பொது அறிவு தகவல்கள் / செய்திகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
Total Pageviews
Sunday, June 17, 2012
Sunday, May 6, 2012
மதுரை சித்திரை திருவிழா
அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா. வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருவிழா இன்று துவங்குகிறது. காலை கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள். நாளை முழுவதும் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.
மறுநாள் மே 5 காலை ஆறு மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகரை பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு புதூரிலும், மாலை ஆறு மணிக்கு அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.அன்று இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
பின், மே 6ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் தல்லாகுளத்தில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
பின் பக்தர்களின் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகை ஆற்றில் இறங்குகிறார்: அன்று காலை 6.45 மணிக்கு மேல் ஏழு மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரள்வர். பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரியும், இரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமும் நடக்கிறது.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்யும், மறுநாள் பூப்பல்லக்கும் நடக்கிறது.
மே 8 தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கள்ளழகர், மே 9ம் தேதி அழகர் மலை சென்றடைகிறார். இதன் முதல் நிகழ்ச்சியான கொட்டகை முகூர்த்த விழா நேற்று காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், மாலை வண்டியூரிலும் நடந்தது.
காலையில் நடந்த விழாவில் அழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் யாழி பூஜிக்கப்பட்டது. பின் கோயிலில் பந்தல் அமைப்பதற்கான பந்தல்கால் பூஜிக்கப்பட்டு, கோவில் முன் வைத்தனர்.
அதன் பின் அழகரை வரவேற்கும் பக்தர்கள் மண்டகபடிகள் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு 397 திருக்கண் மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளிபக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா. வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருவிழா இன்று துவங்குகிறது. காலை கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள். நாளை முழுவதும் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.
மறுநாள் மே 5 காலை ஆறு மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகரை பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. காலை ஒன்பது மணிக்கு புதூரிலும், மாலை ஆறு மணிக்கு அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.அன்று இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
பின், மே 6ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் தல்லாகுளத்தில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
பின் பக்தர்களின் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகை ஆற்றில் இறங்குகிறார்: அன்று காலை 6.45 மணிக்கு மேல் ஏழு மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியை காண மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகையில் திரள்வர். பகலில் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரியும், இரவு வண்டியூர் பெருமாள் கோயிலில் திருமஞ்சனமும் நடக்கிறது.
மறுநாள் காலை அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்யும், மறுநாள் பூப்பல்லக்கும் நடக்கிறது.
மே 8 தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கள்ளழகர், மே 9ம் தேதி அழகர் மலை சென்றடைகிறார். இதன் முதல் நிகழ்ச்சியான கொட்டகை முகூர்த்த விழா நேற்று காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், மாலை வண்டியூரிலும் நடந்தது.
காலையில் நடந்த விழாவில் அழகர் எழுந்தருளும் ஆயிரம் பொன் சப்பரத்தின் யாழி பூஜிக்கப்பட்டது. பின் கோயிலில் பந்தல் அமைப்பதற்கான பந்தல்கால் பூஜிக்கப்பட்டு, கோவில் முன் வைத்தனர்.
அதன் பின் அழகரை வரவேற்கும் பக்தர்கள் மண்டகபடிகள் அமைப்பது வழக்கம். இந்த ஆண்டு 397 திருக்கண் மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளிபக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
அப்பார்ட்மெண்ட் அபாயங்கள், கவனம் அவசியம்
அப்பார்ட்மெண்ட் குறித்த
அதிர்ச்சிச் செய்தி இல்லாமல் இப்போதெல்லாம் நாளிதழ்களே வருவதில்லை.
அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த பெண்ணைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்தனர். தனியே
இருந்த பெண் படுகொலை செய்யப்பட்டார். அப்பார்ட்மெண்டில் தனியே இருந்த முதியவர்
தாக்கப்பட்டார். இப்படி ஏதோ ஒரு செய்தி நாள் தோறும் அப்பார்ட்மெண்ட் விபரீதங்களைச்
சொல்லி பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.
பெண்கள் தனியே இருக்கும் வீடுகளைக் குறிவைத்தே பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கையில் அதுவும் அப்பாட்மெண்ட் போன்ற இடங்களில் பாதுகாப்பின்மைக்கு என்னக் காரணம் ?
முதல் காரணம் நகர்ப்புறத்தின் அவசர வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு என்பார்களே அதைவிட ஒரு படி மேலான அவசரம். நீங்கள் அப்பார்ட்மெண்ட் வாசியா ? சரி உங்கள் அப்பார்ட்மெண்டில் இருக்கும் எத்தனை நபர்களை உங்களுக்குத் தெரியும் ? அவர்களைப் பற்றி என்னென்ன விவரங்கள் ? அவர் என்ன வேலை செய்கிறார் ? வீட்டில் எத்தனை பேர் உண்டு ? அவர் வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா ? இப்படி உங்களையே சில கேள்விகள் கேட்டுப் பாருங்கள். விஷயம் பளிச் எனப் புரிந்து போய் விடும்.
எதேர்ச்சையாகப் படியில் சந்தித்துக் கொள்ளும் போது ஒரு சின்ன சிரிப்புடன் கடந்து போய் விடுகிறோம். அவ்வளவு தான் பழக்கமெல்லாம். அடுத்த வீட்டு நபர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமலேயே முடிந்து போகிறது வாழ்க்கை. இது தான் நிஜம். இதற்கு நேர் எதிரான வாழ்க்கையைப் பார்க்க வேண்டுமானால் கிராமத்துப் பக்கம் தான் போகவேண்டும்.
கிராமத்திலுள்ள அத்தனை நபர்களுக்கும், ஒவ்வொருத்தரைப் பற்றியும் தெரியும். அறிதல் என்பது உறவுகளின் இறுக்கத்துக்கு ரொம்பவே அவசியமானது. புதிய நபர் யாராவது கிராமத்து பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கினாலே ஒட்டு மொத்த கண்களும் அவரை மொய்க்கும். அவரிடம் நேரடியாகவே போய் விசாரணையையும் தொடங்கி விடுவார்கள். ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் ஒன்று படுவதும், யாருக்கேனும் உதவி தேவையெனில் சட்டென களம் இறங்குவதும் கிராமத்தின் குணாதிசயங்கள்.
ஒரு கிராமத்தான் வெளியூர் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே பக்கத்து வீட்டுக் காரர்களிடமெல்லாம் போய், “நான் வெளியூர் போறேன் வீட்டைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்பார். அதே சம்பவம் நகர்ப்புறத்தில் என்றால் எப்படி இருக்கும். நாம வீட்ல இல்லேங்கறது யாருக்கும் தெரியக் கூடாது. ஏதோ பக்கத்து தெருவுக்கு போறாமாதிரி பாவ்லா காட்டணும். பக்கத்து வீட்டுக் காரன் கிட்டேயே மூச்சு விடக் கூடாது. விட்டால் பக்கத்து வூட்டுக்காரனே லவட்டிட்டுப் போக வாய்ப்பு அதிகம். இப்படித் தான் பதட்டப்படும்!
நகர்ப்புற வாழ்க்கை பயத்தின் மேல் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. முதல் பயம் நம்பிக்கையின்மை. அதற்கு நியாயமான காரணம் உண்டு. பெரும்பாலான நகர்ப்புற விபரீதங்கள் ரொம்பத் தெரிந்த நபர்களின் துணையோடு தான் நடக்கிறது. இரண்டாவது நம்ம வேலையைப் பார்த்துக் கொண்டு பேசாமல் போய்விடுவோம், எதுக்கு வீண் வம்பு எனும் மனோபாவம்.
நகர்ப்புற வாழ்க்கையும், அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையும் இப்படி ஏகப்பட்ட சிக்கல்களோடு தான் நம் முன்னால் நிற்கிறது. இந்த சூழலில் பாதுகாப்பாய் இருப்பது நமது கையில் தான் இருக்கிறது. கீழே உள்ள சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பெரும்பாலான சிக்கல்கள் விலகி ஓடிவிடும்.
- அப்பார்ட்மென்ட்களை புக் செய்யும் போதே அதன் பாதுகாப்புக் குறித்து விசாரித்து அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்பாட்மெண்டைச் சுற்றி உள்ள இடங்கள், அதன் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்.
- அப்பாட்மெண்ட் கதவு பலமானதாய் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். முன் கதவு நல்ல உறுதியாய் இருக்க வேண்டியது அவசியம். ரொம்ப அலங்காரம் எனும் பெயரில் டிசைன் செய்து மரத்தின் கனத்தைக் குறைத்து விடாதீர்கள்.
- கதவில் வெறுமனே பெயருக்கு ஒரு பூட்டு போடுவது உதவாது. பூட்டு நல்ல தரமான பூட்டாக இருக்க வேண்டும். கொஞ்சம் தூரத்திலுள்ள ஏதேனும் ஒரு கடையில் நீங்களாகவே போய் வாங்கிக் கொள்ளுங்கள்.
- இப்போதெல்லாம் எல்லாக் கதவுகளுக்கும் முன்னால் ஒரு கிரில் போட்டு விடுகிறார்கள். அது ரொம்ப நல்லது.
- கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் “டெட் போல்ட் லாக்” வாங்கி மாட்டுங்கள். கதவை படீரென திறந்து கொண்டு யாரும் வர முடியாது. வெளியே யாராவது வந்து கதவைத் தட்டினால் கூட முழுமையாய்க் கதவைத் திறக்காமலேயே பேச முடியும்.
- வீட்டுக் கதவில் எத்தனை பூட்டுகள், தாழ்ப்பாள் சங்கதிகள் உண்டோ எல்லாவற்றையும் இரவில் பூட்டி வையுங்கள். சும்மா ஒரு தாழ்ப்பாள் மட்டும் பெயருக்குப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். நிறைய பூட்டுகள் இருந்தால் திருட நினைப்பவர்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கும். அது யாரையாவது எழுப்பி விடும்.
- வீட்டைப் பூட்டாமல் வெளியே போகவே போகாதீர்கள். “ரோட்டுக்கு எதிரே தான் கடை ஒரு எட்டு போயிட்டு ஓடி வந்துடறேன்” ன்னு நினைக்க வேண்டாம். அந்த சில வினாடிகளில் யாராவது உங்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளலாம். நீங்கள் திரும்பி வந்தபின் தாக்கலாம் !
- சந்தேகப் படும்படியான நபர் “வாட்டர் பில்டர்” சரி செய்ய வந்திருக்கிறேன், ஏசி சரிசெய்ய வந்திருக்கிறேன் என்றால் உஷாராகி விடுங்கள். உடனடியாக நிறுவனத்துக்குப் போன் செய்து அப்படி யாரையாவது அனுப்பியிருக்கிறார்களா எனக் கேளுங்கள். எக்காரணம் கொண்டும் “அலுவலக நம்பர் என்னப்பா” என வந்தவனிடமே கேட்காதீர்கள். ஏமாந்து விடுவீர்கள்.
- இப்போதைய டிவிக்கள், ரேடியோக்கள் எல்லாவற்றிலுமே டைமர் சிஸ்டம் உண்டு. எனவே நீங்கள் வீட்டில் இல்லாவிட்டால் கூட சும்மா அவ்வப்போது டிவி ஓடுமாறு செட் செய்யலாம், ரேடியோ பாடுமாறு செய்யலாம். வீட்டில் யாரோ இருப்பது போன்ற தோற்றம் உருவாகும்.\
- வீட்டுக்கு அருகில் நல்ல நண்பர் ஒருவரையாவது கொண்டிருங்கள். நீங்கள் வெளியே போகும் விஷயத்தைச் சொல்லுங்கள். மாறி மாறி தேவைப்படும் போதெல்லாம் உங்கள் வீடுகளைக் கண்காணித்துக் கொள்ளலாம்.
- சந்தேகத்துக்கு இடமான நபர் தென்பட்டால் உடனடியாக போலீஸுக்குத் தெரியப்படுத்துங்கள். கூடவே அப்பார்ட்மெண்ட் நிர்வாகம், வாட்ச்மேன் அனைவரையும் உஷார் படுத்திவிடுங்கள்.
- அப்பார்ட்மெண்ட்களில் சில ஆபத்தான பகுதிகள் உண்டு. படிக்கட்டுகள், கார் பார்க்கிங் போன்றவை சில உதாரணங்கள். அங்கெல்லாம் கொஞ்சம் விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியம்.
- வெளிச்சமான இடங்கள் திருட்டு வேலைக்காரர்களுக்கு அலர்ஜி. அப்பார்ட்மெண்டைச் சுற்றி இரவு முழுவதும் பகல் போல வெளிச்சம் இருந்தால் ரொம்பப் பாதுகாப்பானது. சில வெளிநாடுகளில் இது கட்டாயம்.
- அட்டவணைப்படி எல்லாவற்றையும் செய்யாதீர்கள். “எல்லா சனிக்கிழமையும் மாலையில் ஷாப்பிங் போவாங்க, சண்டே ஈவ்னிங் வெளியே டின்னர் போவாங்க, இப்படி ஒரு தெளிவான அட்டவணை இருப்பது ஆபத்து !” இது திருடர்கள் சாவாகாசமாக அமர்ந்து திட்டமிட உதவும். “எப்போ போவாங்க எப்போ வருவாங்கன்னே தெரியாது” எனும் நிலை தான் அப்பார்ட்மெண்ட் விஷயத்தில் பாதுகாப்பானது. வெளியே போகும்போது கூட வேறு வேறு பாதைகளில் உங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.
- அப்பார்ட்மெண்ட் வாசிகளுடன் ஒரு நம்பிக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக அளவுக்கு அதிகமாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்கவும் வேண்டாம். “அதை ஏங்கா கேக்கறீங்க என் வூட்டுக் காரர் அடுத்த வாரம் புல்லா வெளியூராம்” என ஸ்பீக்கர் வைத்துப் பேசாதீர்கள்.
- எப்போதும் செல்போன் கையிலேயே இருக்கட்டும். அதில் லோக்கல் போலீஸ் நம்பர், ஆம்புலன்ஸ் நம்பர், அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் நம்பர், நம்பிக்கையான சிலருடைய நம்பர்கள் எல்லாம் தவறாமல் இருக்கட்டும். மறக்காம சார்ஜ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
- அப்பார்ட்மெண்ட்களில் வாடகைக்குப் போகிறீர்களென்றால் கெடுபிடி அதிகமுள்ள இடங்களுக்கே போங்கள். “ஆயிரத்தெட்டு டீட்டெயில்ஸ் கேட்டு சாவடிப்பாங்க” என வெறுக்காதீர்கள். அதே போல எல்லோரிடமும் கேட்பதால் அப்பார்ட்மெண்ட்களில் வருபவர்கள் பாதுகாப்பானவர்களாய் இருக்க சாத்தியம் அதிகம்.
- முன்பு வாடகைக்கு இருந்தவர் பயன்படுத்திய பூட்டு மாற்றப்பட்டுள்ளதா என்பதை 100 சதம் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் முதல் வேலையாக அதை மாற்றுங்கள்.
- வசதியிருப்பவர்கள் செக்யூரிடி கேமராக்களையும் வீடுகளில் பொருத்தலாம். வீட்டில் குழந்தைகளை ஆயா நன்றாகக் கவனிக்கிறாரா என்பது முதல், யாராவது அத்துமீறி நுழைகிறார்களா என்பது வரை சகலத்தையும் அதில் பிடித்துவிடலாம்.
- அப்பார்ட்மெண்டின் தன்மைக்கு ஏற்ப பாதுகாப்புகள் அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு ரூமில் நடப்பது மற்ற ரூமுக்கே கேட்காது என வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஒரு டோர் அலார்ம் சிஸ்டம் வாங்குவது நல்லது. கதவு திறக்கப்பட்டால் அது அதிக சத்தம் போட்டு உங்களை உஷார் ப்படுத்திவிடும்.1. கதவில் ஒரு சிறிய லென்ஸ் பொருத்தி வெளியே இருப்பவர் யார் என்பதைப் பார்ப்பது ரொம்ப நல்லது. சிம்பிள் செக்யூரிடி சிஸ்டம். ஆனால் ரொம்பப் பயனளிக்கும். இந்த அட்ரஸ் எங்கே இருக்கு தெரியுமா ? ஒரு போன் பண்ணிக்கலாமா ? இப்படி ஏதாவது ஒரு சிம்பிள் உதவியுடன் பெரிய பெரிய ஆபத்துகள் வரலாம் கவனம் தேவை.
- நீங்கள் ஒரு திருடராய் இருந்தால் உங்கள் வீட்டில் எப்படியெல்லாம் நுழைவீர்கள் என யோசியுங்கள். அந்த இடங்களிலெல்லாம் பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள்.
- ஒருவேளை உங்கள் வீட்டில் திருடன் நுழைந்து விட்டானென்றால், உதவி உதவியென கத்தினால் ஒருவேளை உதவி கிடைக்காமல் போகலாம். எனவே தீ.. தீ என கத்துங்கள் !! இது அனுபவஸ்தர்களின் அட்வைஸ்.
- கழற்றிப் போட்டிருக்கும் ஷூவிற்குள், மிதியடிக்குக் கீழே, செடித்தொட்டிக்கு அடியில், கதவுக்கு மேல் இப்படிப்பட்ட இடத்திலெல்லாம் சாவியை வைத்துச் செல்லாதீர்கள். இதெல்லாம் ஹைதர் கால டெக்னிக்.
- கார் கீயில் வீட்டுச் சாவியையும் போட்டு வைக்காதீர்கள். எங்கேயாவது வேலட் பார்க்கிங் சமயத்தில் கூட உங்கள் கீ டூப்ளிகேட் செய்யப்படலாம். உங்கள் கார் எண்ணை வைத்து உங்கள் விலாசம் கண்டுபிடிக்கப் படலாம் !
- யாராவது போன் பண்ணினால் உடனே உங்கள் ஜாதகத்தை அவரிடம் சொல்லாதீர்கள். அவர்கள் யார், என்ன சமாச்சாரம் என்பதையெல்லாம் முதலில் கேட்டு விட்டு தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள். அடிக்கடி ராங் கால் வருகிறதா ? தொலைபேசி நிறுவனத்திற்கு கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். வீடு காலியாய் இருக்கிறதா ? ஆட்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட ராங் கால்கள் வரும் உஷார்.
- முதலில் ஒரு காலர் ஐடி வாங்கிக் கொள்ளுங்கள். யாரெல்லாம் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் எனும் விஷயம் தெரியவரும். உங்கள் வீட்டு குப்பைகளில் கூட கவனம் செலுத்துங்கள். குடும்பத்தினரைப் பற்றிய, வங்கிக் கணக்கு பற்றிய விஷயங்களெல்லாம் அதில் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
- யாராவது வந்து உங்கள் பக்கத்து வீட்டுக் காரர்களைப் பற்றி தேவையற்ற கேள்விகள் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்களிடம் கவனமாய் இருங்கள். நம்பிக்கையற்றவராய் தெரிந்தால் அப்பார்ட்மெண்ட் ஆபீஸ் போய் செய்திகளை வாங்கச் சொல்லுங்கள். முடிந்தால் செல்போனில் நைசாக அவனை ஒரு படம் பிடித்துக் கொள்ளுங்கள். மறக்காமல் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள்.
- நகைகளையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து விடுதல் உசிதம். கொஞ்சம் தேவைக்கேற்ற பணம் மட்டும் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது.
- உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னென்ன கார் வைத்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ஏதேனும் வித்தியாசமான கார் வந்தால் அலர்ட் ஆகி விடுங்கள். அதன் எண்ணை எழுதி வையுங்கள். தேவைப்படலாம் !
நன்றி :
பெண்ணே நீ…
டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
பெட்ரோல்
எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக் கொள்ளும் எரிபொருள் ஆகும். பெட்ரோல் எஞ்சினில் கார்புரோட்டல் மூலம் ஆவியாக்கப்பட்ட பெட்ரோல் ஆவியும் காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6 முதல் 8 மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது.
இதனால் விசை உண்டாகிறது.
டீசல் எஞ்சினில் கார்புரேட்டரும் மின்பொறி
உருவாக்கியும் கிடையாது. டீசல் சாதாரண வெப்பநிலையில்
எளிதில் ஆவியாவதில்லை. எஞ்சினால் காற்று மட்டுமே உள்ளிழுக்கப்படுகிறது. இந்த காற்று 4 முதல் 24 மடங்கு அழுத்தப்படுகிறது. இதன்மூலம் காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவிற்கு உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு வெப்பமடைந்த
காற்றினுள்
இஞ்செக்டர் மூலம் டீசல் தெளிக்கப்படுகிறது. அப்போது அது உடனே தீப்பற்றி எரிந்து விசையை உண்டாக்குகிறது.
இத்தகைய டீசல் எஞ்சினினுள் பெட்ரோல் போட்டால் அதிக வெப்பமுள்ள காற்றுடன் சேரும்போது திடீரென வெடிக்கும்.
அதனால் டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் போடக்கூடாது
Thursday, May 3, 2012
உயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்
கால்சியம் என்ற தனிமம் அனைத்து உயிரிகளின், உடல்
செயல்பாட்டுக்கும் கட்டாயம் தேவையாகும். கால்சியம் என்றால் என்ன தெரியுமா?
அதுதான் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு
என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம்
தான் கால்சியம் ஆகும். பூமியில் கிடைக்கும் தனிமங்களில் 5வது இடத்தைப்
பெற்றுள்ளது. நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று.
மனித உடலின் 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400
கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு 1 கிலோவும் இருக்கிறது.
கால்சியத்தின் சலிப்பற்ற பணி…!
கால்சியம் நம் உடலில் என்னென்ன பணிகள் செய்கிறது தெரியுமா? அலுப்பில்லா,
அயரா உழைப்பாளி கால்சியம்! உயிர்காக்கும் நண்பனும் கூட. நம் உடலின் தசைகள்
சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும்
கால்சியத்தின் உதவிதேவை. அது மட்டுமல்ல காலில் முள்குத்திய / நெருப்பு
சுட்டுவிட்டதா ஆ… வலிக்கிறதே! என வலிஉணர அந்த செய்தியை நரம்புகள் மூலம்
மூளைக்கு கொண்டு செல்லவும், ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் வழியே
இரத்தம் வெளியேறுவதை தடுத்து, இரத்தம் உறைய வைக்கவும் கால்சியம் கட்டாயம்
தேவை. செல்களுக்கு இடையே, வேதி சமிக்ஞைகள் சரிவர செல்ல கால்சியம் வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவினை ரசிக்க, ருசிக்க மற்றும்
கரைவதற்கு தேவையான எச்சிலை சுரக்க உதவிசெய்கிறது.
பொதுவாக 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக
குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம்முடைய எலும்பு வளர்ச்சி அத்துடன்
நின்றுவிடும். ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தொடர்ந்து உடலுக்கு
வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும்
உணவில் கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால்
எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு எலும்பின் உறுதி
குறையும். இந்நிலை குழந்தை பருவத்தில் ஏற்பட்டால் எலும்பு வலுவின்றி
வளைந்து ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். நமக்கு தினமும் சுமார் 400 முதல் 500
மில்லி கிராம் வரையிலான கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின்
வழியே வெளியேறுவதால் உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது.
கால்சியத்தின் பணிகள் :
கால்சியம் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது
எடை சீராக இருக்க உதவுகிறது
பெண்களுக்கு முதுகுவலி வராமல் பாதுகாக்கிறது
கால்சியம் குறைந்தால்….!
உடல்எடை அதிகரிக்கும்
இரத்தக்குழாய்களின் கழுத்தை நெருக்கி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
பல் ஆடும்
பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படும்
பாக்டீரியா பற்களை தாக்கி பற்சிதைவு, வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்றவையும் ஏற்படுகிறது.
பெண்களின் பிரச்சனை, கால காப்பாளன்…!
கால்சியம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களின் மனநிலையை
ஒழுங்குபடுத்துகிறது. இல்லையெனில் பெண்களுக்கு தசைப்பிடிப்பு, எரிச்சல், மன
அழுத்தம் போன்றவை ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் தினம் 1 கிராம் கால்சியம்
எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது
ஏற்படும் தலைவலி, மனம்சரி இல்லாமை(Moodout), வயிறு உப்பிசம், கை கால் வலி
மற்றும் போன்றவற்றை கால்சியம் நீக்குகிறது. மேலும் அப்போது உண்டாகும்
வயிற்றுவலியையும் கால்சியம் துரத்தி விடும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும்
பல்வேறு பிரச்சனைகளை கால்சியம் நீக்கிவிடுகிறது என பல்வேறு ஆய்வுகள்
விளக்குகின்றன. மேலும் பெண்களின் உடம்பில் சுரக்கும் ஈஸ்டிரோ ஜென் என்ற
ஹார்மோன் கால்சியம் உட்கிரகிப்புக்கு மிகவும் உதவுகிறது.
தகவல்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை
Thursday, April 26, 2012
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில்
தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில்
பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில்
மூன்றாம் படை வீடு பழநி ஆகும்.
கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு:
இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.
பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார்.
சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது.
அமைவிடம்:
இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான்.
பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.
மூலவர் சிற்பம்:
இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார்.
அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு
முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி
முருகனாக நமக்கு
காட்சியளிக்கிறது.
பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.
சிறப்புகள்:
கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.
பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.
சிறப்புகள்:
கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.
முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!
பூஜைகள் மற்றும் விழாக்கள்:
தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்:
- திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
- பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
- மாரியம்மன் கோவில்
- பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
- குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
- வேலப்பர் கோவில், கொடைக்கானல்.
வசதிகள்:
- வழிபாடு செய்ய ஏற்ற வகையில் பொது தரிசன வழி மற்றும்
சிறப்பு தரிசன வழிகள்
உள்ளன.
- முடிக்காணிக்கை செலுத்துவதற்கு அடிவாரத்தில்
பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- பழநியின் சிறப்பான பஞ்சாமிர்தத்தை வாங்க
மலையிலும் அடிவாரத்திலும் கடைகள் உள்ளன.
- பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப தண்டபானி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷால விடுதி, வேலவன் விடுதி ஆகியனவும் உள்ளன.
எப்படி செல்வது?
- பழநிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை, கொடைக்கானல், தாராபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
- அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல், 48 கி.மீ தொலைவில்.
- அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 85 கி.மீ தொலைவில்.
மலையேறுவதற்கு படிக்கட்டுகள், யானைப் பாதை, வின்ச் ரயில், ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Subscribe to:
Posts (Atom)