மருத்துவர்களின் சேவைகளை போற்றும் வகையில்
டாக்டர் பி.சி.ராய் பிறந்த மற்றும் இறந்த நாளான ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக
இந்தி யாவில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மார்ச் 30ஆம்
தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
மருத்துவர் பி.சி.ராய் (பிதான் சந்திர
ராய்), பீகாரில் உள்ள பான்கிபூரில் 1888ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர். மருத்துவ
படிப்பை முடித்து விட்டு, பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
பி.சி.ராய், மேற்கு வங்காளத்தின் 2ஆவது முதல்வராக பதவி வகித்தார்.
1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை
தொடர்ந்து 14 ஆண் டுகள் காங்கிரஸ் முதல்வராக தொடர்ந்து இருந்தார். பி.சி.ராய் சுதந்திர
போராட்ட வீரராக மட்டும் இல்லாமல், சிறந்த மருத்து வராகவும் சேவை புரிந்துள்ளார். ஏழை,எளிய
மக்களுக்காக பல மருத் துவமனைகளை தொடங்கினார்.
பி.சி.ராய் முதல்வராக இருந்த போதும்,
எழை,எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மருத்துவம், அரசியல்,
நிர்வாகம், கல்வி என்று பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவருக்கு
1961ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இவரது நினைவை போற்றும் வகையில் மருத்துவம்,
அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு பி.சி.ராய் விருது
வழங்கப் படுகிறது. பி.சி.ராய் தனது 80ஆவது வயதில் 1962ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி இறந்தார்.
அவரது நினைவாகவே அந்த நாளை மருத்துவர்கள்
தினமாக இந்தியாவில் கடைபிடிக்கிறோம்.
No comments:
Post a Comment