Total Pageviews

Sunday, February 26, 2012

டாடா காற்றின் மூலம் இயங்கும் கார்

'கம்ப்ரஷ்டு ஏர்' எரிபொருளில் செல்லும் புதிய கார்: டாடா தயாரிக்கிறது

காற்றை எரிபொருளாக(கம்ப்ரஷ்டு ஏர்) பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. ரூ.4லட்சம் விலையில் இந்த காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்களால் கார்களுக்கான மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. பேட்டரியில் இயங்கும் கார், ஒயினில் ஓடும் கார் என்று மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், கம்ப்ரஷ்டு காற்றை எரிபொருளாக பயன்படுத்தி செல்லும் புதிய காரை டாடா வடிவமைத்து வருகிறது. பார்முலாஒன் கார் தயாரிப்பு எஞ்சினியர் ஒருவர் வடிவமைத்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கார் டாடா கார் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மினிகேட் என்ற பெயரில் வரும் இந்த கார் பைபர் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இலகுவான எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருவதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காருக்கான எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டர் மூலம் இந்த காரில் 300 கிமீ செல்ல முடியும். ஒரு கம்ப்ரஷ்டு ஏர் சிலிண்டரின் விலை ரூ.100 மட்டுமே ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும்,மற்ற கார்களை போல கார்பன் புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக 6,000 கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாகவும், ரூ.4 லட்சம் விலையில் இந்த காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க!

பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர். அதில் ஒரு முக்கியமான வசதியாக கணினி இல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பது எப்படி...?









இதற்க்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்திருந்தால் எப்படி உபயோகிப்பது என கீழே பாருங்க, பதிவு செய்யாதவர்கள் தொடருங்கள்.

Phone number  பதிவு செய்வது எப்படி:
முதலில் உங்களின் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settingsபகுதிக்கு செல்லுங்கள். அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobileஎன்பதை கிளிக் செய்யுங்கள்.




பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள். 
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrierஎன்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும். 

இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்.)


நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும். 


மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும்.


மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.  இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே Facebook  உபயோகிக்கலாம். எப்படி உபயோகிப்பது என அறிய கீழே பாருங்கள். 


SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:

பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும். 

புதிய நண்பரை சேர்க்க - add your friend name , Subcribe செய்ய - Subscribe your friend name மேலும் விவரமாக அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்.  இதில் உள்ள அனைத்து கட்டளைகளையும் SMS மூலமாக செய்து விடலாம்.



காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு.!!

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம். பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.

Monday, January 23, 2012

பசியின்மை



பசியின்மை

பசியின்மைக்கு சுக்கு, மிளகு, வெல்லம் சேர்த்து அரை டம்ளர் போட்டுக் கொதிக்க வைத்து சுக்குக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

 
* பாதாம் பருப்பு
 
கண் பார்வைக் குறைவு, உடல் அசதி, மிகுந்த களைப்பு உள்ளவர்கள் தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிட்டு வர பதினைந்து தினங்களில் நல்ல குணம் பெறுவர்.

 
* இரத்த சோக
 
ஆப்பிள் பழத்தின் வைட்டமின் ‘ஏ1’, ‘பி2’ உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. ஆப்பிள் இருதயத்திற்கு நல்ல பலன் தரும். இரத்த சோகை உள்ளவர்கள் ஆப்பிளை அதிகமாகச் சாப்பிடலாம்.

 
* இருமல்

பேரீச்சம் பழகத்தை பாலில் வேகவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் நீங்கும்.

Tuesday, December 27, 2011

ஏ. ஆர். ரஹ்மான்

இந்தியத் திரையிசை மேதைகளில்
 இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை "சென்னையின் மொஸாட்" என செல்லமாக அழைக்கப்படும்
ஏ. ஆர். ரஹ்மான்




     ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார் 1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000 




2020இற்குள் வறுமையை இந்தியாவிலிருந்து விரட்டும் நோக்குடன் இவரால் "A. R. Rahman Foundation" எனும் சேவை அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. இதில் எவ்வினத்தவர்க்கும் பாரபட்சமில்லாது ஏராளமான உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றது.

இந்த சாதனை மன்னன், வெற்றியின் மற்றொரு பெயரான 'ரஹ்மான்' பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அவர் பெற்ற விருதுகளில் சர்வதேசப் புகழ்வாய்ந்த விருதுகளின் பெயர்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
                                                                             

ரஹ்மான் Oscar விருதுகளுடன்...
ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-

* Grammy விருது- 2 முறை

* MTV Asia விருது- 2 முறை

* MTV வீடியோ இசை விருது- 1 முறை

* Academy விருது- 2 முறை

* BAFTA விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Golden Globe விருது- 1 முறை

* Satellite விருது- 1 முறை

* World Soundtrack விருது- 1 முறை

* தேசிய திரைப்பட விருது- 4 முறை

* Filmfare விருது- 14 முறை

* Filmfare(தெற்கு) விருது- 12 முறை

* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை

* விஜய் விருது- 1 முறை

* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.

இதை எழுதும்போதுதான் இவ்வருடம் ரஹ்மானுக்கு "பத்மபூஷன்" விருது கிடைத்துள்ளதாக அறிந்தேன். இவை தவிர இவர் பெற்ற விருதுகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது Anna, Aligarh மற்றும் Middlesex ஆகிய பல்கலைக் கழகங்கள் இணைந்து ரஹ்மானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கியதாகும்.

எத்தனை புகழ் தன்னைத் தேடி வந்தாலும் அத்தனையையும் இறைவனிடமே அர்ப்பணித்துவிட்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனும் கொள்கையுடன் வாழ்ந்துவரும் இவ் இணையில்லாக் கலைஞன் அண்மையில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரை நானும் நீங்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்தினால் தப்பேதுமில்லையே?

மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம்



கடல்நீரின் மேல்பகுதி​​ நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) .


பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள்.​ இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும் இவால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும்.​ இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது.​ மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன.

பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும்​​ மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது.​ இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது.​ மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் ​ அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது.​ ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வரை வளரக் கூடியது.

சுமார் 100கிலோ வரை எடையுடைய இம்மீன்கள் 16 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறதாம்.​ ஒரு மீன் மட்டுமே குறைந்தது 2 லட்சம் மைல்களுக்கு மேல் கடலில் பிரயாணம் செய்வதுடன் வெவ்வேறு கடல் பகுதிகளுக்கும் மாறி​​ மாறிச் சென்று கொண்டேயிருக்கும்.

ஒரு மீன் மட்டும் 45லட்சம் முட்டைகள் வரை சங்கிலித் தொடர் போல இடுகிறதாம்.​ இடப்பட்ட முட்டைகள் தட்ப வெட்ப சூழ்நிலைகளைத் தாங்கி அதற்கேற்றவாறு மீன்குஞ்சுகளாக மாறிக் கொள்கின்றன.​ மத்தி​​ வஞ்சிரம்​​ கணவாய் மற்றும் தவளைகள் போன்றவையே இவற்றின் விருப்ப உணவு.​ இந்த மீனும் பெரும்பாலும் மனிதர்கள் சமைத்து சாப்பிடத்தான் பயன்படுகிறது என்றாலும் இவற்றைப் பிடிப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

கடல் விட்டு கடல் மாறிச் சென்று கொண்டே இருப்பதால் இவற்றின் இருப்பிடங்களைச் சரியாக அறிந்து கொண்டு அவற்றைப் பிடிக்க முடிவதில்லை.​ கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் ராக்கெட் வேகத்தில் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 109 கி.மீ வேகத்தில் செல்கிறது . (
68 miles per hour or109 km per hour)

இந்த ஃபாஸ்ட் சுவிம்மிங் ஜீவன்.


USED கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!




புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக்கொண்டு பலர் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வழிமுறைகள் குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப் 10 டிப்ஸ்...

பட்ஜெட்&கார் தேர்வு: செகண்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்தபின்,பட்ஜெட்டிற்கும்,குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும்,தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய ரக ஹேட்ச்பேக் கார் போதுமானது.அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு எஸ்யூவி மாடல்கள் பொருத்தமாக இருக்கும்.அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.

மார்க்கெட் நிலவரம்: நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம்.காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

விற்பனையாளர் தேர்வு: பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.எனவே,நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம்.

மாருதி,ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.

பைனான்ஸ்: பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன.காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள்,டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு,அதி்ல் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

டெஸ்ட் டிரைவ்: விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும்.உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால்,கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம்.தவிர,கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியது என்பதும் அறிந்து கொள்வது அவசியம்.

அதன் மைலேஜ்,காரின் முந்தைய உரிமையாளர்கள் பற்றிய விபரங்களையும் விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.பளபளப்பாக இருக்கும் கார்களை கண்டு ஏமாந்துவிடாதீர்கள். ஏனேனில்,சில விபத்துக்குள்ளான கார்களை சரிசெய்து,ரீப்பெயிண்டிங் அடித்து பளபளப்பாக விற்பனைக்கு வைத்திருப்பர்.

காரின் ஜாதகம்: காரை தேர்வு செய்தபின்,அதன் பதிவுபுத்தகம் (ஆர்.சி.,புக்),சாலை வரி செலுத்தியதற்கான ரசீது,இன்ஷ்யூரன்ஸ்,ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது.

கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால்,கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி.,புத்தகத்தில் ஹைப்பத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால்,விற்பனையாளரிடம் அதை ஆர்.டி.ஒ.,அலுவலகத்திலிருந்து நீக்கி தர சொல்லுங்கள்.

ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும்,காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.

காரின் வரலாறு : பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில்,திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே,காரின் சர்வீஸ் புத்தகம்,டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து காரின் வரலாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால்,நம்பிக்கையான,நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள்.அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கார் டீல்: காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு,காரை வாங்க முடிவு செயதபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள்.காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால்,உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.

பதிவு மாற்றம்:காரை வாங்கும்போது,அதனுடன் சேர்த்து காரின் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் வாங்கிவிடுங்கள்.மேலும்,பழைய உரிமையாளரிடமிருந்து,உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29,காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். http://www.rediffmail.com/cgi-bin/red.cgi?red=http%3A%2F%2Fwww%2Etn%2Egov%2Ein%2Fsta%2FApplicationForms%2Ehtml&isImage=0&BlockImage=0&rediffng=0 என்ற வெப்சைட் முகவரியிலிருந்து மேற்கண்ட பார்ம்களை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில்கொண்டால் நிச்சயம்,அருமையான செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம்.