Total Pageviews

Wednesday, November 16, 2011

உடற்கூறு தத்துவங்கள் 96



1‍‍> உட‌ல் த‌த்துவ‌ம் (இதை நாம் அறிவிய‌லாக‌வும்)
2 > உள்ள‌ (ம‌ன‌து) த‌த்துவ‌ம் (இதை நாம் ஆன்மிக‌மாக‌வும்)

உடற்கூறு தத்துவங்கள் 96
**********************************************
1. பூதம் ————– ——————- 5
2. புலன்கள்———– —————— 5
3. பொறிகள் ———- ————— 5
4. கன்மேந்திரியங்கள் ———–5
5. ஞானேந்திரியங்கள்— ——— 5
6. கரணம் ———– —————- 4
7. அறிவு —————————- 1
8. நாடிகள் ———————— 10
9. வாயுக்கள் ——————— 10
10. ஆசயங்கள்– ——————– 5
11. கோசங்கள்—- —————— 5
12. ஆதாரம் ——- —————– 6
13. தோசம் ——— —————–3
14. மலம் ————- —————-3
15. மண்டலம் ——– —————3
16. ஈடனை ———– —————3
17. குணம் ————— ———— 3
18. வினை ————– ———— 2
19. விகாரம் ———— ———— 8
20. அவஸ்தை ———- ———–5
———————
மொத்தம் 96
———————-



1) ஐம்புதங்கள்
************************
1.நிலம் 2. நீர் 3.தீ 4.காற்று 5.ஆகாயம்
————————————————————————————————–
2) பொறிகள் 5
*******************************
1.மெய் 2.வாய் 3.கண் 4.மூக்கு 5.செவி
—————————————————————————————————-
3)புலன்கள் 5
*****************************
1. பார்த்தல் 2. கேட்டல் 3. சுவைத்தல் 4.நுகர்தல் 5. உணர்தல்
——————————————————————————————————-
4) கன்மேந்திரியங்கள் 5
****************************************
1.வசனம்: இது ஆகாயத்தினிடமிருந்து வசனிக்கும்.
2. தானம்: இது வாயுவினிடமிருந்து இடுதல், ஏற்றல் செய்யும்.
3. கமனம்: இது தேயுவினிடமிருந்து நின்று நடப்பிக்கும்.
4. விசர்கம்:இது அப்புவினிடமிருந்து நின்று மலசலங்களை கழிக்கும்.
5. ஆனந்தம்:இது பிருதிவியினிடமிருந்து நின்று மர்மஸ்தானங்கலில் ஆனந்தத்தை விளைவிக்கும்
——————————————————————————————
5) ஞானேந்திரியங்கள் 5
*************************************
1. சப்தம்: இதை ஆகாயத்தினிடமிருந்தறிவது.
2. ஸ்பரிசம்: இதை வாயுவினிடமிருந்து அறிவது.
3. ரூபம்: இதை தேயுவினிடமிருந்து அறிவது.
4. ரசம்: இதை அப்புவினிடமிருந்து அறிவது.
5.கந்தம்: இதை பிருதிவியினிடமிருந்து அறிவது.
————————————————————————————————-
6) கரணம் 4
**************************
1. மனம்: இது வாயுவின் கூறாக அலைந்து விசையங்களை நினைக்கும்.
2. புத்தி: இது தேயுவின் கூறாக ரூப பேதங்களை தெரிவிக்கும்.
3. அகங்காரம்: இது பிருதிவியின் கூறாக விசையங்களை கொண்டெலுப்பும்.
4. சித்தம்: இது அப்புவின் கூறாக விசையங்களை பற்றசெய்யும்.
————————————————————————————————
7) அறிவு 1
************************
உள்ளம்: இது ஆகாயத்தின் அம்சமகையல் உச்சியில் நின்று சகல விசயங்களையும் நோக்கும். பகுத்தறிவிக்கும்.
—————————————————————————————————
8)நாடிகள் 10
***********************
1. இடகலை: இந்த வத நாடியானது வலது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் மார்க்கமாய் இதயத்திற்கு சென்று, இடப்புறமாய் கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள சந்திர மண்டலத்தை அடைந்து இடது நாசியின் வழியாக சென்று இடக்கரத்தில் பாயும்.



2. பிங்கலை: இந்த பித்த நாடியானது இடது பாத பெருவிரலிலிருந்து கிளம்பி மூலாதாரத்தின் வழியாய் இதயத்தின் வலப்புறமாக கழுத்துவரை ஓடி கத்தரிக்கோல் போல் மாறி சிரசிலுள்ள அக்கினி மண்டலத்தை அடைந்து வலது நாசியின் வழியாக சென்று வலக்கரத்தில் பாயும்.



3. சுழிமுனை: இந்த கப நதியானது இவ்விரண்டிற்கும் இடையே மூலாதாரத்தில் நின்று உச்சிவரை ஓடி சூரிய மண்டலத்தை அடைந்து வலது, இடது நாசித்துவாரங்களுக்கு இடையே இயங்கி நாடு நாடியாய் தையில் முட்டி நிற்பது.



4. சிங்குவை: உள் நாக்கில் நின்று உணவு, நீர் ஆகியவற்றை விழுங்கச் செய்யும்.



5. புருடன்: மூலாதாரத்தில் தொடக்கி வலது கண்ணில் நின்று பார்வையைதரும்.



6.காந்தாரி: மூலாதாரத்தில் தொடக்கி இடது கண்ணில் நின்று பார்வையைதரும்.



7.அத்தி: மூலாதாரத்தில் தொடக்கி வலது காதில் நிற்கும்.



8. அலம்புடை: மூலாதாரத்தில் தொடக்கி இடது காதில் நிற்கும்.



9. சங்கினி: குறியில் நின்று கொடிபோல் சுற்றிக்கொண்டிருக்கும்.



10. குருநாடி: மூலாதாரத்தில் தொடக்கி அபானத்தில் நிற்கும்.
————————————————————————————————–
9) வாயுக்கள் 10
*************************
1) பிராண வாயு: மூலதாரத்தில் தோன்றி மூக்கின் வழியே 12 சென்று மீண்டும் 8 உள்ளே பாய்ந்து 4 அங்குலம் வீணாகும். காற்று வாங்குதலும், விடுதலும் செய்யும். இது தலை, மார்பு, தொண்டை இவற்றில் தங்கும். புரிந்து கொள்ளல் இருதய இயக்கம், உணர்வுகளை தூண்டுதல், மூளை இயக்கம், தும்மல், எப்பம்விடல் ஆகியவற்றை செய்யும். உண்ணும் பல்வேறு உணவுகளை எல்லாம் சீரணிக்கச்செய்யும். நீல நிறமாயிருக்கும். இதற்கு கடவுள் சந்திரன். நாழிகை 1 க்கு 360 சுவாசமாக 1 நாளுக்கு 21600 சுவாசம் உண்டாகும். அவற்றில் 14400 சுவாசம் உள்ளடங்கி 7200 சுவாசம் வெளியேசெல்லும்.இடம்: இருதயம், பித்தத்திற்கு ஆதாரம். வாயுவின் கூறு.



2) அபானவாயு: உடலின் நடுவான ப்க்குவாசயத்தை இருப்பிடமகக்கொண்டு வயிறு முற்றிலும் வாழ்ந்து உண்ட உணவு, நீர்ப்பொருள்களை செரிப்பதற்குரிய அக்கினியை விருத்தி செய்து சரத்தையும், திப்பியையும் வெவ்வேறாக பிரித்து இடுப்பு, தொடை, பிறப்புறுப்புகள், அடிவயறு முதலிய உறுப்புகளை இயங்கச்செய்கிறது. கீழ் நோக்கிச்சென்று மலம், சிறுநீர், விந்து, சூதகம், சிசு முதலியவற்றை வெளிக்கொணரும். இதற்கு கடவுள்: வரதராஜன். வாதத்திற்கு ஆதாரம் . நெருப்பின் கூறு.
3) வியான வாயு: இது தோளிலிருந்து 72000 நாடி நரம்புகளிலும் சென்று உடல் உறுப்புகளை நீட்டல், மடக்கல், நடத்தல், தோலில் நின்று உணர்சியரிதல், கண்சிமிட்டல், விழித்தல், முதலிய தொழில்களை செய்யும். உணவின் சாரத்தை இரத்தத்தில் பரப்பி உடலைக்காக்கும். கடவுள்: யமன். இருப்பிடம்: இருதயம். ஆகயத்தி கூறு.



4) உதான வாயு: இது வயிற்றிலுள்ள சடராக்னியிலிருந்து தோன்றி உணவின் சாரத்தில் சேர்ந்து அதை ஆங்காங்கே நிறுத்தும். மார்புக்கு மேல் மூக்கு வரை மேல்நோக்கிச் சென்று கழுத்து, தொப்புழ், மூக்கு, மூதளியவ்றில் தங்கி பேச்சு, நினைவு உறுப்புகளை இயங்கசெய்கிறது. மனதிடம், உடல்திரம் முதலியவற்றை உண்டாக்குகிறது. நிறம்: மின்னல், கடவுள்: அக்கினிதேவன் மண்ணின் கூறு.



5) சமான வாயு: தொப்புழிலிருந்து கால் வரையிலும் சீரகப்பரவி பிரவாயுக்களை சமனப்படுத்தி நீர், உணவு முதலியவற்றை உடலில் சேர்க்கும். பசயுண்டக்கும். வயிறு, ஈரல் முதலிய உறுப்புகளில் அலைந்து திரியும். நிறம்: புட்பராகம். கடவுள்:சூரியன். கபத்திற்கு ஆதாரம்.



6) நாகன்: கலைகள் அனைத்தையும் கற்குமாறு அறிவை எழுப்பும். பண்களை பாடுவிக்கும். கண்ணிமைத்தல், மயிர் சிலிர்த்தல் முதலிய செயல்களை செய்விக்கும். பொன்னிறம். கடவுள்; அனந்தன்.



7) கூர்மன்: மனதில் தோன்றி கண்ணிலிருந்து இரு விழிகளைப் பார்க்கவும் இமைகளை மூடவும் செய்கிறது. கொட்டாவி விடல், வைமூடல், கண்நீர்விடல் முதலிய செயல்களைச் செய்யும். வெண்மை நிறம். கடவுள்: திருமால்.
கிரிகரன்: நாக்கு, மூக்கு இவற்றில் கழிவையுண்டக்கும். இருமல், தும்மல் வரச்செய்யும். நிறம்: கருமை. கடவுள்: சிவன்.



9)தேவதத்தன்: வட்டவடிவமாய்த் தோன்றி சோம்பளையுண்டக்கும். உடல் முரித்தலைச் செய்யும். தூங்கி எழுந்ததும் களைப்பை உண்டாக்கும். கண்ணை பல இடங்களிலும் உலவச் செய்யும். சண்டையிடல், வதடுதல் செய்யும். நிறம்; படிகம். கடவுள்: தேவேந்திரன்.



10) தனஞ்செய்யன்: வார்த்தைகளை நாவிலிருந்து எழுப்புதல் மூக்கை தடித்து வீங்கச்செய்தல், காதில் கடல்போல் இரைச்சலை உண்டாக்குதல் செய்யும். உடலில் இருந்து உயிர் நீங்கியபின் அனைத்து வாயுக்களையும் வெளிப்படுத்தி மூன்றாம் நாள் தலை வெடித்து பின் வெளியேறும். கடவுள்: தன்வந்திரி நிறம்: நீலம்.
—————————————————————————————————



10) ஆசயங்கள் 5
***********************************
1.அமராசயம்: (இரைப்பை) உண்ட உணவு செரிக்குமிடம்.
2. பகிராசயம்: (சிறுகுடல்) உணவின் சாரம் பிரியுமிடம்.
3. சலாசயம்: (நீர்ப்பை) நீர் பிரியுமிடம்.
4. மலாசயம்: (மலக்குடல்) மலம் பிரியுமிடம்.
5. சுக்கிலாசயம்:(சுக்கிலப்பை) சுக்கிலம் பிரியுமிடம்.
———————————————————————————–
11. கோசங்கள் 5
*************************************
1. அன்னமய கோசம்: தூல சரிரத்தை உடையது.
2. பிராணமயகோசம்: பிராண வாயுவும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.
3.மனோமய கோசம்: மனதும் கண்மேந்திரியங்களும் சேர்ந்தது.
4. விஞ்ஞானமய கோசம்: புத்தியும் பொறிகளும் சேர்ந்தது.
5. ஆனந்தமய கோசம்: காரண உடலுக்கு ஆதாரமானது.
———————————————————————————–
12) ஆதாரம் 6
*****************************
1. மூலாதாரம்: இது காலெலும்பு இரண்டும் கதிரெலும்பு இரண்டும் கூடிய இடம், குய்யத்திற்கும், குதத்திற்கும் இடையே உள்ளது. குண்டலி வட்டமாய் அதன் நடுவே நாலிதழ்களை உடைய வட்டமான கடம்பம் பூவைப் போல இருக்கும். அந்த புஷ்பத்தின் நடுவில் ஓங்கார எழுத்தில் விநாயகர் தேவி வல்லபை தோன்றுவர்.
2.சுவாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு 2 விரல்கடை மேலுள்ளது. நாற்கொனமும் அதன் நடுவே 6 இதழ்களுடைய புஷ்பமும் நடுவில் லிங்க பீடமும் நகார எழுத்தும் நிற்கும். அந்த நகாரத்தின் நடுவில் பிரமன் தேவி சரஸ்வதி தோன்றுவர்.
3. மணிபூரகம்: சுவாதிஷ்டானத்திற்கு 8 விரற்கடை மேல் கோழிமுட்டை வடிவில் 1008 நரம்புகள் சூழ இருக்கும். பிறை வடிவம் அதன் நடுவே 10 இதழ்களுடைய புஷ்பமும், அதன் நடுவே மகார எழுத்தும் அதன் நடுவில் மகாவிஷ்ணு தேவி மகாலட்சுமி அமர்ந்திருப்பர்.
4. அனாகதம்: மணிபூரகத்திற்கு 10 விரற்கடை மேல் முக்கோண வடிவில் 12 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே சிகார எழுத்தும் அதன் நடுவில் ருத்திரனும் தேவி ருத்திரியும் அமர்ந்திருப்பார்.
5.விசுத்தி: அனாகதத்திற்கு 10 விரற்கடை மேல் கண்டஸ்தானத்தில் அறு கோணமாக இருக்கும். அதன் நடுவே 16 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே வகார எழுத்தும் அதன் நடுவில் மகேஷ்வரரும் தேவி ம்கேஷ்வரியும் இருப்பர்.
6. ஆக்கினை: விசுத்திக்கு 12 விரற்கடை மேல் இருக்கும். 3 இதழ்களுடைய புஷ்பமும் அதன் நடுவே யகார எழுத்தும் அதன் நடுவில் சதாசிவனும் தேவி மனோன்மணியும் இருப்பர்.
————————————————————————–
13) தோஷம் 3
*****************************
1.வாதம்: இது வாயுவினால் உற்பத்தியாகி பிராணவாயு பிரசண்டமாகி அக்கினியும் அப்புவுங்கலந்த போது உண்டாவதாம்.
2. பித்தம்: இது தேய்வோடு வாயு சம்பத்தப்பட்ட ஆதாரத்தை முதற்கொண்டு மிகவும் அசைந்து இதய கமலத்தில் ஊன்றியபோது உண்டாவதாம்.
3. கபம்: இது அப்பு, தேயு, வாயு இம்மூன்றும் உடலில் கலவாமல் கலக்கில் உண்டாவதாம்.
———————————————————————————————-
14) மலம் 3
*************************
1.ஆணவம்: நான் என்ற அறியாமையை பிறப்பித்து தன்னுடைய மனைவி, மக்கள் பெரியதென மயக்கமுற்று அபிமானித்திருக்கும்.
2.காமியம்: இது தனது பார்வையால் கண்டவைகளை எல்லாம் அடைய நினைப்பதால் பாவ, புண்ணியங்களை உண்டாக்கவல்லது.
3.மாயை: இது தனது அல்லாததை எல்லாம் தனதாக பாவித்து பிறர்க்கு இடையூறு விளைவிப்பது.
———————————————————————
15) மண்டலம்: 3
******************************
1. அக்கினி மண்டலம்: இது மூலாதாரத்திற்கு மேலே சுவாதிஷ்டானத்திற்கு கீழே முச்சுடராய் உள்ளது.
2. சூரிய மண்டலம்: மனிப்பூரகத்திற்கும் அனாகதத்திற்கும் நடுவில் வளையமாக உந்திக்கு மேலே உள்ளது.
3. சந்திர மண்டலம்: இது விசுத்திக்கு மேலே ஆக்கினைக்கு கீழே சிரசின் மையத்தில் உள்ளது. இத்தனை அமுதகலை என்பர். இதன் நடுவில் பராசத்தி பிரசன்னமாகும்.
——————————————————————————————–
16) ஈடணைகள் 3
************************************
1. தாரேஷனை: பெண்ணாசை கொள்ளல்.
2. புத்திரேஷனை: புத்திரர் மீது ஆசை கொள்ளல்.
3. அர்த்தேஷனை: பொருளாசை கொள்ளல்.
————————————————————————–
17) குணம் 3
*********************************
1. ராஜஷம்: இக்குணம் தர்மம் பிறர் உயிரை தன்னுயிரைப் போல் பாவித்தல் அகங்காரம் பகைவரை வெல்லல் பல சஸ்த்திரங்களை கற்றல் உன்மியாரிதல் புகழ் வேண்டல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.
2. தாமசம்: இக்குணம் வஞ்சனை வழிகடந்து வாதாடல் சோம்பல் நித்திரை கடுங்கோபம் அதிக உணவு ஆகிய குணங்களை கொண்டிருக்கும்.
3. சாத்வீகம்: இக்குணம் பொய் கொலை களவு கோபம் நன்றிமறத்தல் வாயாடல் பழிகூறல் முதலிய குணங்களை கொண்டிருக்கும்.
————————————————————————-
18)வினை 2
**************************
1. நல்வினை: புண்ணியம் தர்மம் முதலியவற்றை கொண்டிருக்கும்.
2. தீவினை: பாவம் கொலை களவு முதலியவற்றை கொண்டிருக்கும்.
—————————————————————————————-
19) விகாரம் 8
****************************
1. காமம்: அதிக ஆசை
2. குரோதம்: சண்டை.
3. உலோபம்: ஈயாமை.
4. மதம்: கர்வம், மதியாமை.
5. மோகம்: பிற பெண்களின் மேல் ஆசை.
6. மாச்சரியம்: மனதில் விரோதம் வைத்தல்.
7.இடும்பை: உதாசீனம்.
8. அசூயை: பொறாமை.
—————————————————————————-
20) அவஸ்தை 5
******************************
1. சாக்கிரம்: (நனவுநிலை) இன்ப துன்பங்களை அனுபவித்தல். இடது நெற்றியில் ஒடுங்கும்.
2. சொப்பனம்: (கனவுநிலை) புலனும் பொறியும் இடம் கழுத்தில் நிற்பது.
3. சுழுத்தி: (மயக்கநிலை) அறிந்ததை பிறர்க்கு கூற முடியாத நிலை இருதயத்தில் நிர்ப்பது.
4. துரியம்: (வாசிநிலை) தொப்பூழ் கமலத்தில் அமைவது.
5. துரியாதீதம்: (பற்றற்றநிலை) உணர்வும் உலகப்பர்ரும் அறியாத நிலை.

திருக்கோயில்களில் செய்யக் கூடாதவை எவை


கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத அல்லது கடைபிடிக்கக் கூடாதவைகளை தெரிந்து கொண்டால் நாம் வணங்கும் கடவுளின் முழுமையான அருளை பயனைப் பெற முடியும்.


* பிரகாரம் வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது

* வீண்வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது

* பிறப்பு, இறப்பு தீட்டுகளுடன் செல்லக் கூடாது

* கோயிலுக்குள் தூங்கக் கூடாது

* கொடிமரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவைகளின் நிழலை மிதிக்க கூடாது

* விளக்கில்லாமல் இருட்டில் வணங்கக் கூடாது

* ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது

* மேலே துண்டு போட்டு வணங்கக் கூடாது

* கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது

* சண்டேஸ்வரிடம் துணியிலிருந்து நூல் கிழித்து வைக்கக் கூடாது

* ஈர ஆடையுடனும், ஓராடையுடனும் தெய்வ வழிபாடு செய்யக் கூடாது

* சந்நிதியில் தீபம் இல்லாத போது வழிபடக் கூடாது

* மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடைபெறும் பொழுது உட்பிரகாரத்தில் வலம் வரக் கூடாது.

* கோயிலுக்குள் இருந்து வீட்டுக்கு திரும்பிய உடனே, கால்களைக் கழவ கூடாது,

* அஷடமி,நவமி, அமாவாசை, பவுர்ணமி, சோமவாரம் ஆகிய நாட்களன்று வில்வ இழைகளை பறிக்க கூடாது.

பிரதோஷ வழிபாடு செய்யுங்கள்!


பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள் பலவிளையும். இது கடம்பவன புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது.


சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம்.


பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.


பிரதோஷத்தன்று ரிஷபதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை கண்டு வணஙகினால் நன்மை பயக்கும்.

தந்தைப் பெரியார் புரட்சி மொழிகள்

  1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
  2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
  3. டநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
  4.  விதியை நம்பி மதியை இழக்காதே.
  5.  மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
  6.  மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
  7.  பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
  8.  பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
  9.  பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
  10.  தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
  11.  கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
  12.  பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
  13.  ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
  15. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
  16. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
  17. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
  18. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
  19. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

ஞானம்

ரு மனிதன் தனது இன்ப துன்பங்களை சமஅளவில் ஏற்றுக்கொள்வதே ஞானம். இந்த ஏற்றுக் கொள்ளுதலில் இது 'இவ்வளவுதான், இப்படித்தான்' என்று தேறுவதும், எல்லாம் 'இறைவன் விட்ட வழி' என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதலுமே ஞானம்.
இந்த பக்குவபடுதலை நாம் 'பட்டறி' மற்றும் 'கெட்டறி' என்கிறோம். அதாவது
· 'பட்டறி' - பட்டால் தான் அறிவு வரும். "தனது அனுபவத்தால் அறிதல்".
 
· 'கெட்டறி' - கெட்டால் தான் தெளிவு வரும். "தவறு செய்தல் மனித இயல்பே ஆனால் அதே தவறை மீண்டும் செய்யாதிருத்தல்".
 
துயரங்கள் நிறைந்த மனதிற்கு ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும். அதனை அறிந்து ஏற்றுக் கொள்ளும் விதமே 'ஞானம்'.
இன்ப துன்பங்களின் இருநிலைகள்:
· முதல்நிலை, நம்மையறியாமல் வருவது நாம் அறியாமல் தீர்க்கப்படுகிறது. இதனையே கடவுளின் அருள் என்கிறோம்.
 
· இரண்டாவது நிலை, நாம் அறிந்து ஏற்படும் துன்பங்களை, நாமே நமது அறிவின் கூர்மையால் தீர்க்கிறோம். இதனை நமதுஅறிவு என்கிறோம்.
 
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்ப துன்பங்கள் சகஜமானபோதிலும்
 
உங்கள் ஞானத்தால் அனைத்திற்கும் நல்ல முடிவை கொடுத்திடமுடியும்


மனதால் முதிர்ச்சியடையுங்கள்


மனதால் முதிர்ச்சியடையுங்கள்
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
 

உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.

கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும்.
 இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும்.
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த அறிவால் காண்கிறான்.
துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால் மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும்.
 கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும்
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும், தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.
 


வாழ்க்கை என்பது


ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது -ஹென்றி போர்டு
நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான். -சாமுவேல் ஜான்சன்.
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

மூன்று வகை - வெளியில் வரும் போது மனிதனாக இரு.



வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன.

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் ஷேக்ஸ்பியர்

மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது
.
நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்

செயல் புரியாத மனிதனுக்கு
தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சபாகிளிஸ்

வாழ்வது சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடுகள் சிரிக்கட்டுமே!

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.
முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

வாழ்க்கை!!ஓராயிரம் கற்பனைகளும்
ஒன்று இரண்டு நிஜங்களும்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்,
செய்ய முடியாதவன் போதிக்கிறான்.- பெர்னாட்ஷா

கடுமையான கஞ்சத்தனம்
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும் -முகமதுநபி

வீட்டுக்குள் இருக்கும் போது
ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியனாக இரு
வெளியில் வரும் போது மனிதனாக இரு.

வாழ்க்கை!

வெற்றிக்குப் பிறகு

தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;

தோல்விக்குப் பிறகு

தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,

மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்

முதுநெல்லியும்

ஒரே மாதிரி.

முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்

 மரங்களைப் போன்றவை.

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.

அவற்றைக் கடந்து சென்றால்

அவை சிறிதாகிவிடும்.

இதுதான் வாழ்க்கை!

கற்பு என்பது

நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை -கவிஞர் வைரமுத்து
எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்! -எட்மண்ட் பர்சி
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!” -கவிஞர் வாலி
வெண்ணெயை உருக்கும்
அதே கதிரவன் தான்
களிமண்ணை இறுக்கவும் செய்கின்றது.
அதிக உயரங்களை எட்டுவதற்கு உதவும் நண்பரைப் பெற்றிருப்பது சிறந்தது. ஆனால், அதிக உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப் பிடிக்கும் நண்பரைப் பெற்றிருப்பது, கடவுளின் பரிசு.
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.

மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.
பேசும்முன் கேளுங்கள்,
எழுதுமுன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

Tuesday, November 15, 2011

காற்றினால் இயங்கும் கார்

காற்றினால் இயங்கும் கார் ஒன்று விரைவில் சாலைகளில் ஓடப்போகிறது, பழைய பார்முலா ஒன் பொறியாளர் நெக்ரேயின் உதவியுடன் டாட்டா இந்த தயாரிப்பில் இறங்கப் போகிறது.
காற்றின் அழுத்தத்தினால் இயங்கும் இந்த வாகனம் முதலில் சோதனைத் தயாரிப்பாக ஆறாயிரம் எனும் எண்ணிக்கையில் இந்தியத் தெருக்களில் ஓடப் போகின்றன. அதுவும் இரண்டாயிரத்து எட்டிலேயே !
இந்த வாகனம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். ஒரு முறை காற்றடித்தால் சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் ஓடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர போக்குவரத்திற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இரண்டு ரூபாய் கொடுத்து ஒருமுறை காற்றடித்தால் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வைக்கும் இந்த கார் அதிக விலை இல்லாமல் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் விலை ரகசியங்கள் வெளிவரவில்லை.
ஒருவேளை காற்றடிக்க இடம் இல்லாமல் போனால் என்ன செய்வது ? அதற்கும் அவர்கள் வழி செய்திருக்கிறார்கள். காரிலேயே இணைக்கப்பட்டிருக்கும் காற்றடிக்கும் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். ஆனால் என்ன ஒரு நான்கு மணி நேரமாகுமாம் அப்படிக் காற்றடிக்க.
இந்தியா உட்பட ஜெர்மனி, இஸ்ரேல் , தென் ஆப்பிரிக்கா என பன்னிரண்டு நாடுகளில் விற்பனைக்கு வரப்போகும் இந்த வாகனமத்திற்கு அமெரிக்காவில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அமெரிக்க சாலைகளின் வேகத்தில் இந்த கார்கள் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்பது அவர்களுடைய விபத்துச் சோதனையின் முடிவு.

பறக்கும் கார்



அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் செயல்படும் ‘டெர்ராபியூசியா டிரான்சிசன்’ எனும் நிறுவனம் ‘பறக்கும் கார்’ கண்டு பிடித்து போக்குவரத்துத்துறையில் புதிய புரட்சியைப் படைக்க வித்திட்டுள்ளது. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. 28 தடவையும் அது வெற்றிகரமாக பறந்துள்ளது.
இந்த பறக்கும் கார், வடிவில் மிகவும் சிறியதாக உள்ளது. 2 பேர் மட்டுமே இதில் பயணம் செய்ய முடியும். பறக்க வேண்டாம் என்று நினைத்தால், சாதாரண கார் போல சாலையில் ஓட்டிச் செல்லலாம். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றாலோ, போக்குவரத்து நெருக்கடி என்றாலோ, வீதியில் சென்றபடியே விண்ணில் தாவி ஏறி பறந்து விட முடியும். எனவே இந்தக் குட்டி காரை, கார் போலவும், விமானம் போலவும் விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தக் குட்டி காரில் 4 சக்கரம் உண்டு. விண்ணில் இருந்து வீதியில் இறங்கும் போது விமானம் போலவே முன் பக்க டயர் உரசியபடி தரை இறங்கும். அந்தச் சமயத்தில் அதில் இணைக்கப்பட்டுள்ள இறக்கைகள் தானாக மடங்கி கொள்ளும். மீண்டும் விண்ணில் பறக்க நினைத்து இயக்கினால், இறக்கைகள் விரிந்து உதவும். இந்த மாற்றத்துக்கு வெறும் 30 வினாடிகளே தேவைப்படும் என்று பறக்கும் காரை உருவாக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்ணில் பறக்கும்போது இந்தக் கார் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதிக பட்சமாக ஒரே மூச்சில் 725 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த பறக்கும் காரில் பயணம் செய்ய முடியும். இன்னும் சில சோதனைகள் செய்து இதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு முதல் பறக்கும் கார்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பறக்கும் காரின் விலை ஒரு கோடி ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த 60 செல்வந்தர்கள் பறக்கும் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.இந்தியாவில் இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்குள் பறக்கும் கார்கள் வர வாய்ப்புள்ளது. பறக்கும் கார் சகஜமாக புழக்கத்துக்கு வர இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

பெண் மொழிகள்

  • பெண் இறைவனின் படைப்புகளில் எல்லாம் அழகானது, மேலானது - மில்டன்
  • எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். - மனு
  • ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது - டிக்கன்ஸ்
  • பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றிற்கும் விளக்கு - ஜேம்ஸ் எல்லீஸ்
  • உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே. -லவல்
  • அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்
  • பெண்ணின் மடியில் இறையன்பு வளர்கிறது - இக்பால்
  • பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.  - சைரஸ்
  • வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை.  - கண்டேகர்
  • நாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான் - மெர்ஸன்
  • பெண்ணின் அன்பும் பரிவும் எங்கிருக்கிறதோ, அங்கு ஆடையும், பண்பும் அடைக்கலம் - மாபசான்
  • பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்
  • ஆணை அடக்கிப் பண்படுத்தவே ஆண்டவன் பெண் பிறவியைப் படைத்திருக்கிறான் - வால்டேர்
  • ஒரு நாட்டில் பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரமே அந்நாடு முன்னேறும். -ஜவஹர்லால் நேரு
  • காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்
  • அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் -ஜெயகாந்தன்
  • பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு - லெனின்
  • சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்- காந்தியடிகள்
  • அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது - டேவிட்ஹ்யூம்
  • ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதைத்தான் சொல்வாள் - ரூஸோ
  • பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ அந்த ஆண்கள் அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகி விடுவர் - ரவீந்திரநாத் தாகூர்

இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது புத்தரின் பொன்மொழிகள்



தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.
அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.


‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்
பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.
வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.
கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.
நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.
கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்.

கணவன், மனைவி உறவு மேம்பட…



    • நியாயமற்ற முறையில் உறவின் சுமையைச் சுமப்பதாக ஒருவர் நினைக்கும்போது கசப்பும், கோபமும் வளரும். துணைகளில் ஒருவர், தன்னை அடுத்தவர் புண்படுத்துவதாக நினைக்கும் போதும் அந்நிலை ஏற்படலாம். எந்த ஒரு உறவாக இருந்தாலும் பேச்சு தொடர்பு என்பது மிகவும் முக்கியம். தமது துணையிடம் உணர்வை பகிர்ந்து கொள்ள எப்படி பேச வேண்டும் என்பதை இருவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
    • அவ்வப்போது உங்கள் துணைக்கு `இன்ப அதிர்ச்சி’ அளியுங்கள். கணவன் அல்லது மனைவியை `ஸ்பெஷலாக’ உணர வைக்கும் பரிசைக் கொடுத்து அசத்துங்கள். வெளி யிடங்களில் புகழ்ந்து பேசுங்கள்.
    • உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படி, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படி துணையை வற்புறுத்தாதீர்கள்.
    • ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டு புழுங்காமல் வெளிபடையாக பேசுங்கள். தம்பதிகள் பரஸ்பரம் அடுத்தவருக்காகவும், தங்களின் உறவுக்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டும். திருமண வாழ்க்கையின் அடிபடை, ஒற்றுமைதான் என்று புரிந்துகொள்ளுங்கள்.
    • குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதற்கு பணம் ஒரு முக்கியக் காரணமாகிறது. இருவரும் சம்பாதிக்கும்போது, குடும்பச் செலவுகளை இருவருமே சமமாக பகிர்ந்துகொள்வதுதான் முறை.
    • பழைய சண்டைகள், பிரச்சினைகளைக் கிளற வேண்டாம். தற்போது நீங்கள் கையாள வேண்டியிருக்கும் நடப்பு பிரச்சினையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
    • துணையின் குடும்பத்தினர், உறவினர்களை மதியுங்கள். நம்மூரில் இது மிகவும் முக்கியம். உங்கள் குடும்பத்தினர், உறவினர் வீட்டு விசேஷங்களில் முதல் ஆளாக நிற்பதில் தவறில்லை. ஆனால் மனைவி தரப்பு நிகழ்வுகளை புறக்கணிப்பது சரியல்ல.
    • கணவன்- மனைவி இணைந்து, ஏதாவது வித்தியாசமான பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். ஒன்றாகச் சேர்ந்து நன்றாக நேரத்தைக் கழிப்பதற்கு ஏதாவது புதுமையான வழியைக் கண்டுபிடிங்கள். உங்கள் இருவருக்கும் பிடித்த உடற் பயிற்சி, விளையாட்டு என்று எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். இருவரும் சேர்ந்து ஒரு புதிய படிப்பில் ஈடுபடுவது கூட நல்லதுதான்.
    • வேலைக்கு என்றும், சொந்த வாழ்க்கைக்கு என்றும் தனித்தனியே நேரத்தை ஒதுக்கி விடுங்கள். உங்களின் அலுவலக பணி, குடும்ப வாழ்க்கையை பாதிக்க அனுமதிக்காதீர்கள். பணியிடத்தின் கஷ்டம், டென்ஷனை வீட்டுக்குச் சுமந்து செல்லாதீர்கள்.
    • வாழ்க்கையின் கஷ்டமான நிலையை உங்கள் துணை கடந்து வரும் போது தான் அவருக்கு உங்களின் உறுதுணை மிகவும் அவசியம். அப்போது அவருக்கு நீங்களே `சோதனை’யாக இருக்காதீர்கள். உரிய நம்பிக்கை, ஊக்கம் அளியுங்கள்




  • மனிதருக்கு யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் முக்கியம்


    முக்கியமான 3 சக்திகள்!

    வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    எந்த மனிதரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்து விட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வார்கள். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்!

    யோகக் கலை: புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது. அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது.

    நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்கரை நோய், மூலநோய், மூட்டு வலிகள் இருப்பவர்கள் கூட இக் கலையினைத் தொடர்ந்து செய்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதை உணர முடியும்.

    எனவே, எந்த மனிதரது உடல் ஆரோக்கியத்திற்கும் யோகக் கலை முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.

    பிராணாயாமக் கலை: உடல் நன்றாக இருந்தால்தானே உயிர் இருக்கும். உயிர் போய் விட்டால் எப்போது தூக்குவார்கள் என்கிறார்கள்? சாலையின் ஓரத்தில் அதிக சுமை ஏற்றி நின்று கொண்டிருக்கும் லாரி அதில் இருக்கும் டயரால்தான் நிற்கிறது என்றாலும், உண்மையில் லாரியின் டயருக்குள் இருக்கும் காற்றால் தான் நிற்கிறது.

    டயரில் நிரம்பி இருக்கும் காற்று இல்லையென்றால், லாரி சாய்ந்து விடும். அதுபோலவே மனித உடலும் மூச்சு என்று கூறப்படும் காற்றால் அதாவது உயிர் சக்தியால்தான் நிற்கிறது. அந்த உயிர்சக்தியை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும் கலைக்கு பிராணாயாமக் கலை என்கின்றனர். நமது உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய் வாய்ப்பட்டிருந்தாலும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து அந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்திவைத்து பழுதான நம் உறுப்பையும் சரிசெய்து விடலாம் என்கிறார்கள் இக்கலையை கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.

    எனவே, எந்த மனிதருக்கும் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பிராணாயாமம் என்ற சக்தியும் முக்கியமான சக்திகளில் ஒன்றாகிறது. பிராணன் போயிருச்சு என்று சொல்லாமல் இருக்கவும் நலமோடும், நீண்ட ஆயுளோடும் இருக்கவும் பிராணாயாமம் அவசியம்.
    தியானம்: நமது உடலில் உள்ளம் என்ற ஓர் உறுப்பு இருக்கிறதா? அது கறுப்பா, சிவப்பா, வெள்ளையா, சிறியதா, பெரியதா என்றால் எதுவும் இல்லை. நமது உடலிலேயே இல்லாத ஓர் உறுப்பை “உள்ளம்’ என்றும் “மனசு’ என்றும் சொல்கிறோம். கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் கூட நமக்கு நினைவுக்கு வரலாம்.

    சூரியனின் ஒளிக்கதிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அக் கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் குவிக்கிற போது அது ஒரு காகிதத்தை கூட எரித்து விடும் சக்தி பெறுகிறது. இதுபோலவே மனதை அலைபாய விடாமல் நமது சொல்படி நடக்க மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. மனதை ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேம்பட்ட ஆற்றல்களை நம்மால் பெற முடியும்.

    எனவே, உள்ளத்தை அதாவது மனதை ஒருமுகப்படுத்திட, மேம்படுத்திட தியானம் என்கிற சக்தியும் முக்கியமானதாகிறது.

    டிரைவர் இருந்தால் தான் காரை ஓட்ட முடியும். காரும் இருந்து டிரைவரும் இருந்து பெட்ரோல் இல்லையேல் கார் ஓடாது. எனவே, கார் ஓட டிரைவரும், பெட்ரோலும் எப்படி முக்கியமோ, அதுபோல உடல் என்கிற காருக்கு மூச்சுக் காற்றான டிரைவரும், மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியான தியானம் என்கிற பெட்ரோலும் இருந்தால் தான் உடல் என்கிற கார் நன்றாக, வேகமாக ஓடும்.

    யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொண்டு அதனை தினசரி செய்யத் துவங்கி விட்டால் உடலில் நோய்களே வர வாய்ப்பில்லை.
    எப்போதும் புத்துணர்வுடனும் இருக்க முடியும். எந்தச் செயலாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்துவிட முடியும். சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.

    சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம், உயர்ந்த சிந்தனைகள், சிறப்பான செயல்பாடுகளுக்கு இவை மூன்றும்தான் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. இந்த மூன்றையும் முறையாகப் பயன்படுத்தியதால்தான் சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.

    நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே ஆகி விட்ட செல்போன் தினசரி சார்ஜ் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதைப்போலவே இந்த 3 சக்திகளையும் நமது உடலில் தினசரி சார்ஜ் செய்யக் கற்றுக் கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும். இல்லையேல் சார்ஜ் ஏற்றப்படாத செல்போனாகி விடுவோம்.

    ஆரோக்கியத்துக்காக தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்கவில்லையெனில், நோய்க்காக தினசரி பலமணி நேரங்களை ஒதுக்கவேண்டிய நிலை வந்துவிடும்!

    முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும்

    உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
     


    மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடியமுள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

    நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி
    (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்)  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


    ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.



    இதன் கொடூரமான குணங்கள் இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது,( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! )இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!



    இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!
     இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


    தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாகமரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.



    உடம்பு முழுதும்விஷம் இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும்உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் ,அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!



    ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.



    காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது
    .


    அறியாமை



    நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்குஉரியதுதான்.



    கேரளாவின்விழிப்புணர்வு



    நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.
     ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


    ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டுபிடித்துஉள்ளனர்.



    நல்லமரம் ஆரோக்கியம் வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம்
    .


    சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?



    இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    மரங்களைவளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....


    இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!


    சர்க்கரை நோய் என்றால் என்ன?


    முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.

    க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

    ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.

    2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

    பல காரணங்களால் இது நிகழலாம்.
    தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
    இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
    போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

    3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?

    யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும்
    45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
    பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள்
    எடை அதிகமாக இருப்பவர்கள்
    ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

    4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

    பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
    அடிக்கடி சிறுநீர் கழிப்பது
    அடிக்கடி தாகம்
    அதிக பசி
    மிக வேகமாக எடை குறைதல்
    அதிகமாக சோர்வடைவது
    கண்பார்வை மங்குதல்
    வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
    திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

    5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

    இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை.
    பார்வை இழப்பு
    மாரடைப்பு
    சிறுநீரகக் கோளாறு
    பக்கவாதம்
    கால்களை இழத்தல்
    கோமா மற்றும் இறப்பு

    பேசுவது எப்படி ?



    Nfhgkha; Ngrpdhy; - Fzj;ij ,og;gha;

    mjpfkha; Ngrpdhy; - mikjpia ,og;gha;

    ntl;டிaha; Ngrpdhy; - Ntiyia ,og;gha;

    Ntfkha; Ngrpdhy;  - mh;j;jj;ij ,og;gha;

    +ngha;aha; Ngrpdhy; - ngaiu ,og;gha;

    Mztkha; Ngrpdhy; - md;ig ,og;gha;

    jukw;W Ngrpdhy; - jd;khdj;ij ,og;gha;

    mehfhPfkha; Ngrpdhy; - Mjuit ,og;gha;

    mtJhwhf Ngrpdhy; - ,iwaUis ,og;gha;

    mePjpahf Ngrpdhy; - midj;ijAk; ,og;gha;

    ஆயிரம் தேவையில்லாத வீண் வார்த்தைக்கு பதில் ஒரு நல் வார்த்தை நன்று. - புத்தர்

    மனிதநேயம்


    பணம் எனும் மந்திரச்சாவி கொண்டு
    வாழ்க்கையை திறக்க முற்படுகின்றோம்
    உயிர் எனும் குகைக்குள் அது
    புதைந்து கிடப்பதை மறந்து

    உலகெங்கும் வன்முறை
    கோரதாண்டம் ஆடிக்கொண்டிருக்கிறது
    எங்கே மனிதநேயம்?
    மனிதநேயம் சில அமைப்புகளுக்கு மட்டுமே
    சொந்தம் என எண்ணுகின்றோம்

    உலகம் நாளை இளைஞர்கள் கையில்
    இன்றே அதன் வம்சங்கள்
    அழிக்கபடுகின்றனவே - எங்ஙனம்
    நாளைய இளைஞர்கள்
    விழித்துகொள்வோம் வன்முறை
    நம் வாசலில் தீ வைக்கும்முன்
    புகட்டுவோம் பிள்ளைகளுக்கு
    மனிதநேயத்தை
    உருவாக்கிடுவோம் நாளைய நம்
    சமுதாயத்தை அமைதியாக