Total Pageviews

Wednesday, February 25, 2026

சுருளி ராஜன் !

 படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எம்ஜிஆர் ரஜினியை விட படு பிசியான நடிகர்.. 1 ஆண்டில் 50 படம்!! இந்த பழக்கத்தால் பறிபோன உயிர்..
 
சினிமாவில் சிலரது குரலும், அவர்களது உடல்மொழியும் தனித்துவமானது. அதை பிரதியெடுக்க முயற்சித்தாலும், அந்த நேர்த்தியை வார்த்தெடுக்க வாய்ப்பில்லை. அப்படியான கலைஞர்கள் காலம் கடந்து வாழ்பவர்கள். அப்படி ஒருவர் தான் மறைந்த நடிகர் சுருளி ராஜன். ஒரே ஆண்டில் 50 படங்களில் நடித்து கரியரின் உச்சத்தில் இருந்தவர். அவரது கால்ஷீட்டுக்காக இயக்குநர்கள் காத்திருந்த காலம் இருந்தது.
 
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுருளி ராஜனின் பெற்றோர் சிறு வயதிலேயே உயிரிழந்தனர். இதனால் தனது அண்ணன் பராமரிப்பிலேயே வளர்ந்தார். தொடக்கத்தில் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தவர், சினிமா கனவை எட்டிப்பிடிக்க சென்னை வந்தார். திமுகவின் தேர்தல் நிதியில் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வசனம் எழுதிய ‘காகிதப் பூ’ என்ற நாடகத்தில் நடிக்க சுருளிராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
 
இந்த நாடகம் வெற்றிபெற்றதால் சுருளி ராஜனுக்கான சினிமா வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. ‘காகித பூ’ நாடகத்தை பார்த்த நடிகர் ஜெய்சங்கர், அவர் நடிப்பில் 1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.அடுத்து ‘அன்று கண்ட முகம்’ படத்தில் நடித்தார். 
 
ஜெய்சங்கர் - சுருளிராஜன் இடையிலான பிணைப்பு அதிகரித்ததால், அடுத்தடுத்து ஜெய் சங்கர் நடித்த ‘காதல் படுத்தும் பாடு’, ‘உயிர் மேல் ஆசை’ ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் ‘தண்ணீர் திருவிழா’, சிவாஜியுடன் ‘அஞ்சல் பெட்டி 520’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 
 
தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, எல்லாமே உன் கைராசி, ஜானி, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1980-ம் ஆண்டு மட்டும் 50 படங்கள் நடித்து சாதனை படைத்தார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சுருளி ராஜன் நடித்துள்ளார்கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு விஜயகாந்தின் ‘ஏமாறாதே ஏமாறாதே’ திரைப்படம் தான் சுருளி ராஜன் நடிப்பில் வெளியான கடைசி படம்.
 
அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையானதால் சுருளிராஜனின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து அனைவரும் சிரிக்க வைத்த சுருளி ராஜன் கடந்த 1980-ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் மரணத்துக்கு பிறகும் பல திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment