Total Pageviews

Tuesday, August 23, 2022

NEW K10 -ALTO CAR 2022 ON ROAD PRICE AT DELHI

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் எந்த வேரியண்டை வாங்கலாம்? எதுல அதிக வசதிகள் கொடுத்திருக்காங்க? 

எஸ்டிடி வேரியண்ட்:  Std(Petrol) (Base Model) Rs.4,36,841/-  Delhi On Road Price

  மாருதி சுஸுகி நிறுவனம் ஆல்டோ கே10 காரின் எஸ்டிடி வேரியண்டில் 13 அங்குல வீல்கள் சென்டர் கேப்புடன் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் உட்பக்கத்தில் பாட்டில் ஹோல்டர்கள், சன் விஷர்கள், கேபின் ஏர் ஃபில்டர், ரிமோட் ஃப்யூவல் லிட் ஓபனர், ரிமோட் பூட் ஓபனர், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக ரியர் சைல்டு லாக், முன் பக்கத்தில் ப்ரீ டென்ஷனுடன் கூடிய சீட் பெல்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர், ட்யூவல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்:  LXI Model - Rs.5,26,070 /-  Delhi On Road Price

மேலே பார்த்த எஸ்டிடி வேரியண்டைக் காட்டிலும் சற்று அதிக அம்சங்கள் கொண்ட தேர்வாக எல்எக்ஸ்ஐ வேரியண்ட் இருக்கின்றது. இந்த தேர்வில் பாடி நிறத்திலான பம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீட்டர் வசதிக் கொண்ட ஏசி, பவர் ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளாக வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் எஸ்டிடி வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களும் எல்எக்ஸ்ஐ வேரியண்டில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விஎக்ஸ்ஐ வேரியண்ட்: VXI Model - Rs.5,44,884/-  Delhi On Road Price
உடல் நிறத்திலான டூர் ஹேண்டில்கள், ரூஃப் அன்டென்னா, முன் பக்கத்தில் பவர் விண்டோக்கள், அக்சஸெரி சாக்கெட், இன்டர்நெல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், 2 டின் ஸ்மார்ட் பிளே ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன், மல்டி இன்ஃபர்மேஷன் திரை, இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் மற்ற கீழ் நிலை வேரியண்டுகளில் இடம் பெறாத அம்சங்களாக விஎக்ஸ்ஐ வேரியண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டூர் லாக், இம்பேக்ட் சென்சிங் டூர் அன்லாக், எஞ்ஜின் இம்மொபிலைசர், சென்ட்ரல் டூர் லாக்கிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

விஎக்ஸ்ஐ பிளஸ்: VXI PLUS Model  Rs.5,81,435 Delhi On Road Price
மேலே பார்த்த ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்டுகளைக் காட்டிலும் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்விலேயே மிக அதிக வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மேலே பார்த்த அனைத்து வேரியண்டுகளிலும் இடம் பெற்றிருக்கும் அம்சங்களுடன் சேர்த்து இன்னும் பல புதிய மற்றும் கூடுதல் அம்சங்கள் விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்வில் வழங்கப்பட்டிருக்கின்றது.

கூடுதல் அம்சங்களாக சில்வர் அக்செண்டுகள் காரின் உட்பகுதி டூர் ஹேண்டில், சென்டர் கார்னிஷ், சைடு லூவர்கள் மற்றும் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ரிமோட் சாவி, 17.78 அங்குல ஸ்மார்ட் பிளே திரை (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்டது), மல்டி ஃபங்க்சன்கள் கொம்ட ஸ்டியரிங் வீல், ரியர் பகுதியில் பார்சல் டிரே, 4 ஸ்பீக்கர்கள் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சிறப்பு வசதிகளிலும், அலங்கார அம்சத்திலும் மாறுபட்டுக் காணப்படும் இந்த வேரியண்டுகள் எஞ்ஜின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், அதிகபட்சமாக 24.39 கிமீ தொடங்கி 24.90 கிமீ வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அவை மைலேஜ் தரும்.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2022/2022-maruti-alto-k10-hatchback-variant-wise-features-details/articlecontent-pf302593-032978.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider

 

Friday, April 2, 2021

மக்கள் மனதில் மன்னனாக வாழும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

 


ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்திருப்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களுக்கும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டாராக 20 வருடங்களுக்கு மேலாக திகழும் இந்திய சினிமாவின் தங்க மகுடத்தில் வைரமாக மின்னும்.

ரஜினிகாந்த், 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மன்னன், 

தாதாசாகேப் பால்கே விருந்து,

ஈடுஇணையற்ற சூப்பர் ஸ்டாருக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களுக்கும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டாராக 20 வருடங்களுக்கு மேலாக திகழும் இந்திய சினிமாவின் தங்க மகுடத்தில் வைரமாக மின்னும். இந்த விருது இந்திய மக்களுக்கான விருது. ஆம், எத்தனையோ சகாப்த நடிகர்கள் பிராந்தியத்தில் தோன்றி நடித்தாலும் அவர்கள் இந்தியாவைத் தாண்டியது இல்லை.


மலையாள நடிகர்கள் பிரேம்நசீர், மம்முட்டி, மோகன்லால் கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் சிரஞ்சீவி போன்ற பிராந்திய நடிகர்களால் தங்களது எல்லைகளைத் தாண்டிய வெற்றியை ஓரிரு படங்களைத் தவிர பெறமுடியவில்லை. அதைத் தொடரவும் முடியவில்லை. அந்த அளவுக்கு இந்தி சினிமாவின் தாக்கம் தொண்ணூறுகள் வரை இருந்தது. 1989-ல் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ராஜாத்திராஜா ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிரவைத்தது. அன்று தொடங்கிய ரஜினி ராஜாங்கம் தளபதியில் தனக்கு இணை எவருமில்லை என்கிற உச்சத்திற்குப் போனது. பாட்ஷா பாலிவுட் நடிகர்களையும் பதற வைத்தது என்றால் முத்து உலகையே மிரள வைத்தது.

மக்கள் மனம் கவர்ந்த மன்னனுக்கு மரியாதை

1975ல் திரைத் துறைக்குள் நுழைந்தவர் 1978ல் மக்கள் மனதை சிறைபிடித்தார். இன்றுவரை யாராலும் வீழ்த்த முடியாத, விழ்த்த நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்திலேயே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த் என்னும் சூப்பர்ஸ்டார் ஆவார். ஆம், ரஜினிகாந்த் என்பது மட்டுமல்ல சூப்பர்ஸ்டார் என்பதும் அவரது மற்றொரு பெயர்தான். பதவியும் பட்டமும் ஒருசேர பொருந்தியது இவருக்கு மட்டுமே. உலகில் எந்த நடிகரும் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் உச்சத்தில் இருந்ததே இல்லை என்பதே வரலாறு மட்டுமல்ல, உண்மையும்கூட. ஆனால், 40 வருடங்களாக பொய்ச் செய்திகளாலும் ஊடகச் செய்திகளாலும் பொறாமை செய்திகளாலும் வீழ்த்தப்படுவது போன்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால், ரஜினி என்கிற இமயத்தை எட்டிப்பிடிக்கவில்லை என்பதைவிட தொட்டுக்கூட யாரும் பார்க்கவில்லை இந்திய சினிமாவில் என்பதே கள யதார்த்தம்.


இப்படிப்பட்ட பெரும் புகழுக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த்தின் மேற்கூறிய படங்கள் அனைத்தும் கமர்சியல் படங்கள் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படும். கலைப் படமோ கமர்ஷியல் படமோ தயாரிப்பாளர்களுக்கு லாபமும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் தருவதோசு மக்களால் கொண்டாடப்படும் எந்த படமும் சிறப்பான திரைப்படங்கள் தான். மக்கள் தீர்ப்பைவிட ஜனநாயகத்தில் வேறு எந்தத் தீர்ப்பும் சிறந்ததோ பெரியதோ அல்ல. அவ்வகையில் ரஜினி தனது முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மற்ற பிராந்திய நடிகர்களைவிட மட்டுமல்ல அவருக்கு அடுத்த தலைமுறை பிராந்திய நடிகர்களும்கூட தொட முடியாத உச்சத்தில் இருந்து இந்திய சினிமாவை ஆள்கிறார்.

பொதுவாகவே இந்திய சினிமாவின் அடையாளமாக இந்தி சினிமா மட்டுமே இருந்தது. அதையும் உடைத்தது ரஜினியின் சிவாஜி தான். இன்றுவரை யூ கே டாப் டென்னில் இடம் பெற்ற ஒரே திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி தான். இதுவரை இந்திய திரையுலகில் 2000 முதல் 5000 திரையரங்குகள் வரை அதிகமான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும் நடிகர்களில் ரஜினியை தவிர வேறு யாருமே இல்லை என்பதன் மூலம் ரஜினியின் மக்கள் செல்வாக்கு புலப்படும்.

முத்து படம் உலகளாவிய வெற்றி பெற்றது. அதைவிட பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஜப்பான் மக்கள் இடத்திலேயே ரஜினிகாந்த் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஜப்பான் பாராளுமன்றத்தில் மன்மோகன்சிங் ரஜினி எங்கள் நாட்டை சேர்ந்த நடிகர் என்று பெருமை பேசும் அளவிற்கு ரஜினியின் புகழ் உச்சத்தில் பறந்தது. முத்து படத்திற்கு பிறகு வெளிவந்த படையப்பா 225 திரையரங்குகளில் 65 நாட்களை கடந்து இந்திய திரை உலகில் இன்றுவரை யாராலும் உடைக்க முடியாத சாதனையைப் படைத்தது. அன்றைய முன்னணி நடிகர்களின் படங்கள் எந்த படமும் 100 திரையரங்குகளில் தாண்டி ரிலீஸாவதே சாதனை என்கின்ற நேரத்தில் 300 திரையரங்குகளில் ரிலீசாகி 265 திராயரங்குகளில் 65 நாட்களை கடந்த படமாக படையப்பா இந்திய சினிமாவை மிரள வைத்தது. இன்றுவரை இந்த சாதனையை எந்த இந்தியப் படமும் தொட முடியவில்லை என்பது ரஜினியின் வெற்றிக்கான அடையாளமாக பார்க்கப்பட்டது. என்றாலும், ரஜினியின் தோல்வி படத்தையே மற்ற முன்னணி நடிகர்களின் மாபெரும் வெற்றி படங்கள் தொட முடியாத நிலையும் இங்கே தொடர்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2002-ல் வெளியான பாபா திரைப்படம் 80க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது. இது ரஜினியின் இமேஜுக்கு தோல்வி படமாக அன்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இன்று வரை தென்னிந்திய நடிகர்களில் எவரும் இந்த தோல்வி படத்தின் அருகில் கூட நெருங்க முடியவில்லை என்பது ரஜினியின் தோல்விதான். மற்ற நடிகர்களின் சூப்பர்ஹிட் வெற்றி என்கிற அளவிற்கு ரஜினியின் புகழ் கொடி இறங்காமல் பறந்து கொண்டிருப்பது நமது கண்முன் இருக்கும் சாட்சி.


இது மட்டுமல்ல, இந்தி சினிமாவே இந்திய சினிமாவின் அடையாளமாக கருதப்பட்டு வந்தது. அதையும் உடைத்து, ஒரு பிராந்திய மொழி நடிகராக தென்னிந்திய நடிகர்களுக்கான மிகப்பெரிய கதவினை திறந்து வைத்ததும் சாட்சாத் சூப்பர் ஸ்டார்தான். அந்தப் புரட்சியை ஏற்படுத்திய படம் 2007ல் வெளிவந்த சிவாஜி த பாஸ் யூ கே டாப் டென்னில் இடம் பிடித்த முதல் இந்தியப் படம் என்ற வரலாற்று சாதனையை தொடங்கிவைத்த சிவாஜி உலகின் மிக அதிகமான திரையரங்குகளை கைப்பற்றிய முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. கேசினோ ராயல் என்கின்ற ஹாலிவுட் திரைப்படத்திற்குப் பிறகு மிக அதிகமாக திரையங்குகளில் வெளியான முதல் ஆங்கிலம் தவிர்த்த உலகத் திரைப்பட வரிசையில் இணைந்தது. 850 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்த முதல் இந்திய திரைப்படமும் கடைசி திரைப்படமும் சிவாஜி த பாஸ் தான். இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இனி எந்த திரைப்படமும் தரவே முடியாது என்பதுதான் ஈடு இணையற்ற செல்வாக்கிற்க்காண சாட்சியம்.

அவ்வப்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சிவாஜி படத்தின் வசூலை இவர் மிஞ்சிவிட்டார், அவர் வந்து விடுவார் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் நகைப்பிற்குரியதாகவே இருக்கும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி 850 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சிவாஜி 500 திரையரங்குகளில் கூட இரண்டு வாரங்களைக்கூட கடக்காத ஒரு படம் வசூலித்து விட்டதாக எழுதுவது இணையதளத்தில் மட்டுமே சாத்தியம். இணையத்தில் யார் வேண்டுமானாலும் ரஜினியை வெல்லலாம். ஆனால், அவர் வென்று வைத்திருக்கும் இதயங்களை எதிர்த்து யாரும் வெல்லவே முடியாது என்பதற்கு இந்திய கிரிக்கெட் உலகின் பிதாமகன் சச்சின் முதல் இந்தி திரைப்பட சாதனை நாயகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், அக்ஷய்குமார் வரை தலைவா என்று உச்சிமுகர்ந்து கொண்டாடப்படும் ரஜினியை, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரே இன்று தலைவா என்று அழைப்பது சாதாரண செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது. மக்கள் மனதில் மன்னனாக வாழ்ந்துவரும் ஒருவரைத்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மதிக்கப்படும் தலைவர்கள் கொண்டாடுவர்.

அவ்வகையில் 40 ஆண்டுகளாக மக்கள் மனதில் மன்னனாக வாழும் சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமா என்கிற தங்க கிரீடத்தில் ஜொலிக்கும் வைரமாக இருக்கும். இது ரஜினிக்கான விருது அல்ல, மக்களுக்கான விருது, மக்களின் ரசனைக்காண விருது.

 


 நன்றி
திராவிட ஜீவா, கட்டுரையாளர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிர
ஸ்

Friday, February 21, 2020

சிவராத்திரி பற்றிய 40 அபூர்வ தகவல்கள்.

சிவராத்திரி பற்றிய  40 அபூர்வ  தகவல்கள்.
*****************

சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. சிவராத்திரியின் சிறப்பு பற்றிய 40 அரிய தகவல்களை பார்க்கலாம்.

1. சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

2. சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.

3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.

4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும்.

6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் மேற்கொள்ளலாம்.

7. கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது.

8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.

9.கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை வைத்து வணங்க வேண்டும்.

12. சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி வணங்கக் கூடாது.

13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும்.

14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய வேண்டும்.

15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது.

16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். மும்முறை வலம் வரவேண்டும்.

17. அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது.

19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது.

20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது.

21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் ஆரோக்கியத்தை அளிக்கும்.

22. தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.

23. திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி அஷ்டகத்தை வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் செய் தால் பலன் கிடைக்கும்.

24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும்.

25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும்.

26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன் புற்றிருப்பார்கள்.

27. உமா தேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது.

28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய வேண்டும்.

29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும்.

30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் குற்றமற்ற நல்ல அறமே ஆகும்.

31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு ஆகியவையாகும்.

32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி.

33. சிவனுக்கு ஆடை தோல்.

34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம்.

35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து செய்யலாம்.

36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம். முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

37. தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர் களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று கூறுகிறது.

39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும்.

40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது.

꧁☬ 🌼 ௐ சிவம் சைவம்🌼☬꧂
꧁☬🌼 சர்வம் சிவமயம்🌼☬꧂
꧁☬ 🌼 சகலம் சிவனருள்🌼☬꧂
꧁☬ 🌼 திருச்சிற்றம்பலம்🌼 ☬꧂