Total Pageviews

Wednesday, November 16, 2011

வாழ்க்கை!

வெற்றிக்குப் பிறகு

தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;

தோல்விக்குப் பிறகு

தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்

நண்பனை காணாவிடத்திலும்,
ஆசானை எவிடத்திலும்,

மனையாளை பஞ்சணையிலும்,
வேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

முதியோர் சொல்லும்

முதுநெல்லியும்

ஒரே மாதிரி.

முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்

 மரங்களைப் போன்றவை.

அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.

அவற்றைக் கடந்து சென்றால்

அவை சிறிதாகிவிடும்.

இதுதான் வாழ்க்கை!

No comments:

Post a Comment