ஆறிலிருந்து அறுவது வரை....1979 !
பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம் இது.
பஞ்சு அருணாசலம் தயாரிப்பாளர். படத்தின் கதை, வசனம், பாடல்களை பஞ்சு அருணாசலம்தான் எழுதியிருந்தார்.
🌹வீட்டுக்கு வரும் வழியில்
ஒரு பெண்ணைக் காப்பாற்றுவார். ‘புள்ளகுட்டிங்களோட நீங்க நல்லாருக்கணும்’ என்று ரஜினியை வாழ்த்துவார் அந்தப் பெண்.
வீட்டுக்கு வந்தால், மனைவி படாபட் இறந்துவிடுவார். ’அந்த அம்மா,புள்ளகுட்டிங்களோ நல்லா இருன்னுதான் சொன்னா.
பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா இருன்னு சொல்லலையே...’ என்று அழுவார் ரஜினி. ஒரு சாதாரண வார்த்தை, மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்திவிடும் நமக்கு!
ரஜினி, ஜெயா, சங்கீதா, படாபட் ஜெயலட்சுமி, சோ, சுருளிராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள்.
படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் தனி ரகம்.
*‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ என்ற பாடல் இன்றைய இரவுப் பாடல்களின் பட்டியலில் டெளன்லோடு செய்யப்பட்டு, எத்தனையோ பேரின் செல்போனுக்குள் காவியம் படைத்துக் கொண்டிருக்கின்றன.
பஞ்சு அருணாசலம் படம். இசை இளையராஜா என்று சொல்லவேண்டுமா என்ன?
ஸ்ரீநிவாஸ்..
No comments:
Post a Comment