Total Pageviews

Thursday, November 13, 2025

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

 

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஞாபகசக்தி அபாரமானது. அதுபற்றிய ஒரு சம்பவம் உங்கள் பார்வைக்கு...

உயர்ந்த மனிதன் நடிகர் திலகம் சிவாஜியின் 125வது படம். ஏவிஎம் தயாரித்த அந்தப் படத்தை இயக்கியவர் கிருஷ்ணன் பஞ்சு. அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சௌகார் ஜானகி. அந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பொருத்தவரைக்கும் முதலில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குப் பின்னால் ஏவிஎம்மில் தொழிலாளர்கள் பிரச்சனை ஏற்பட்டதால் இடையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காலம் நடைபெறவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போது ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்குவதற்காக சௌகார் ஜானகி செட்டில் நுழைந்தார். அவரைப் பார்த்த உடனே சிவாஜிக்கு அதிர்ச்சி. ‘முதலில் படமாக்கிய காட்சிகளில் புடவையின் கலர் கருப்பு. இப்போது அந்தக் கலர் வேற மாதிரி இருக்கு. அதைக் கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க’ன்னு அங்கு இருந்த உதவி இயக்குனர்களிடம் சிவாஜி சொன்னார்.

அதை அந்த உதவி இயக்குனர் சௌகார் ஜானகியிடம் சொன்னபோது ‘இல்ல இல்ல. நான் போட்டுருந்த புடவை இதுதான்’னு சாதித்தார். சிவாஜி அந்தளவுக்கு உறுதியா சொன்னதனால எடுத்தளவு அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துட்டு முடிவு எடுக்கலாம்னு போட்டுப் பார்த்தார்கள். அப்படிப் போட்டுப் பார்த்த போது சிவாஜி போகல. சௌகார் ஜானகி மட்டும்தான் போனார். பார்த்தபோது தான் தெரிந்தது. அன்றைக்கு கட்டியிருந்தது கருப்புப் புடவைதான் என்று.

அங்கிருந்து படப்பிடிப்பு தளததிற்கு ஓடோடி வந்த சௌகார் ஜானகி சிவாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். என்னை மன்னிச்சிடுங்க. நான் தெரியாம சொல்லிட்டேன். அன்னைக்கு நான் கட்டி இருந்தது கருப்பு புடவை தான் என்றார். அந்தளவுக்கு மன்னிப்பு கேட்டார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் என்னன்னா அதற்கு முன்னாலே சிவாஜிக்கும் சௌகார் ஜானகிக்கும் இடையில் ஒரு மனத்தாங்கல்தான்.

அன்றைக்கு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிவாஜியோட ஞாபகசக்தி தான். உயர்ந்த மனிதன் படத்துக்குப் பின்னாலே எத்தனை படங்களில் சிவாஜி நடித்திருப்பார். அத்தனைப் படங்களில் நடித்த பின்னாலும் அந்தக் குறிப்பிட்ட காட்சியிலே நான் என்ன கலர் புடவை அணிந்திருந்தேன் என்பதை மிகச்சரியாக கூற முடிந்தது என்றால் அவருக்கு எப்பேர்ப்பட்ட ஞாபகசக்தி இருந்து இருக்கும் என்று சௌகார் ஜானகி பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலைத் தொகுத்து வழங்கியவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

No comments:

Post a Comment