Total Pageviews

Wednesday, May 13, 2026

குழந்தை_இல்லாத_தம்பதிகளுக்கு #மறுபிறவி கிடையாது..

குழந்தை_இல்லாத_தம்பதிகளுக்கு #மறுபிறவி கிடையாது..

ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

இதை,

புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்

கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

எம்பெருமான்

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

மனிதர் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு ஜீவராசியாக பிறக்கின்றனர். ஒருவர் செய்யும் பாவ புண்ணிய அடிப்படையில் ஒவ்வொரு பிறப்பிலும், மரம், செடி, விலங்கு, பறவை என இறைவனால் படைக்கப்படுகின்றனர்.

ஒருவருக்கு குழந்தைகளை இல்லை என்றால் அவர்களுக்கு கர்மபலன் எல்லாம் முடிந்து அவர்கள் பகவானின் ஆசாரியரின் திருவடிகளை அந்த பிறவியுடன் அடைந்துய்வர் மறுபிறவி இல்லை என்பதே அர்த்தம்

பெண்பிள்ளை மட்டும் பிறந்தால் அந்த பெண்பிள்ளையின் மகன் (தன் தகப்பனாருக்கு பின்) செய்யும் தர்பணத்துடன் அந்த கர்மாவும் முடிந்து அவர்கள் பகவானின் திருவடிகளை (அந்த குழந்தையின் காலத்துக்கு பின்) அல்லது ஆசாரியன் திருவடிகளை அடைந்து உய்வர்கள்......

திருமணம் ஆகி இத்தனை வருடமாகியும் குழந்தை இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.....

No comments:

Post a Comment