Total Pageviews

Monday, December 26, 2016

ஆலய அதிசயங்கள்!!

ஆலய அதிசயங்கள்!!

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாnத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

மறக்காமல் பகிருங்கள் நண்பர்களே, அனைவர்க்கும் தெரிய படுத்துங்கள்...

Sunday, November 27, 2016

கண் மொழிகள் !

கண்ணின் மொழி
-----------------------------
 


1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது 

2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது

3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது

4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது

5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.

6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. 

7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது

8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது

9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.

10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது

11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது

12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.

13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்

14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்

15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது

16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது

17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது

18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது

19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் காம வயப்படுகிறது.

20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. 

21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது

22. கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது

23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. 

24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.

25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது 

26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை. 

27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்

நன்றி:- 

Thursday, September 29, 2016

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சிறப்பு :

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சிறப்பு :

இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய புனித தலங்களில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலும் ஒன்று. ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது.

ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை கழிக்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான்.

குடும்பத்தில் யாராவது விபத்து,தற்கொலை போன்ற அகால மரணம் அடைந்துவிட்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம்,திதி கொடுப்பது அவசியம்.

ராமேஸ்வரம் போய் வந்தால் இந்துக்களின் இந்த ஜென்ம புனித பயணம் நிறைவடையும் என இந்துமத சாஸ்திரம் சொல்கிறது.

இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய ஜோதிர் தலங்களில் இது ஒன்றாகும்.

இந்தியாவின் மிக முக்கிய சிவ ஸ்தலம் என உலகெங்கும் இருக்கும் இந்து மக்கள் வழிபடும் கோயில் இது.

இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்ப்படுகிறது.

இந்த கடல் நீருக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும்,முன்னோர்களின் சாபத்தை நீக்கும் சக்தி பெற்றதாகவும் புராணம் சொல்கிறது.

இக்கோயிலுக்குள் அமைந்துள்ள 22 வகையான தீர்த்தங்கள் பல அபூர்வ சக்தி பெற்றவை.

இங்குள்ள ஒவ்வொரு கிணற்று நீரும் ஒவ்வொரு சுவை கொண்டது.

இவற்றில் நாம் நீராடுவதால் பல புன்ணிய ஆத்மாக்களின் ஆசி கிடைக்கிறது.


 

Sunday, September 25, 2016

வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?



தமிழர்கள் புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்?

நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன.

நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே, வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள்.

Wednesday, September 21, 2016

பொது அறிவு செய்திகள் -2

தெரிந்து கொள்ள..

👉 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

👉 ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉 சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉 ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

👉 குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

👉 சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

👉 சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

👉 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

👉 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

👉 நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…

ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

👉 தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉 காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.

👉 மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

👉 “லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

👉 தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

👉 இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

👉 காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

👉 குளிர் காலத்தில் குயில் கூவாது.

👉 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.

அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

👉 லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.

அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

👉 கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉 கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

👉 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

👉 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

👉 ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

👉 வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉 ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

👉 பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉 ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉 தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.

👉 சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

👉 விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

👉 சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.

👉 யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.

👉 நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.

👉 டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்

👉 புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

👉 நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

ஸ்மார்ட் சிட்டி' என்றால் என்ன?

ஸ்மார்ட் சிட்டி' என்றால் என்ன?

உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரம், ஸ்மார்ட் சிட்டி எனப்படும். இந்த நகர மக்களின் வாழ்க்கைத் தரம், சர்வதேச நகரங்களுடன்
ஒப்பிடும் வகையில் இருக்கும். சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, 'டிஜிட்டல்' மயமான, பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நகரங்கள், இரு கட்ட நடைமுறை மூலம் தேர்வு செய்யப் படுகின்றன. முதல் கட்டமாக, மாநில அரசுகள், ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கத்தக்க நகரங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு பட்டியலை அனுப்பும். அனைத்து மாநிலங் களும் அனுப்பும் பட்டியலில் இடம்பெறும் நகரங்கள், அவற்றின் தற்போதைய கட்டமைப்பு வசதிகளை பொறுத்து, இரண்டாவது கட்டத் தேர்வில் பங்கேற்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, மத்திய அரசு, தன் பங்காக, ஐந்து ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வீதம் செலவிடப்படும். மத்திய அரசு வழங்கும் தொகைக்கு நிகராக, அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து முதலீடு செய்யும்.

மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், நகரங்களை தேர்வு செய்யும் மூன்றாவது கட்ட போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலுார் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அடுத்தாண்டில் 40 நகரங்கள்


மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.


இதுவரை, 60 நகரங்கள் தேர்வாகி உள்ளன. மீதமுள்ள, 40 நகரங்களை தேர்வு செய்யும் பணி, அடுத்தாண்டு, ஜனவரியில் துவங்கும். வரும், 2022க்குள், இந்தியாவில், 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்பட்டு இருக்கும்.

Sunday, September 11, 2016

தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?

TMC என்பது தண்ணீரின் அளவையலகு என்பது தெரிகிறது. தண்ணீர் எவ்விதம் அளக்கப்படுகிறது?

உதாரணமாக கர்நாடகா 10 TMC தண்ணீர் திறந்துவிட்டது என்பதை எப்படிச் சோதித்தறிவது?

TMC என்பது Thousand Million Cubic feet என்பதன் சுருக்கம். இது ஒரு நீர்மத்தின் பெரும் கொள்ளளவை அலகு ஆகும்.

1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ 28.3168 லிட்டர் அளவிலான நீர் கொள்ளும். அப்படி என்றால், 1 TMC என்பது,

28.3168 x 1,000,000,000 = 28,316,800,000 லிட்டர் (ஏறத்தாழ இருபத்தெட்டு பில்லியன் லிட்டர்)

திறந்து விடப்படும் வழித்துளையின் விட்டம், நீர்மட்டம் (அல்லது அழுத்தம்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு மணிக்கு இத்தனை அளவு நீர் வெளியேறும் என்று கணக்கிடப்படும். அதனடிப்படையில், இத்தனை நேரம் திறந்து வைத்திருந்தால் 10 TMC தண்ணீர் வெளியேறும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.



குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,

அது அறிவியல்..

குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.

இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது.

மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன. இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள்..

செல்போனை காண்பித்தும், டிவியை காட்டியும் குழந்தைகளுக்கு உணவூட்டும் இன்றையை தலைமுறை தாய்மார்கள் இனியாவது திருத்தி கொள்ளுங்கள்...