Total Pageviews

Monday, July 22, 2013

கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் வெடித்து எண்ணெய் சிதறும் ஏன்?



கொதிக்கும் எண்ணெயில் ஒரு சில சொட்டு தண்ணீர் பட்டால் பலத்த சத்தத்துடன் வெடித்து எண்ணெய் சிதறும். அதே நேரத்தில் கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் பட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இது ஏன்? எண்ணெய் கொதிக்கும் போது அதன் வெப்பம் 150 டிகிரி சென்டி கிரேடுக்கும் அதிகமாக இருக்கும். தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி சென்டிகிரேடு தான்.

இதனால் தான் கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் துளி பட்டதும் அதன் வெப்பம் அதிகரித்து உடனடியாக ஆவியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது தண்ணீர் சூடாகி ஆவியாவது ஆயிரம் மடங்கு வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திடீர் மாற்றம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் பட்டதும் அது சிதறி வெடிக்கிறது. இதற்கு காரணம் தண்ணீரின் கொதிநிலையை விட எண்ணையின் கொதிநிலை அதிகம்.

இதனால் தண்ணீரில் படும் எண்ணெய் மிக விரைவாக ஆவியாவது இல்லை. எனவே தான் தண்ணீரில் எண்ணெய் கொட்டினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.

No comments:

Post a Comment