Total Pageviews

Thursday, July 14, 2016

த்ரிவேணி சங்கமத்தில் கலக்கும் 3 நதிகள்


1.மிகப்பெரிய கோவில் குளம் கமலாலயம் எங்கே இருக்கிறது?

    திருவாருர்

2.கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை புனித நீராடும் குளத்தின் பெயர் என்ன?   2. மஹாமக குளம்

3.த்ரிவேணி சங்கமத்தில் கலக்கும் 3 நதிகள் எவை? 3. கங்கை, யமுனை, சரஸ்வதி (பூமிக்கடியில்)

4.சிந்து சமவெளி நாகரீக காலத்தில் சிந்துநதி தவிர அங்கே பாய்ந்த மற்றொரு புண்ய நதி எது?
 4

. சரஸ்வதி


5.எந்த நதியின் கரையில் ஜனமேஜயர் சர்ப்ப யாகம் நடத்தினார்?5. நர்மதா

6.சிருங்கேரி சாரதா பீடம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?                         6. துங்கபத்ரா

7.ராகவேந்திரர் சமாதி எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?7. துங்கபத்ரா

8.எந்த நதிக்கரையில் த்ரயம்பகேஸ்கரம் அமைந்திருக்கிறது?
8. கோதாவரி


9.சாலக்ராமம் எந்த நதியில் கிடைக்கும்?
9. நேபாளத்திலுள்ள கண்டகி நதி


10.சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?10. காவிரி

11.ஜோக் அல்லது ஜெரசப்பா நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?11. ஷராவதி

12.கங்கை நதிக்கு பாகீரதி என்று பெயர் வரக் காரணம் என்ன?
12. பகீரதன் தவம் செய்து கொண்டுவந்ததால் (இமயமலையில் வேறு பக்கம் ஓடிய நதியை பகீரதன் எஞ்ஜினீயர்களைக் கொண்டு சமவெளிக்குத் திருப்பிவிட்டதை புராணங்கள் இப்படிக் கூறுகின்றன)

13ஆண்டாள், பெருமாளின் மாலையை அணிந்து கொண்டு எங்கே முகம் பார்த்தாள்?13. கோவிலில் இருந்த கிணற்றில்

14.காவிரி நதி பாயக் காரணமான பறவை எது? ரிஷி யார்?
14. அகஸ்தியர்; அவரது தீர்த்த பாத்திரத்தை ஒரு காகம் கவிழ்த்தது

15.சிவபெருமானின் பூதகணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு உருவாக்கப்பட்ட நதி எது?
15. மதுரையின் வைகை நதி 
 
16. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜைனியில் ஓடும் நதியின் பெயர் என்ன?

16. சிப்ரா நதி
 
17.கடலுக்கு சாகரம் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
17. சகர மன்னனின் மகன்கள் தோண்டியதால் கடலுக்கான பள்ளம் ஏற்பட்டது. பகீரதன் அதில் கங்கையைப் பாயச் செய்தான்

18.கடலைக் குடித்த ரிஷி யார்?
18. அகஸ்தியர் (தென் கிழக்கு ஆசியாவுக்கு கடல் வழியாகச் சென்று இந்து நாகரீகத்தை நிலை நாட்டியதை புராணங்கள் இப்படிச் சொல்லுகின்றன. அகஸ்தியர் சிலைகள் அந்த நாடுகளில் இன்றும் உள.

19.ஆண் பெயரை உடைய பெரிய வட இந்திய நதி எது?
19. பிரம்மபுத்ர (மற்ற நதிகள் பெயர் பெண்கள் பெயர்கள்)

20.இமயமலையில் இருக்கும் மிகப்பெரிய புனித ஏரியின் பெயர் என்ன?
20. மானஸ சரோவர்.

No comments:

Post a Comment