Total Pageviews

Wednesday, September 2, 2026

நடிகை "நல்லெண்ணெய்" சித்ரா !

 மிகவும் விசித்திரமான பட்டப்பெயர் கொண்ட நடிகர்கள் பலர் தமிழ் திரையுலகில் இருக்கின்றனர்.

  • அந்த வரிசையில் 10 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 56 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகை "நல்லெண்ணெய்" சித்ராவை பற்றிய பதிவிது.

"நல்லெண்ணெய்" சித்ரா

  • கேரளாவில் உள்ள கொச்சியை சேர்ந்தவர் சித்ரா.இவர் சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார்.
  • இதனை அடுத்து அவர் தனது 10வது வயதில் மலையாள திரைப்படம் ஒன்றில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
  • அதன் பிறகு அவர் பல மலையாள திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் படிப்பையும் ஒரு பக்கம் கவனித்துக் கொண்டிருந்தார்.
  • தவறான நபர்களின் வழிகாட்டுதலால் இவரின் இளம் வயதில் 18+ திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
  • இந்த நிலையில் தான் அவருக்கு ரஜினிகாந்த் அறிமுகமான "அபூர்வ ராகங்கள்" படத்தில் ரஜினியின் கடிதத்தை ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கும் சிறுமியாக நடித்திருந்தார்.
  • அதன்பின் "ரசிகன் ஒரு ரசிகை" என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடம் கிடைத்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனாலும் "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
  • அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தில் சுகாசினியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாக நடித்திருப்பார்.
  • ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்த காட்சிகளில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
  • இந்த நிலையில் தான் அவர் "நல்லெண்ணெய்" விளம்பரம் ஒன்றில் நடித்தார்.அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்ததால் அவருக்கு "நல்லெண்ணெய்" சித்ரா என்ற பெயர் ஏற்பட்டது.
  • இதனை அடுத்து சித்ராவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
  • குறிப்பாக "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் உடன் சித்ரா நடித்த ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மறைந்த நகைச்சுவை நடிகரான மனோபாலா இயக்கியிருந்தார்.
  • அதே போல் பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’, ராம்கி நடித்த ’வெள்ளைய தேவன்’ ஆகிய படங்களில் நடித்த சித்ரா அதன்பின் ‘சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படத்தில் சரத்குமாரின் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்.

கூடுதல் தகவல்:

  • நடிகை சித்ரா கடந்த 1990-ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார்.
  • திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப தலைவியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.
  • எதிர்பாராதவிதமாக கடந்த 2021-ஆம் ஆண்டு சித்ரா மாரடைப்பால் காலமானார்.

நன்றி:கூகிள்(படங்கள்)

1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா!

 Startup Iceland - Building a vibrant, sustainable and antifragile entrepreneurial ecosystem in Iceland - My Grandfather – Padma Shree M.K.Radha

எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.

சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா திருமணம் செய்து கொண்டார். எம்.கே.ராதாவின் அப்பா கந்தசாமி முதலியார் தான் சதி லீலாவதி தயாரிப்பாளர், இயக்குனர்.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, தங்கவேலு ஆகியோரும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்கள்.

எம்.கே.ராதா கதாநாயகனாய் நடித்த ’சந்திரலேகா’(1948) மிகுந்த பொருட்செலவில் ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ரஞ்சன் வில்லன்.

அபூர்வ சகோதரர்கள் 1949ல் வந்தது. எம்.கே.ராதாவுக்கு இரட்டை வேடம்.

1956ம் ஆண்டு பாசவலையில் எம்.கே.ராதா.

சாத்வீகமான நடிகர். கோபத்தைக் கூட அடக்கமாக வெளிப்படுத்திய நடிகர்.

பின்னால் சில படங்களில் கதாநாயகர்களுக்கு அப்பா ரோல் செய்தார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்.கே. ராதாவை பார்க்கப் போயிருந்த எம்.ஆர்.ராதா சொன்னார்: ”அடப் பாவி! எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிற நான் நல்லா இருக்கேன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத நீ நோயாளியாகி விட்டாயே!”

எம்.ஜி.ஆருக்கு எம்.கே.ராதாவின் மீது மிகுந்த மரியாதை.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த போது ஒரு நாள் கோட்டைக்கு போகும் போது திடீரென்று எம்.கே.ராதா வீட்டிற்கு காரை செலுத்தச் சொல்கிறார்.

”அண்ணே! எப்படி இருக்கீங்க” எம்.ஜி.ஆர் ஆரத்தழுவிக்கொள்கிறார்.

முதியவர் ராதா மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

கிளம்பத் தயாராகும் எம்.ஜி.ஆரைப் பார்த்து “ தம்பி! ராமு! எங்க வீட்டுல சாப்பிட்டு விட்டுப் போகலாமே!”

எம்.ஜி.ஆர் தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறார்:

“ உங்க வீட்டு சாப்பாடு இன்னும் என் வயித்துல இருக்குண்ணே!”

”ராமு..”எம்.கே.ராதா உடைந்து போய் விம்முகிறார்

அந்த அளவுக்கு எம் ஜி ஆர் அவர்களின் மேல் பாசம் வைத்து இருந்தார்.

இன்று இவருடைய நினைவு நாள்!

Prashanth

Srinivas


ரஜினி மற்றும் கமலை விட,விஜயகாந்த்,அதிகமான மெகா ஹிட்திரைப்படங்களை கொடுத்தார் என்பது உண்மையா?

 

ரஜினி மற்றும் கமலை விட விஜயகாந்த் அதிகமான மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் என்பது உண்மையா?

நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை.அந்த காலகட்டம் 1984 முதல் 1994 வரை என்று உறுதியாக கூறலாம்.

ஒருபுறம் கமலின் நடிப்பு,வித்தியாசமான படைப்புகள் மறுபுறம் ரஜினியின் ஸ்டைலில் அட்டகாசமான படங்கள் என்று ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவை ஆண்ட தருணம் அது.

அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த இரு ஆளுமைகளையும் மீறி தன் பாணியிலான கமர்சியல் படங்களில் கம்பீரமான வசனத்தாலும் ஆக்ரோஷமான கதாபாத்திரங்களினாலும் மக்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

முக்கியமாக இவரின் படங்கள் பி மற்றும் சி செண்டர்களில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் படங்களை விட வசூலில் சக்கை போடு போட்டது.

1984-இல் மட்டும் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து கொண்டிருந்தார்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 1984-ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் அசுர ஆட்டம் 1994-ஆம் ஆண்டு வரை வெளுத்து வாங்கியது.

அதன்பின் 1995 முதல் 2010 வரை சறுக்கல் இருந்த போதும் சில படங்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.ஆனாலும் இவரை ரசித்த ரசிகர் கூட்டம் கடேசி வரை இவருடன் நிலைத்து நின்றது தான் ஆச்சர்யமாக இருந்தது.

சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கேப்டன் 1984 முதல் 1994 வரை மாஸ் ஹீரோவாய் உயர்ந்து மக்களின் மனதில் இடம்பெற காரணமாக இருந்த படங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.

1984(நூறாவது நாள்,வைதேகி காத்திருந்தாள்)

1985(நானே ராஜா நானே மந்திரி)

1986(அம்மன் கோவில் கிழக்காலே,ஊமை விழிகள்)

1987(கூலிக்காரன்,உழவன் மகன்)

1988(பூந்தோட்ட காவல்காரன்,செந்தூர பூவே)

1989(பாட்டுக்கு ஒரு தலைவன்,பொன்மனச்செல்வன்)

1990(புலன் விசாரணை,சத்ரியன்)

1991(கேப்டன் பிரபாகரன் (100-வது படம்),மாநகர காவல்)

1992(சின்ன கவுண்டர்)

1994(சேதுபதி ஐ பி எஸ்,என் ஆசை மச்சான்)

இதன் பிறகு மிக பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்றால் வானதைப்போல,வல்லரசு,ரமணா மற்றும் சிலவற்றை சொல்லலாம்.

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் ஒரு முன்னணி நடிகர் கேப்டனை பற்றி 1998-ஆம் வருடம் ஒரு நேர்காணலில் சொன்ன சில வார்த்தைகள் .

"தமிழ்நாட்டை பொறுத்த வரை கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் மாஸ் ஆடியன்ஸ் என ரசிகர்களில் 2 வகை இருக்காங்க அதுல மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை நடிகனா ஒத்துக்கணும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி ஒரு பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த் அவர்கள்.

அவரை வைச்சு எங்கப்பா ஒரு படம் எடுக்கும் போது அதுல அவரோட தம்பியா என்னை நடிக்க வைச்சாங்க.திரை அரங்கிற்கு விஜயகாந்த் சாரை பார்க்க வருபவர்கள் என்னையும் கவனிப்பார்கள் என்ற நோக்கத்துடன் தான் அந்த படம் எடுக்கப்பட்டது

முக்கியமாக இந்த காரணத்துக்காக தான் அந்த படம் பண்ணினோம் அந்த படமும் வெற்றி அடைஞ்சது அதுக்கு அப்புறம் நாங்க நினைச்சதெல்லாம் நடந்தது"

இவருடன் சேர்ந்து நாம் நடித்தால் மக்களுக்கு நம் முகம் பரிச்சயமாகி நமக்கு நல்ல எதிர்காலம் திரைத்துறையில் உண்டாகும் என்று ஒருவர் நினைக்கும் அளவுக்கு கேப்டன் இருந்திருக்கிறார் என்றால் அந்த நேரத்தில் கேப்டன் தன் திரைபடங்களால் மக்களை எந்தளவுக்கு கவர்ந்திருப்பார் மற்றும் முன்னணி நாயகனாக இருந்திருப்பார் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.

நன்றி:கூகிள்(படங்கள்)

இந்து மத கோட்பாடுகள் மிகவும் பிடித்த விட்டதால், இந்துவாக மாறிய லிவிங்ஸ்டன் !

 

🌹இந்துவாக மாறிய லிவிங்ஸ்டன் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். பின் 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்

🌹இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் கடந்த 1982ம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி, விரலுக்கேத்த வீக்கம், சுந்தரபுருஷன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமடைந்தார்... தற்போது பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன் சீரியல்களிலும் நடித்து வருகிறார்...

🌹கிறிஸ்டியனாக இருந்த நான் இந்து மத கோட்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்த விட்டதால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்' என்றார்

🌹தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!..

 

🌹தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!..

🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.

🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.

🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.

🌹நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.

🌹இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

🌹ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன் அவர்கள்.

Prashanth

Srinivas

நடிகர் மோகன் சர்மா !

 

கவனிப்பார் யாரும் இல்லாததால் நடிகர் மோகன் சர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமாகியிருப்பது குறித்த செய்தி...

புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது த‌ன்னுடைய 80வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார்.

என்ன நடந்தது?

அவரிடமே பேசினோம்.

''சினிமாவுல பரபரப்பா இயங்கிட்டிருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய 'நம்ம கிராமம்' படத்துல நடிச்ச நடிகை சுகுமாரிக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சப்ப மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவங்களைக் கூப்பிட்டு பாராட்டினாங்க. அந்தப் படத்தை அவங்க பார்க்க விரும்பறதாச் சொல்ல, படத்தைப் போட்டு காமிச்சோம்.

கேரளாவின் பாலக்காடு பகுதிகளில் அந்தக்காலத்துல பிராமண சமுகத்தில் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சாடிய கதை. 'படம் என்னை ரொம்பவே பாதிச்சது'ன்னு சொன்ன அவங்க, படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு வாங்கச் சொல்றேன்'னும் சொன்னாங்க. ஆனா அது நடக்கறதுக்குள்ள அவங்களும் இறந்துட்டாங்க.

தமிழ்நாடு அரசு விருது மட்டுமல்லாம கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது.

முதல் இன்னிங்ஸ் சினிமான்னா அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கயும் நிறைய சீரியல் பண்ணினேன். சினிமா, சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரலை.

வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை வித்த போதும்... அதுலயும் சில வில்லங்கங்கள் வந்து செய்தி மீடியாவுக்கு வந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே.

நாளாக ஆக உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.

இந்தச் சூழல்லதான் முன்னாடி ரோட்டரி கிளப்களில் ஆக்டிவா இருந்த போது தொடர்பிலிருந்த சில நல்ல உள்ளங்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிற இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க.

ஜெயின் சமூகத்தினர் நடத்துகிற இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனாக்கூட வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை.

நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்.

ஃபிலிம் சேம்பர்ல நான் பொறுப்புல இருந்தபோது வயதான காலத்துல இந்த மாதிரி யாராவது நோய் நொடின்னு கஷ்டப்பட்டா அஞ்சு லட்ச ரூபாய் வழங்கலாம்னு ஒரு தீர்மானம் போட்டிருந்தேன்.

அதைச் சுட்டிக்காட்டி சேம்பருக்கு கடிதம் எழுதி உதவக் கேட்டேன். ஆனா அந்த தீர்மானம் திருத்தப்பட்டு விட்டதா தகவல் வந்திருக்கு.

அதாவது இறந்தா அதன் பிறகு அந்தப் பணத்தை வழங்குவாங்களாம்.

'ஏன்ப்பா ஆதரவில்லாம கஷ்டப்படுகிறவனுக்கு அந்தச் சமயத்துல உதவாம, அவன் இறந்த பிறகு யார்கிட்ட போய் அந்தப் பணத்தைக் கொடுப்பீங்க'னு கேட்டா பதில் இல்லை.

என் வயோதிக நாள்கள் இன்னும் என்ன வேதனையையெல்லாம் தரப்போகுதோனு நினைச்சாலே பயமா இருக்கு'' என நா தழுதழுக்க முடித்த மோகன் சர்மா,

``விருது வாங்கிய என்னுடைய 'நம்ம கிராமம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினா மிச்சமிருக்கிற காலத்துக்கு எனக்கு மருந்து மாத்திரை வாங்க அது உதவும். சினிமா உலகத்துல யாராவது இந்த விஷயத்துல எனக்கு உதவினா அவங்களை மறக்கவே மாட்டேன்'' என்றபடி கண் கலங்குகிறார்.

நன்றி: விகடன்

தனியா வாழறவங்களுக்கு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணரவைக்கிறது இவரது வாழ்க்கை.

நன்றி . விகடன!

அன்னக்கிளி சுஜாதா !

 

அன்னக்கிளி படப்பிடிப்பு முடிந்து கடைசி நாள் திருஷ்டி பூசணிக்காய் சுற்றியபோது என் காதுக்குள் -இந்தப் படம் நல்லா போகக்கூடாது சார். போனா திரும்பத் திரும்ப என்னைப் பல படங்களுக்கு ‘புக்’ பண்ணுவாங்க. தொடர்ந்து நான் நடிக்கணும். இதே சித்ரவதையை அனுபவிக்கணும். வேண்டாம் சார்! இந்தப் படம் ஓட வேண்டாம்!’ என்று கண்ணீருடன் சொன்னார்.

அது மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்த தியேட்டர் ‘விசிட்’களில் அவர் கலந்துகொள்ளவே இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவு படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

அந்தப் படத்தின் கதாநாயகி எரிமலையின் உச்சியில் அமர்ந்திருந்தால் எப்படிப் பொங்குவாளோ, அப்படி பொங்கி, ‘சார்! என்னோட கடந்த காலத்தை கேக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயார்னு ஒரு குருவிக்காரனோ, கிளி ஜோசியரோ சொன்னா, பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிட்டு, நடிப்புக்குக் கும்பிடு போட்டுட்டு போயிடுவேன் சார். பணம் காய்க்கும் மரமா என்னை அப்பா அம்மா பயன்படுத்தறாங்க. என் உடம்புக்கு சரியில்லாமப் போனாலும், கால்ஷீட் குடுத்திடறாங்க. எனக்குப் பிடிக்காத கேரக்டரா இருந்தாலும் பணத்துக்காக நடிக்கச் சொல்றாங்க. எனக்குன்னு தனி அக்கவுண்ட் பேங்க்ல கிடையாது. மார்க்கெட் இருக்கிற வரைக்கும் என்னை சாறாப் புழிஞ்சு எடுத்திட்டு, சாகடிக்கப் போறாங்க. என் விருப்பு, வெறுப்பு பத்தி அவங்களுக்கு அக்கறையில்லை. இந்த டார்ச்சர் தாங்காம தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட பல தடவை தோணிச்சு!’ என்று சொன்னபோது, எப்படி அவருக்கு ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

நடிகர் சிவகுமார்! 

என்னமோ போடா மாதவா’! உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...

 

  • அண்ணா நகர் முதல் தெரு 1988 - ல் நடிகர் சத்யராஜ், பிரபு, அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான காலத்தால் அழியாததொரு தமிழ் திரைப்படம்.
  • இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கத்தில், சந்திரபோஸ் இசையமைப்பில் வெளியான இப்படம், மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற 'காந்திநகர் 2வது தெரு' படத்தின் ரீமேக்.

கதைக்களம்:

  • வேலை கிடைக்காமல் சிரமப்படும் சிவராமன் (சத்யராஜ்), தன் நண்பன் மாதவனைத் (ஜனகராஜ்) தேடி சென்னைக்கு வருகிறான்.
  • ‘தன் வீட்டில் அவன் நிரந்தரமாகத் தங்கி விடுவானோ’ என்று அச்சப்படும் மாதவன், நண்பனை வெளியில் கிளப்புவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்.
  • கடைசியில் தன் அலுவலகம் அமைந்திருக்கும் காலனியில் ‘காவலாளி’ வேலை வாங்கித் தருகிறான்.
  • ‘கூர்க்கா’வாக மாறி ஒருவழியாக வேலையில் நிலைபெறும் சிவராமனுக்கு ஓர் அதிர்ச்சி. அவனுடைய முன்னாள் காதலியான லதா (ராதா), அங்குக் குடிவருகிறாள்.
  • ஒரு பிரச்னையால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இவனைத் தெரிந்தது போலவே லதா காட்டிக் கொள்ளாததால் சிவராமன் மனம் உடைந்து போகிறான்.
  • அவனுடைய வேலையில் வேறு பிரச்னைகளும் சேர்கின்றன. மாறுவேடம் கலைகிறது. எனவே அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்கிறான்.
  • இறுதியில் லதாவும் சிவராமனும் சேர்ந்தார்களா என்பதே திரைக்கதை.
  • மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,என்ன கதை சொல்ல சொன்னா என பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
  • இதில் சத்யராஜ் மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் கூட்டணி மிகவும் பேசப்பட்டது.
  • “ஏண்டா மாதவா... உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...” என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சியுடன் ஜனகராஜ் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
  • 1988 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இப்படம், திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் (சூப்பர்ஹிட்) பெற்றது.

Saturday, August 29, 2026

அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! !

 

🌹அபூர்வ ராகங்கள்

படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!

🌹சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த பாலச்சந்தர் அப்போது அவர் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க வைத்தார். சிவாஜி ராவ் என்கிற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார்.

🌹கதைப்படி ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்து சென்ற அவர் ஸ்ரீவித்யாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக புற்றுநோயுடன் திரும்பி வருவார். முதல் நாள் படப்பிடிப்பு. அதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் சிவாஜி ராவ் தூங்கவே இல்லை. விடுதி அறையில் தன்னிடம் தங்கியிருந்தவரிடம் காலை 5 மணிக்கு என்னை அழைத்து செல்ல கார் வரும். 4 மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள் என சொல்லிவிட்டார்.

🌹அவருக்கு தூக்கமே இல்லை. முதல்நாள் முதல் காட்சியில் பேச வேண்டிய ‘நான் பைரவியோட புருஷன்’ என்கிற வசனத்தை பலமுறை சொல்லிப்பார்த்துகொண்டே இருந்தார். எப்போது தூங்கினார் என அவருக்கே தெரியவில்லை. 4.30 மணிக்கு நண்பர்கள் எழுப்பிவிட குளித்துவிட்டு ரெடியாகி மொட்டை மாடியில் நின்றுகொண்டு கார் வருகிறா என்று பார்த்துகொண்டே இருந்தார் சிவாஜி ராவ். ஆனால், வரவில்லை.

🌹சுமார் 6 மணிக்கு கார் வந்தது. வேகமாக கீழே இறங்கி அதில் ஏறிய கார் படப்பிடிப்பு தளத்திற்கு போனது. அங்கு வந்த கமலிடம் ‘ஐ யம் சிவாஜி ராவ் ஃபிரம் பெங்களூர். நீங்கள் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தேன் சிறப்பாக நடித்திருந்தீர்கள்’ என ஆங்கிலத்தில் சொன்னார் சிவாஜி ராவ். புன்னகையுடன் கடந்து சென்றார் கமல்ஹாசன். அதுதான் ரஜினி கமலிடம் முதல் முறையாக பேசியது.

🌹இப்போது ரஜினிக்கு முதல் ஷாட். ‘நான் பைரவியோட புருஷன்’ என வசனம் பேச வேண்டும். ஆனால், ரஜினிக்கு வரவில்லை. அருகில் இருந்த நாகேஷோ அவரை நடிக்க விடாமல் கலாய்த்துக்கொண்டே இருந்தார். நாகேஷை சும்மா இருக்கும்படி அடக்கிவிட்டு ரஜினியை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். ரஜினிக்கு கூட்டத்தை பார்த்து எந்த பயமோ, பதட்டமோ இல்லை. பாலச்சந்தை பார்த்துதான் அவருக்கு பயம். ஒருவழியாக நடித்தார்.

🌹அதன்பின் படம் முடிந்து டப்பிங் வேலை நடந்தது. தனக்கு வேறு நடிகர் குரல் கொடுப்பார் என ரஜினி நினைத்த நிலையில் ரஜினியே பேசட்டும் என பாலச்சந்தர் சொல்லிவிட்டார். எடிட்டிங் அறையில் தன்னை முதன் முதலாக திரையில் பார்க்கிறார் சிவாஜி ராவ். இதற்குத்தானே தவம் கிடந்தார். ஆனால், பாலச்சந்தர் அங்கே இருந்ததால் டப்பிங் பேசவரவில்லை‌.

🌹அவரின் உதவியாளர்களிடம் ‘அவர் இருந்தால் எனக்கு பேசவரவில்லை’ என சொல்ல பாலச்சந்தர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் தான் நடித்த காட்சிகள் முழுவதுக்கும் டப்பிங் பேசி முடித்தார் சிவாஜி ராவ். அதன்பின் அவர்கள், மூன்று முடிச்சி என தொடர்ந்து சிவாஜி ராவை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். இப்படித்தான் ரஜினி என்கிற நடிகர் உருவானார்.

🌹முதல்நாள் ரஜினியை கிண்டலடித்த நாகேஷ் அதன்பின் ரஜினிக்கு சொல்லி கொடுத்தார். பாலு என்ன சொல்கிறானோ, அவர் எப்படி நடித்து காட்டுகிறானோ.. அதை அப்படியே உள்வாங்கி செய்துவிடு. அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என சொன்னார். ஆனால், ரஜினியோ பாலச்சந்தர் சொல்வதுடன் தனது ஸ்டைலையும் கலந்து பேசி பெரிய நடிகராக வளர்ந்துதான் வரலாறு

🌹Prashanth .

16 வயதினிலே !

 

🌹16 வயதினிலே

🌹பாரதிராஜா ஒருபேட்டியில்

🌹ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். '16 வயதினிலே' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன்.

🌹 ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை.

🌹என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி... அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே 'என்ன சார் சொல்றீங்க...' என்று அதிர்ந்தார், ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலை அலையாய் தோன்றி மறைந்தன.

🌹அதன்பின் ஒரு வழியாக '16 வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

என் முதலாளி ராஜ்கண்ணு '16 வயதினிலே' படத்தை முதலில் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்தபிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார்.

🌹கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கொண்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார்.

🌹 என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடித்தபோது மகிழ்ந்துபோனேன்.

🌹அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை.

.

🌹கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. 'மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...' என்று வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு ஸ்ரீதேவி

🌹 '16 வயதினிலே' படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய்

கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் '16 வயதினிலே'.

🌹நான் எத்தனையோ நாயகிகளை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறேன், ஶ்ரீதேவிக்கும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். யாரோடும் ஒப்பிடமுடியாத அபூர்வமான திறமை கொண்டவர் ஶ்ரீதேவி..

Prashanth

Friday, August 28, 2026

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது…

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹


அரசியலில் முக்கியமாக தேவை

 

அரசியலில் முக்கியமாக தேவை

"அனுபவம் "...

அனுபவம் இல்லாதவர் வர கூடாதா என்பது இல்லை... என் கருத்து உங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

அதற்கு ஒரு சிறு கதை...

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க ஒரு இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

ஒருநாள் இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட "இது எப்படி சாத்தியம்!

நான் தினம் நீர் ஊற்றி உரம் போட்டு நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது!

நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது" என்று கேட்க !

அதற்கு அவர் சொன்னார் !

"நீ எல்லாத்தையும் அதற்கு கொடுத்ததால், அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்" என்றார்.

பெரியவர்கள் அனுபவத்தில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் பற்றி எடுத்து சொன்னாலோ, கொஞ்சம் கஷ்டமான காரியம் செய்ய வைத்தாலோ "இந்த கிழத்துக்கு வேற வேலையில்லை சும்மா படுத்திக்கிட்டு இருக்குன்னு " சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள் உருக்கினால் தான் தங்கம் கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும்...!

உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்...!!!

அரசியலில் நிலைத்து நிற்க என்ன வேண்டுமோ செய்யுங்கள்...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

 

தெரியாமல் யாராவது ஏமாற்றி விட்டால் அது அவர்கள் தப்பு இல்லை. தெரிந்தும் ஏமாற்றுவதே தப்பு. அவர்களுக்கு ஆதாயம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பொய்யும் புரட்டும் நிறைந்தது தான் வாழ்க்கையா?

அது சரி. ஏமாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு முடிவுதான் என்ன? காலம் சும்மா விடுமா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இதோ ஒரு அருமையான கதை...

பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக் காரத்தனம். கனவுகளை கட்டி இழுக்க நினைத்தாலும்.. எதார்த்தங்களையே அரவணைக்க வைக்கும் வாழ்க்கை. ஒரு நிஜத்தை சந்திக்க பல நிழல்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களைப் பார்த்து, "அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது? என்று கேட்டான்.

இந்தக் கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர் "வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது" என்றான். இரண்டாவது அறிஞர், "மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது" என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து "அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்" என்று பதில் அளித்தார்

நான்காவது அறிஞர் "அரசே நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது" என்றான்.

ஐந்தாவது அறிஞர் "வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது" என்றார். இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து "அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்.

அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம் அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்".

ஆகவே. அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்கப் பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளைக் கொடுத்துப் பாராட்டினார். அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார், மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலைப் பாராட்டினர்.

நீதி: காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தைத் தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும். காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான

குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே. பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட. உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.