"அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார்.
நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு.”
அந்த அழகிய நட்பு 2018 மே மாதத்தில் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. பாலகுமாரன் மறைந்து போனார்.
ஆம். இதே மே 15 ல்தான் பாலகுமாரன் இந்த பூமியை விட்டு புறப்பட்டு போனார்.
அவரது இறுதி காலம் முழுவதும் ஆன்மீக அமைதியில் கரைந்து அப்படியே ஆகாயத்தில் கலந்து போனார்.
தன் படங்களுக்கு வசனம் எழுத பாலகுமாரனைப் போல இன்னொருவர் வர இனி வாய்ப்பே இல்லை என ரஜினியே நினைக்கும் அளவுக்கு தனக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் பாலகுமாரன்.
அந்த இடம் இனி என்றென்றும் நிரந்தர காலி இடமாகவே ரஜினியின் வாழ்வில் இருக்கும்.
ஈடு சொல்ல முடியாத சிறப்போடு நடந்து முடிந்தது இந்த உலகத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் வாழ்க்கைப் பயணம்.
ஆம். இதுதான் அழகு.
No comments:
Post a Comment