Total Pageviews

Friday, March 29, 2013

படம் உடைக்கப்படாமலிருக்க



ஒரு சிற்றூரில் கலைஞர் கருணாநிதி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அசோகன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அசோகன், “கஜினி முகம்மது சோமநாதபுரத்தின் மீது பதினாறு முறை படையெடுத்து பதினேழாவது முறை வெற்றி கண்டது போல், நான் தேதி கேட்டு கலைஞரிடம் பலமுறை படையெடுத்து இன்று வெற்றி கண்டேன். இப்போது கலைஞர் பேசுவார்” என்றார்.

கலைஞர், “அசோகனை இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசவிடுங்கள் என்றேன். காரணம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பு சிலை உடைப்பில் முடிந்தது. அசோகன் படையெடுப்பு (பலமுறை அழைத்தது) என் பட உடைப்பில் முடிந்து விடக் கூடாது என்பதால் கூட்டத்திற்கு வந்து விட்டேன்” என்றார்.

கூட்டத்தில் பலத்த கர ஒலியும், சிரிப்பொலியும் எழுந்தன.

No comments:

Post a Comment