந்த போது உண்டாவதாம்.
2. பித்தம்: இது தேய்வோடு வாயு சம்பத்தப்பட்ட ஆதாரத்தை முதற்கொண்டு மிகவும் அசைந்து இதய கமலத்தில் ஊன்றியபோது உண்டாவதாம்.
3. கபம்: இது அப்பு, தேயு, வாயு இம்மூன்றும் உடலில் கலவாமல் கலக்கில் உண்டாவதாம்.
———————————————————————————————-
14) மலம் 3
*************************
1.ஆணவம்: நான் என்ற அறியாமையை பிறப்பித்து தன்னுடைய மனைவி, மக்கள் பெரியதென மயக்கமுற்று அபிமானித்திருக்கும்.
2.காமியம்: இது தனது பார்வையால் கண்டவைகளை எல்லாம் அடைய நினைப்பதால் பாவ, புண்ணியங்களை உண்டாக்கவல்லது.
3.மாயை: இது தனது அல்லாததை எல்லாம் தனதாக பாவித்து பிறர்க்கு இடையூறு விளைவிப்பது.
———————————————————————
15) மண்டலம்: 3
******************************
1. அக்கினி மண்டலம்: இது மூலாதாரத்திற்கு மேலே சுவாதிஷ்டானத்திற்கு கீழே முச்சுடராய் உள்ளது.
2. சூரிய மண்டலம்: மனிப்பூரகத்திற்கும் அனாகதத்திற்கும் நடுவில் வளையமாக உந்திக்கு மேலே உள்ளது.
3. சந்திர மண்டலம்: இது விசுத்திக்கு மேலே ஆக்கினைக்கு கீழே சிரசின் மையத்தில் உள்ளது. இத்தனை அமுதகலை என்பர். இதன் நடுவில் பராசத்தி பிரசன்னமாகும்.
——————————————————————————————–
16) ஈடணைகள் 3
************************************
1. தாரேஷனை: பெண்ணாசை கொள்ளல்.
2. புத்திரேஷனை: புத்திரர் மீது ஆசை கொள்ளல்.
3. அர்த்தேஷனை: பொருளாசை கொள்ளல்.
————————————————————————–
17) குணம் 3
*********************************
1. ராஜஷம்: இக்குணம் தர்மம் பிறர் உயிரை தன்னுயிரைப் போல் பாவித்தல் அகங்காரம் பகைவரை வெல்லல் பல சஸ்த்திரங்களை கற்றல் உன்மியாரிதல் புகழ் வேண்டல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.
2. தாமசம்: இக்குணம் வஞ்சனை வழிகடந்து வாதாடல் சோம்பல் நித்திரை கடுங்கோபம் அதிக உணவு ஆகிய குணங்களை கொண்டிருக்கும்.
3. சாத்வீகம்: இக்குணம் பொய் கொலை களவு கோபம் நன்றிமறத்தல் வாயாடல் பழிகூறல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.
————————————————————————-
18)வினை 2
**************************
1. நல்வினை: புண்ணியம் தர்மம் முதலியவற்றை கொண்டிருக்கும்.
2. தீவினை: பாவம் கொலை களவு முதலியவற்றை கொண்டிருக்கும்.
—————————————————————————————-
19) விகாரம் 8
****************************
1. காமம்: அதிக ஆசை
2. குரோதம்: சண்டை.
3. உலோபம்: ஈயாமை.
4. மதம்: கர்வம், மதியாமை.
5. மோகம்: பிற பெண்களின் மேல் ஆசை.
6. மாச்சரியம்: மனதில் விரோதம் வைத்தல்.
7.இடும்பை: உதாசீனம்.
8. அசூயை: பொறாமை.
—————————————————————————-
20) அவஸ்தை 5
******************************
1. சாக்கிரம்: (நனவுநிலை) இன்ப துன்பங்களை அனுபவித்தல். இடது நெற்றியில் ஒடுங்கும்.
2. சொப்பனம்: (கனவுநிலை) புலனும் பொறியும் இடம் கழுத்தில் நிற்பது.
3. சுழுத்தி: (மயக்கநிலை) அறிந்ததை பிறர்க்கு கூற முடியாத நிலை இருதயத்தில் நிர்ப்பது.
4. துரியம்: (வாசிநிலை) தொப்பூழ் கமலத்தில் அமைவது.
5. துரியாதீதம்: (பற்றற்றநிலை) உணர்வும் உலகப்பர்ரும் அறியாத நிலை.

திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை


கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.


* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது

* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது

* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது

* கோயிலுக்குள் தூங்கக் கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது

* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது

* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது

* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது

* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது

* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது

* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது

* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது

* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.

* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,

* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.

பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்!


பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பலவிளையும். இது கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.


சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.


பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.


பிரதோஷத்தன்று ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை கண்டு வணஙகினால் நன்மை பயக்கும்.

தந்தைப் பெரியார் புரட்சி மொழிகள்

  1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  3. டநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  4.  விதியை நம்பி மதியை இழக்காதே.
  5.  மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  6.  மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  7.  பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  8.  பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  9.  பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  10.  தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  11.  கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  12.  பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  13.  ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  15. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  16. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  17. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  18. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  19. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.