Total Pageviews

Thursday, November 13, 2025

விபத்தால் சிதைந்து போன ஜனகராஜ்... நீ தான் ராதாவுக்கு ஜோடி என்ற பாரதிராஜா!

 

80களில் நகைச்சுவை நடிகர்களில் ஜனகராஜ் நடிக்காத படங்களே இல்லை எனலாம். அப்போது அவருக்கு சினிமாவில் அந்தளவுக்கு மார்க்கெட் இருந்தது. பாரதிராஜா, பாக்கியராஜ, மணிரத்னம் இவரது நண்பர்கள். ஆரம்பத்தில் ஜெமினிகலர் லேப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்படித்தான் பழக்கமாம். அந்த வகையில் சினிமாவைத் தேடி இவர் போகவில்லை. இவரைத் தேடித்தான் சினிமாவே வந்ததாம்.சத்தமாகப் பேசுவதும், இவரது மெட்ராஸ் பாஷையும் தான் இவரை ரசிகர்கள் கொண்டாட காரணமாயின.

80 முதல் 90 வரை இவர் நடித்த படங்கள் பெரிதும் ரசிக்கப்பட்டன. அதன்பிறகு இவருடைய படங்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. பாரதிராஜா, டெல்லி கணேஷ், மணிரத்னம் இவரது ஆரம்ப கால நண்பர்கள். அதனால் அவர்களது படங்களில் இவர் பெரும்பாலும் நடித்து விடுவார். இவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் முகம் காயமானது.

அப்போது நடந்த அறுவை சிகிச்சையில் இவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்கிறார்கள். ஒரு கண்; சிறியதாகவும், ஒரு கண் பெரியதாகவும் இருப்பதற்கும் இதுதான் காரணமாம். இனி சினிமாவில் எல்லாம் நடிக்கவே முடியாது என்று நினைத்தாராம்.

முகத்தில் அறுவை சிகிச்சை நடந்தபோது பாரதிராஜா பார்க்க வந்தாராம். என் அடுத்த படத்தில் ‘நீ தான் ஹீரோ. ராதாவுக்கு ஜோடி’ என சொல்ல இவரால் நம்பவே முடியவில்லையாம். அதன்பிறகு வந்த படம் தான் காதல் ஓவியம். விபத்தில் சிதைந்த முகமே இவருக்கு அதன்பிறகு சினிமாவில் மார்க்கெட் வர காரணமாயின.

செவப்பு வில்லு என்ற படத்தில் தான் இவர் முதலில் நடித்தார். அதன் பிறகு கன்னிராசி படத்தில் நடித்து பிரபலமானார். கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள், கல்லுக்குள் ஈரம், பாலைவனச்சோலை படங்கள் இவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தன.

படிக்காதவன் படத்தில் என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா என அவர் பேசும்போது தியேட்டரே சிரிப்பலையால் குலுங்கியது. நாயகன் படத்தில் கமலுடன் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார். அதே நேரத்தில் குணச்சித்திர கேரக்டரையும் செய்வார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இவரது காமெடி தூள் கிளப்பும். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அதன்பிறகு இவருக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களே வந்தன. அதற்குள் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோர் வர ஆரம்பித்தனர். அப்போது ஜனகராஜின் படங்கள் குறைய ஆரம்பித்தன. ரஜினியின் அருணாச்சலம், மணிரத்னத்தின் ஆயுத எழுத்து போன்ற ஒரு சில படங்கள் தான் இவருக்குக் கிடைத்தன.

10 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதியின் 96 என்ற படத்தில் நடித்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. அதன்பிறகு நீண்டகாலமாக அவர் கோலிவுட்டில் இருந்து காணாமல் போனார். கடைசியாக தாத்தா என்று ஒரு குறும் படத்தில் நடித்தார். இது தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான படம். நரேஷ் இயக்கியுள்ளார்.

No comments:

Post a Comment