Total Pageviews

Thursday, September 8, 2016

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?

குறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் (GENERAL) : 32

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35

ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37

ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?

பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?

சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்புஆளுமை அதிகாரம்பெருமதிப்பிற்குரிய பணிசமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை மேலும் பல…..

IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?

இல்லை.அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?

முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை.ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர். ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.என்னால் முடியுமா ?

கண்டிப்பாக முடியும். இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.ஆனால் உண்மையான போட்டியாளர்கள் 2000 முதல் 3000 மட்டுமே.உண்மையான போட்டியாளர்கள் என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..

IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?

இல்லை. IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் எவ்வளவு காலம் படிக்க வேண்டும் ?

முறையான வழிகாட்டுதல் இருந்தால் IAS முதல்நிலை தேர்விற்கு 3 மாத காலம் போதுமானது.

IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?

IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.அது ஓர் போட்டித் தேர்வு.ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?

முற்றிலும் தவறான கருத்து.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?

இல்லை.நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்

தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்சரியான திட்டமிடல்திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்மாதிரித் தேர்வுகள் எழுதுதல்சரியான வழிகாட்டல்இறுதியாக முழு நம்பிக்கையோடு இருத்தல்

இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் ஒர் IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I

Wednesday, August 31, 2016

வரலாற்றின் தந்தை?



1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
 

2.. புவியலின் தந்தை?
தாலமி
 

3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
 

4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
 

5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
 

6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
 

7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
 

8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
 

9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
 

10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
 

11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
 

12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
 

13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
 

14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
 

15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
 

16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
 

17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
 

18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
 

19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
 

20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
 

21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
 

22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
 

23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
 

24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
 

25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
 

26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
 

27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
 

28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
 

29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
 

30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
 

31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
 

32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
 

33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
 

34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
 

35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
 

36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
 

36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
 

37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
 

38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
 

39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
 

40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
 

41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
 

42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
 

43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
 

44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
 

45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
 

46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
 

47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
 

48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
 

49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
 

50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
ரிப்பன் பிரபு
 

51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
 

52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
 

53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
 

54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
 

55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
 

56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
 

57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
 

58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
 

59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
 

60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
 

61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
 

62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
 

63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
 

64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
 

65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
 

66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
 

67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
 

68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
 

69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
 

70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்
தந்தை?
அவினாசி மகாலிங்கம்

Thursday, August 25, 2016

கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்

 


கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்
1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
 
2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
 
3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
 
4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
 
6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
 
7. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
 
8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
 
9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
 
10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்றழைக்கிறார்கள்.
 
11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
 
12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
 
13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
 
14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.
 
15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
 
16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
 
17. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.
 
18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
 
19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.
 
20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
 
21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
 
22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
 
23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
 
24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
 
25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.
 
26. ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்
 
27. துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.
 
28. கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.
 
29. உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.
 
30. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால், பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.
 
31. குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாïரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.
 
32. வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.
 
33. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
 
34. மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
 
35. கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
 
36. சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
 
37. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
 
38. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.
 
39. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
 
40. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.
 
41. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூதி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
 
42. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

43. செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

44. கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவள்ளி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப் பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.

45. மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ண ராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்த கண்ணன் கால்நடைகளை காப்பதாக ஐதிகம்.

46. கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராïர் - கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

47. காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்மலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம்.

48. சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் பாண்டு ரங்கன் ஆலயம் உள்ளது. பண்டரிபுரத்தில் உள்ள போலவே கோபுர அமைப்புடன் இந்த ஆலயம் உள்ளது.

49. தென்னாங்கூர், பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் பாண்டுரங்களையும் ருக்மணியையும் அலங்கரிக்கின்றனர்.

50. மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் கம்பிக்குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணுகோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்

Friday, August 19, 2016

வாழ்க்கை சுவையானது.




1. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

2. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

3. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

4. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

5. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

6. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

7.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே.

8. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

9. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

10. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு
ல்லாமே எளிதாகத் தோன்றும்.
 

11. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
 
12. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

13. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Thanks to Neelavathi Neela !

Tuesday, August 16, 2016

காமராஜரும் மாலை நேரக்கல்லூரியும்

 
காமராஜரும் மாலைநேரக்கல்லூரியும்
********
 
ஒருமுறை ஒரு பெண் காமராஜரிடம் வந்து, தான் நல்ல மார்க் வாங்கி இருப்பதாகவும், தான் கேட்ட physics major இல் சீட் கிடைக்க வில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டாளாம்.

காமராஜர் சம்பந்தப் பட்டவர்களை கூப்பிட்டு கேட்க,கல்லூரி முதல்வர் 12 மாணவிகளுக்குத் தான் lab வசதி இருப்பதால், 13 வதாக இன்னொரு பெண்ணைச்சேர்க்க இயலாது என்று சொல்ல,

காமராஜர், "உங்கள் வீட்டில் எத்தனை பேருக்கு சமைக்கிறீர்கள் ?" என்று கேட்டாராம்.

அந்த முதல்வர் "நாலு பேருக்கு " என்று சொல்ல,இன்னும் 4 பேர் வந்தால் என்ன பெரிய பாத்திரங்கள் இருக்கிறதா" என்று கேட்டாராம்.

அதற்கு அந்த முதல்வர், ."இல்லை; ஒரு முறை சாதம் செய்து விட்டு, இரண்டாம் முறையும் செய்வேன்" என்று சொன்னாராம்.
.
அதையே ஏன் கல்லூரியிலும் செய்யக் கூடாது. 3.30 க்கு காலேஜ் முடிந்ததும், இன்னும் 12 பேருக்கு காலேஜ் வைத்து,அதே lab ஐ யூஸ் பண்ணலாமே என்று சொல்ல, அப்படி பிறந்தது தான் மாலை நேரக் கல்லூரி.

Thursday, August 11, 2016

யார் அழகி??*

யார் அழகி??*


ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..




"ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.?"


இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார்..

ஒரு மாணவி "அங்கு வந்திருந்தவர்களில் அவர்தான் அழகாக இருந்தார்" என்கிறாள்..

அவருக்கு பதிலில் திருப்தி இல்லை..

அடுத்த மாணவி "அங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுப் பூர்வமாக சிறப்பான ஒரு பதிலை சொன்னார்"..

அதிலும் அவருக்கு சம்மதமில்லை..

இப்படியே போய்க் கொண்டு இருக்க, அரங்கமே புரிபடாத ஒரு அமைதியில் இருக்கிறது..

ஆசிரியர் உட்பட அத்தனை பேருக்கும் குழப்பமான குழப்பம்..

அந்த சிறுமி எழுகிறாள் "ஏனென்றால் அந்த அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, அதனால்தான்".. என்கிறாள்..

அரங்கமே சிரிப்பால் அதிர்கிறது..

ஆனால் அங்கே ஒரே ஒரு கைதட்டல் ஓசை மட்டும் தனியாக கேட்கிறது..

அது கலாம் அவர்கள்..

" குட்..! இதுதான் உண்மையான பதில்..

அடுத்தவர்கள் யார் நம் அழகை நிர்ணயம் செய்வதற்கு..

அதற்கு முன் நம்மை நாமே அழகு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.?..

கனிவான அன்பும், தளறாத நம்பிக்கையும், உயர்வான எண்ணமும் கொண்ட நாம் எல்லாருமே அழகுதானே..

அந்த நம்பிக்கை தானே அழகு" என்கிறார்..

அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகிறது......


 image not displayed

இந்தியாவில் உள்ள டெகிரி அணை உலகின் 5 - வது உயரமான அணை ஆகும் .




#உலகில்_உள்ள_மிக_உயரமான_அணைகள்:

#உலகின் 5 - வது உயரமான அணை:
இந்தியாவில் உள்ள டெகிரி அணை ஆகும் .
இது உத்ராஞ்சல் மாநிலம் டெகிரி நகரில் அமைந்துள்ளது. கங்கையின் கிளை நதியான பாகீரதி ஆற்றின் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 261 மீட்டர் (855அடி). இந்த அணை உலகின் உயரமான அணைகளில் 5 - வது இடத்தைப் பெற்றுள்ளது.

#உலகின் 4 - வது உயரமான அணை:
இத்தாலியில் உள்ள வாஜோண்ட் அணை உலகின்
4 - வது உயரமான அணையாக இருக்கிறது. இது 262 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற அணைகளைவிட இதற்குரிய சிறப்பு இதன் சுவர்தான். அடித்தளத்தில் 27 மீட்டர் அகலத்திலும், உச்சியில் 3.4 மீட்டராகவும் சுவரின் தடிமன் இருக்கிறது. 1963 - ம் ஆண்டு அணை வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் புவியியல் தன்மை சரிவர சோதிக்காமல் கட்டப்பட்டதால் அணையின் மேற்பகுதியின் ஒருபுரம் உடைப்பு எற்பட்டு பல கிராமங்கள் அடியோடு அழிவுக்கு உள்ளானது. அதன் பிறகு இந்த அணை மிக உறுதியாக எழுப்பப்பட்டது.

#உலகின் 3 - வது உயரமான அணை:
உயரமான அணைகளில் 3 - வது இடத்தில் இன்குரி அணை இருக்கிறது. ஜார்ஜியா நாட்டின் இன்குரி ஆற்றில் இது கட்டப்பட்டு உள்ளது. இது 272 மீட்டர் உயரமுடையது. இந்த அணையில் உள்ள காங்ரீட் ஆர்ச் உலகில் உயரமான ஆர்ச் என்ற சிறப்பைப் பெறுகிறது. இங்கும் நீர்மின் நிலையம் செயல்படுகிறது.

#உலகின் 2வது உயரமான அணை:
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ”கிராண்டி டிக்ஸ்யென்ஸ்”அணை உலகின் 2 வது உயரமான அணை என்ற சிறப்புக்குறியது. காங்ரீட் அதிகமாக பயன்படுத்தப்பட்ட அணையாகவும் இது திகழ்கிறது. இதன் உயரம் 285 மீட்டர். இங்கு நீர்மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு 200 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

#உலகின் உயரமான அணை:
தஜிகிஸ்தானில்தான் உலகிலேயே மிக உயரமான அணை இருக்கிறது. வாக்ஸ் ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. “நூரக் டேம்” என்பது இதன் பெயராகும். இது 1961 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980 - ல் கட்டி முடிக்கப்பட்டது.
314 மீட்டர் உயரமுடைய இந்த அணைதான் இதுவரை உலகின் உயரமான அணையாக இருக்கிறது.

#அறிந்துகொள்வோம்.