இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - பாடல் உருவான கதை...!
நேரத்தை வீணடிக்காத இளையராஜா
"வீணாக நேரம் போகிறது, ஒரு ட்ரையல் பார்ப்போம்" என்று முடிவெடுத்த இளையராஜா, தானே அந்த பாடலை பாடி ஒலிப்பதிவு செய்தார். பிறகு வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போனதற்கு வருந்தினார் யேசுதாஸ். மறுநாள் ஸ்டுடியோவுக்கு வந்த யேசுதாஸிடம், இளையராஜா தான் முன்தினம் பாடிய ட்ரையல் பதிவை கொடுத்தார். "ஒரு முறை கேட்டுவிட்டு தயாராகுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
பாடலைக் கேட்டு கண்ணீர்விட்ட யேசுதாஸ்
பாடலை முழுமையாகக் கேட்ட யேசுதாஸின் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டன. அவர் நேரடியாக இளையராஜாவிடம் சென்று சொன்னார், "இந்தப் பாடலை என்னால் பாட மனசு வரவில்லை. இந்த உணர்வை, இந்த ஆழத்தை என்னால் தர முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்றால், அது உங்கள் குரலில் மட்டுமே சாத்தியம்" என சொல்லி இருக்கிறார். ஆனால் இளையராஜா அவருடைய வெர்ஷனை ரெக்கார்டு செய்துவிடலாம் என காத்திருக்க, அவர் எவ்வளவு வற்புறுத்தியும் யேசுதாஸ் இணங்கவில்லை.
பாட மறுத்த யேசுதாஸ்
இப்படி ஒரு தலைசிறந்த பாடகராக இருந்தும், ஒரு பாடல் சரியான குரலில் வாழ வேண்டும் என்பதற்காக, யேசுதாஸ் தனக்கு வந்த வாய்ப்பை ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார். அன்று இளையராஜாவின் குரலில் உலகிற்கு வந்த அந்த பாடல் தான்... "ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ” பாடல். அந்த பாடல் கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த தாய் மூகாம்பிகை என்கிற படத்தில் இடம்பெற்று இருந்தது. அப்பாடலை இன்று கண்ணை மூடி கேட்டால் கூட உங்களின் கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக அப்பாடலை திறம்பட பாடி இருப்பார் இளையராஜா. அதனால் தான் அது மாஸ்டர் பீஸ் பாடலாக திகழ்கிறது.
தேன் மொழி
No comments:
Post a Comment