Total Pageviews

Sunday, December 16, 2012

நாய்களுக்கு வெறி பிடித்தால்..?

நாய் கடிக்கு உடனடியாக என்ன செயவேண்டும்?

இப்படி நடந்துகொண்டால் மிருகத்துக்கும் உனக்கும் என்ன வேறுபாடு?

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்து பலர் இவ்வாறு கேட்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

மிருகங்களைப் பார்த்து இந்த அளவு பயப்படும் மனிதர்கள், நாயை மட்டும் செல்லப் பிராணியாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதுதான் இன்றுவரை தொடரும் வியப்பு. நன்றியுணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாகவும், அதனைக் கூறி பெருமிதப் படுகிறார்கள்.

ஆனால், அந்த நாய்களுக்கு வெறிபிடித்து விட்டால் அவையே மனிதர்களைக் கொல்லும் எமனாக மாறுகின்றன.

நாய்களுக்கு வெறி பிடித்தால்..?

வெறிநாய் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். எச்சில் ஒழுகும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன், ஆடு, மாடு, என எதைவும் விட்டுவைக்காமல் கடிக்கும். இதே நிலைதான் வெறி நாய் கடித்து நோய் பரவிய மற்ற உயிர்களுக்கும் ஏற்படும். அந்த வெறிநாய் போலவே அலைந்து திரிந்து மற்றவர்களைக் கடிக்கும்.

வெறிநாய் கடித்த ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கூட எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. பின்னர் 90 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த கொடூரமான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அப்போது சிகிச்சை அளிப்பதற்கான காலம் தாண்டி, சித்திரவதைப் பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

வாயில் எச்சில் ஒழுக, நாயைப் போலவே இரைத்து, குரைத்து, தண்ணீரைக் கண்டால் அலறித்துடித்து, இறுதியில் வெறி கொண்ட நாயாகவே மாறி இறக்கும் கொடூரம் எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஒன்று.

ஆனால் இந்த கொடுமைகள் கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் கூட இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் வேதனை.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் இறந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயதுக் குட்பட்ட சிறுவர், சிறுமியர் என்பதுதான் பரிதாபம்.

சாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி?

கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு வெறிபிடிக்கும்.

தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிராய்லர் கோழிக்கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த கழிவுகள் எந்தப் பாதுகாப்பும் இன்றி பல இடங்களில் கொட்டப்படுகின்றன. பராமரிப்பின்றித் திரியும் தெருநாய்கள் இந்த கழிவுகளைத் தின்பதால், வெறித்தன்மை ஏற்படுகிறது. கோழிகளைச் சுத்தம் செய்யும்போது, அவற்றில் இருக்கும் நஞ்சுப் பகுதியை முதலில் அகற்றுவதைப் பார்த்திருக்கிறோம். இதில், ஆளைக் கொல்லும் கொடும் நச்சுத்தன்மை உள்ளது. கோழிக் கழிவுகளைத் தின்னும் நாய்கள் இவற்றையும் சேர்த்துத் உட்கொள்ளும் போது, அந்த நாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதாவது ரேபீஸ் ((Rabies) என்ற இந்த வைரஸ் அதனுடைய உடலுக்குள் சென்று பல்கிப் பெருகுகிறது. உமிழ்நீர் அதிகம் சுரக்க ஆரம்பிக்கிறது.

இந்த ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட ஒரு நாய் மனிதனைக் கடிக்கும்போதோ காயம் உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ ரேபீஸ் என்ற கொடும் வியாதி மனிதனை தாக்குகிறது. நாய் கடித்த 30 - 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால் தடுப்பு முறையைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும்.

வெறிநாய் கடிக்கான தடுப்பூசி மருந்து அவ்வளவு மலிவானதல்ல என்பதுதான் இதில் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது.

ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களைச் சேர்ந்த வளரும் நாடுகளில்தான் வெறிநாய்க் கடியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தின் விலை 40 முதல் 49 அமெரிக்க டாலர் வரை செலவாகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..

ஆனால், இங்கு அதிக அளவில் வெறிநாய் கடிக்கு ஆளாவது கிராமப்புற ஏழை எளிய மக்கள்தான். இவர்களின் ஒருநாள் சராசரி வருமானம் 1 டாலருக்கும் குறைவுதான் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் 60 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருவதாகவும், நாளொன்றுக்கு அவர்களின் சராசரி வருமானம் 20 ரூபாய் மட்டுமே என்றும், நமது நாட்டின் மத்திய தணிக்கைக் குழுவின் ஆய்வு சொல்கிறது.

இந்த 60 சதவீத மக்கள்தான், அதிக அளவில் வெறிநாய்களிடம் கடிபட்டு, முறையான சிகிச்சை யின்றி, கோரமான நிலைக்கு ஆளாகி தங்களின் உயிரை இழக்கிறார்கள்.

இவ்வளவு பயங்கரத்தையும், கொடூரத்தையும் விளைவிக்கும் வெறிநாய்களைக் கொல்வதற்கு, விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் தடையாக இருப்பதாக கூறப்படுவதுதான் இங்கு விந்தையான வேதனை.

முன்பெல்லாம், நகராட்சிகளில் மட்டுமின்றி, ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் கூட தொல்லை தரும் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் நடைமுறை இருந்தது. தெருநாய்களைப் பிடித்துச் சென்று அவற்றின் இனவிருத்தியைத் தடுப்பதற்கான அறுவை சிகிச்சைகளும் கூட செய்யப்படுவதுண்டு. ஆனால் தற்போது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, எந்த விலங்குகளையும் பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மனிதர்களைக் கொன்றுவிட்டு, வெறிபிடித்த விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லாது என்பதே உண்மை. ஏனென்றால், அந்த சட்டத்தை உருவாக்கியது மனிதர்கள்தானே!

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஏழை மனிதர்களையும், குழந்தைகளையும் குறி வைத்து குதறும் வெறிநாய்களை ஒழித்துக்கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

வெறிநாய்க் கடி குறித்து சில விழிப்புணர்வுக் குறிப்புகள்

வெறிநாய் கடிக்கும்போது மேல் தோல் கிழியாவிட்டால் மேல் தோலுக்கு கீழாக காணப்படும் தசை, டெண்டான் (தசைநார்), லிகாமெண்ட் (தசையை எலும்புகளோடு இணைக்கும் தசைநார்), எலும்புகள் மற்றும் நரம்புகள் போன்ற உறுப்பகள் நசுங்குதல் மற்றும் கிழியக்கூடிய நிலைமைகள் ஏற்படலாம். ஒருவேளை கடிக்கும்போது மேல் தோல் கிழிந்தாலும் மேற்கூறிய நிலைமைகளுடன் வெறி நோய் தொற்றக்கூடும்.

நோய் தொற்றியதற்கான அடையாளங்கள்

· காயத்தைச் சுற்றிலும் வெதுவெதுப்பாக இருத்தல்.

· காயத்தைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுதல்

· வலி தோன்றுதல்

· சீழ் வெளியேறுதல்

· காயத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமாக காணப்படுதல்

· நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் (நெறிகட்டுதல்)

· காய்ச்சல்

· விரல்களை நீட்டவோ அல்லது மடக்கவோ இயலாமை.

· விரல் நுனிகளில் உணர்வுகள் இழத்தல்,

·மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.

உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி

மேலான காயங்கள்

மேலான காயங்களை சோப்பு போட்டு சுடுநீரால் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அல்லது ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு, ஆல்கஹால், டெட்டால் எனப்படும் கிருமி நாசினியைக் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட மருந்து அல்லது பூசும் களிம்பினை வைத்து ஒட்டும் தன்மை இல்லாத கட்டுப் போடும் துணியைக் கொண்டு காயத்தை மூட வேண்டும். காயம் பட்ட இடத்திலுள்ள நரம்புகள் மற்றும் தசை நார்களில் சிதைவு ஏற்பட்ட தற்கான அடையாளங்கள் உள்ளனவா என கவனமாக பார்த்தறிய வேண்டும். சில சமயம் உள்காயம் அல்லது ஊமைக் காயங்கள் ஏற்படும். கடிபட்ட இடம் அல்லது காயம் 10 நாட்களுக்குள் குணமாக வேண்டும். அப்படி ஆறாத பட்சத்தில் அல்லது நோய் தொற்று தலுக்கான அறி குறியோ நரம்பு மற்றும் தசை நார் சிதைவோ காணப் படின் கண்டிப்பாக மருத்துவர் உதவியை நாடவேண்டும்.

இரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருப்பின் அந்த இடத்தை சுத்தமாக நன்கு உலர்ந்த துணியினைக் கொண்டு நேரடியான அழுத்தத்தை செலுத்தி அந்த இடம் மற்ற பகுதிகளை விட உயர எழும்பச் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்படவில்லையெனில், அந்த இடத்தை சுத்தம் செய்ய தேவையில்லை. காயத்தை நோய் தன்மையை உண்டுபண்ணாத பாதுகாப்பான சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

ராபீஸ் எப்படி பரவுகிறது.

ராபீஸ் வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்கினம் ஒருவரை நாக்கினால் நக்குவதினால் அல்லது கடிப்பதினால் கடிபட்ட நபருக்குப் பரவுகிறது.

அனைத்து வெப்ப ரத்தப் பிராணிகளும் ராபீஸ் வைரஸினால் பாதிக்கப் படக்கூடும். மேலும் இந்நோயினைப் பரப்பவும் செய்யும்.

கடிபட்ட பகுதியில் ராபீஸ் வைரஸ் படிந்தவுடன், தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

· கடிபட்ட இடம்

· கடிபட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு

· வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை

· கடிபட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை

மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

ஏன் ரேபீஸ் எப்போதும் மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது?

பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ரேபீஸ் வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்ன?

ராபிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று. எனவே கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடித்து அவசியம் தடுக்க வேண்டும்.

வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் நாய்க்கு ரேபீஸ் தடுப்பு ஊசியை கட்டாயம் போட வேண்டும். மேலும் வீட்டு நாய் தெரு நாய்களுடன் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்தும், எல்லோரையும் கடித்துக்கொண்டும், சாப்பிடாமலும் இருந்தால் அதனை கட்டிப்போட வேண்டும். கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். 10 நாட்களுக்குள் அந்த நாய் இறந்துவிட்டால் ரேபீஸ் நோய்க்கான தடுப்பூசியை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்.

தெருநாய் கடித்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நாய் கடித்தால் அது வெறிநாயா இல்லையா என்பதை கண்டறிவது மிகவும் கடினம். அதனால் வெறிநாய் கடியிலிருந்து தப்ப தெருநாய்களை ஒழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மனித உயிர் வெறிநாய் கடித்து சித்திரவதைப்பட்டு இறப்பதைத் தவிர்க்க சுற்றித் திரியும் தெருநாய்களை ஒழித்தே ஆகவேண்டும்.


Thanks to Dr. M. மகேஸ்வரி
---------------


Thursday, December 13, 2012

ரஜினி ஸ்பெசல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தாய்மொழியான மராத்தியில் இதுவரை ஒரு படம் கூட நடிக்கவில்லை. ரஜினிகாந்தைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்களேன். 

ரஜினிகாந்தின் சொந்த பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது பெற்றோர் மகாராஷ் டிராவைச் சேர்ந்தவர்கள். கர்நாடக தலைநகர் பெங்களூரில் வளர்ந்த ரஜினியின் தாய் மொழி மராத்தி ஆகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்க மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இத்தனை மொழிப் படங்களில் நடித்த அவர் தனது தாய்மொழியில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 


கர்நாடகா போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராகும் முன்பு அவர் பல்வேறு சின்ன சின்ன வேலைகளை செய்துள்ளார். ஊரெல்லாம் கொண்டாடும் ரஜினிக்கு பிடித்த ஹீரோ கமல் தான். சிவாஜி பட வெற்றிக்கு பிறகு ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை அடுத்து ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினி. ரஜினி பெரிய நடிகரான பிறகு கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்துள்ள படங்களில் அவர் இறந்துபோகும் காட்சி கிடையாது. அவர் இறப்பது போன்று காட்சி வைத்தால் அவரது ரசிகர்களின் மனம் புண்படும் என்று இயக்குனர்கள் நினைக்கின்றனர்.

பெங்களூர்ல இளமையான காலத்துல ஒரு தடவை வீட்டுல இருக்குறவங்க எல்லாரும் மோசமா திட்டுனாங்க. மனசே வெறுத்துப் போச்சு.. பேசாம தற்கொலை பண்ணிக்கிற முடிவுக்கு வந்தேன். சாகறத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட் ஒவியர் ரமேஷை பார்க்கனும்னு தோணுச்சு. அவரோட வீடுதேடி போனேன்.. அவர் அங்கே இல்லை. அனுமார் மலைக்கோயிலுக்கு போனதா சொன்னாங்க. தேடிப் போனேன்... மலையில் இருக்குற பாறையில விதவிதமா ஒவியம் வரைஞ்சுகிட்டு இருந்தார். அந்த படங்கள்ல தாடிவச்ச ஒருத்தர் என்னை வெறிச்சு பார்த்து சிரிச்சார். 'உன்னை யாருமே புரிஞ்சுக்கலையா.. கவலையை விடு.. எல்லாத்தையும் என்கிட்டே விட்டுவிடு.. நான் பார்த்துக்கறேன்'னு பேசினார். பிரமிச்சுப் போயிட்டேன். ரமேஷிடம் 'இவர் யாருப்பா'னு கேட்டேன் 'அடப்பாவி இதுகூடவா தெரியாது.. இவர்தான்டா ராகவேந்திரர்'னு சொன்னார்!


பெற்றோர்... எப்போ பார்த்தாலும் என்னோட அம்மா ராம்பாய் 'வெயிலுல அலையாதே.. மறக்காம தலைக்கு எண்ணேய் தேய்ச்சு குளி.. நல்லா சாப்பிடு... வேலையில்லாட்டி பேசாம வீட்டுல படுத்து தூங்கு..'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க! என் வாழ்க்கையோட எதிர்காலத்தைவிட என் உடம்புமேல ரொம்ப அக்கறை. அப்பா கோபக்காரர்.. படிக்கிறப்போ பிடிவாதம் பிடிப்பேன். அதனால் அப்பாவிடம் நிறைய அடிவாங்கிட்டு அப்படியே துங்கிடுவேன். மறுநாள் எதைக்கேட்டு அடம்பிடிச்சோம்... எதுக்காக உதை வாங்கினோம் என்பதே மறந்து போயிடும்.

குருநாதர்.... 'எம்.எஸ்.வி-யை சந்திக்கறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழியில்லை.... சந்திச்ச பின்னாடி சோறுதிங்க நேரமில்லை'னு எம்.எஸ்.விஸ்வநாதனை பத்தி பேசறபோது வாலி சார் அடிக்கடி சொல்லுவார். அப்படித்தான் நானும் கே.பி-சாரைபத்தி சொல்லுவேன். எனக்குள்ளே இருக்குற நடிகனை முதன்முதலா கண்டிபிடிச்ச கடவுள். அப்புறம்தான் உலகத்துக்கே நான் தெரிஞ்சேன். என்னை தெரியவச்சார்! 'காமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே..'னு சொன்னதை இன்னிக்கு வரைக்கும் கடைபிடிச்சுட்டு வர்றேன்.

கண்டக்டர்.... கர்நாடகா டிரான்ஸ்போர்ட்ல கண்டக்டரா வேலை பார்த்தப்போ ராஜ்பகதூர் நண்பனா கிடைச்சான். இப்போகூட ரெஸ்ட் கிடைச்சு பெங்களூரு போனால் வீட்டுலகூட அதிகம் இருக்க மாட்டேன். நண்பர்களோட பொழுது போக்குவேன். இப்போ பணம், பேர், புகழ் எல்லாம் இருக்கு.. ஆனா அப்போ இருந்த சந்தோஷம், நிம்மதி இப்போ டெபனட்டா இல்லை.


எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் ஊரெங்கும் ப்ளெக்ஸ்.... கோவில்களில் சிறப்பு அர்ச்சனை: ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க மாகாண அரசு அழைப்பு! சிறப்பு விருந்தினராக வருமாறு சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க மாகாண அரசு அழைப்பு!

வீடு... ராயப்பேட்டையில விட்டல் வீட்டு மாடியில் குடியிருந்தேன். அப்பவே அந்த ஹவுஸ் ஓனர் பாத்திமா அக்தர் நல்லா பழகுவாங்க. இப்போ நான் போயஸ் கார்டன்ல வசிக்கிற வீடு அந்தக் காலத்துல அவங்களுக்கு சொந்தமானது. நான்தான் விலைக்கு வாங்கினேன்.. இப்போ அதுக்கு பிருந்தாவன்னு பேர் வச்சிருக்கேன்.

ம்னைவி... திருமணம் முடிஞ்ச பிறகுதான் 'ஏண்டா இவ்வளவு லேட்டா கல்யாணம் செய்தோம்னு ஃபீல் செய்யுற அளவுக்கு லதா அன்பா இருந்தாங்க. என்னோட முன்கோபம், சினிமா தொழில்ல இருக்குற ப்ராப்ளம் எல்லாத்தையும் நல்லா உணர்ந்து உறுதுணையா இருக்குறாங்க. அம்மாவுக்கு என்னோட ஆரோக்கியம் முக்கியம்னா, லதாவுக்கு என்னோட எதிர்காலத்து மேல் ரொம்ப ரொம்ப அக்கறை.

ந்ட்பு... நான் கஷ்டபட்ட போதும் சரி... இப்போ வசதியா இருக்கும் போதும் சரி என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர் ஆச்சர்யமான நண்பன். அதுபோல இன்ஸ்ட்டியூட்ல படிச்சப்போ பழகிய நண்பர்கள் எல்லாருமே எனக்கு இப்பவும் நல்ல ப்ரெண்ட்ஸ்! சினிமாவுல, அரசியலுல எல்லாத்துலயும் நண்பர்கள் நிறையபேர் இருக்காங்க!

வாகனம்... நான் பெங்களூர்ல கண்டக்டரா வேலை செஞ்ச பஸ் நம்பர் 10ஏ. சென்னையில முதன்முதலா வாங்கின ஸ்கூட்டர் டிஎன்ஆர்- 4306, அப்புறம் பியட் கார்... இப்போ இன்னோவா!

பட்டம்... 'திரிசூலம்' வெள்ளிவிழா பங்ஷனுக்கு மதுரைக்கு போயிருந்தேன். அப்போ எல்லாரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் அவங்க அவங்க பேரைச்சொல்லி சாமிகிட்டே அர்ச்சனை செஞ்சாங்க. குருக்கள் என்னோட நடத்திரத்தை கேட்டார் 'தெரியாது சாமீ..'னு சொன்னேன். இப்போதான் உண்மை தெரியுது, மக்கள் கொடுத்து இருக்குற பட்டம்தான் (சூப்பர்ஸ்டார்) என்னோட உண்மையான நட்சத்திரம்னு!

மேக்கப்.... 'அபூர்வராகங்கள்' படத்துல முதன்முதலா மேக்கப் போட்ட சுந்தரமூர்த்திதான் 'குசேலன்'வரை எனக்கு மேக்கப் போட்டவர்.

நடிப்பு... படப்பிடிப்புக்கு போகும்போது முக்கியமான காட்சிகள் இருந்தால் என்னோட டயலாக்கை முதல்நாளே வாங்கிட்டுப் போய் வீட்டுல ரிகர்சல் செய்வேன். வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டுல மனப்பாடம் செய்யத் தெரியாம அப்படி செய்யறது இல்லை. மறுநாள் தேவையில்லாம நேரத்தையும், ஃபிலிமையும் வேஸ்ட் பண்ணாம நடிகனும்னு ஒரு அக்கறை அவ்வளவுதான்!

ரசிகர்.... 'அபூர்வ ராகங்கள் ' படத்தை சென்னை கிருஷ்ண வேணி தியேட்டர்ல முதன்முதலா பார்த்தேன். நான் நடிச்ச காட்சியை திரையில பார்த்ததும் சீட்டுல உட்கார்ந்து இருந்த ஒரு சிறுமி என்னை திரும்பி பார்த்தார். படம் முடிஞ்சி வெளியில வரும்போது என்கிட்டே ஓடிவந்த சிறுமி சினிமா டிக்கட் பின்னாடி கையெழுத்து கேட்டார்.. நான் போட்டேன். எனக்கு கிடைச்ச முதல் ரசிகை அந்த சிறுமிதான். அவர் எங்கேனு தேடிக்கிட்டே இருக்கேன். நான் போட்ட முதல் ஆட்டோகிராப் சினிமா டிக்கட் பின்னாலதான்!

Thanks to One India.com

Thursday, September 13, 2012

ஏழைகளுக்கு உதவும் அதிசய பிறவி!


வீடுகளிலும், வங்கி களிலும், பணத்தையும், நகையையும் குவித்து வைத்து, எச்சில் கையில் கூட, காக்கா ஓட்டாத கஞ்ச மகா கருமிகள், நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இல்லையென, கையேந்துவோருக்கு, ஒரு பைசா கூட, கொடுப்பதற்கு, இவர்களுக்கு மனம் வராது. இவர்களிடம், காசு, பணம், கொட்டி கிடந்தாலும், மனிதாபிமானம், சுத்தமாக இருக்காது.

ஆனால், தைவானில், காய்கறி வியாபாரம் செய்து, பிழைப்பை நடத்தும் ஒரு பெண், தான் சம்பாதிப்பதை எல்லாம், ஏழைகளுக்காக வாரிக் கொடுக்கும் அதிசய பிறவியாக வாழ்ந்து வருகிறார். அவரது பெயர், சென் சூ சு. இவருக்கு 60 வயதாகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிழக்கு தைவானின், டாய்டுங் மாகாணத்தில் உள்ள காய்கறிச் சந்தையில், சிறிய அளவில் காய்கறி வியாபாரத்தை துவங்கினார். இளம் வயதில் வறுமையில் வாடியதால், வறுமையின் கொடுமை என்ன என்பதை, நன்கு அறிந்திருந்த சென் சூவுக்கு, இயற்கையிலேயே, ஏழைகளுக்கு உதவும், மனப் பக்குவம் வந்திருந்தது.

இதனால், தன்னுடைய வருமானம் முழுவதையும், ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற காப்பகங்கள் ஆகியவற்றுக்கு வாரி வழங்கினார். கடந்த, 40 ஆண்டுகளில், இதுவரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், தானமாக அளித்துள்ளார். ஊட்டச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், நூலகம் அமைப்பதற்காகவும், உள்ளூரில் உள்ள காப்பகங்களுக்கும், அதிகமான நன்கொடை அளித்துள்ளார்.

நூறு ரூபாய், தானமாக கொடுத்தாலே, பத்திரிகை, புகைப்படக்காரர்களை கூப்பிட்டு, புகைப்படம் எடுத்து, பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொள்வோர் மத்தியில், தன் சம்பாத்தியம் முழு வதையும் வாரி வழங்கும் இவர், தன்னுடைய உதவியைப் பற்றி, வெளியில் யாரிடமும் கூறுவது இல்லை.

தினமும், அதிகாலையில் சந்தைக்கு வந்து, இரவு 8:00 மணி வரை, தீவிரமாக காய்கறி வியாபாரம் செய்கிறார் இவர். ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். "டைம்' மற்றும் "போர்ப்ஸ் ஏசியா' போன்ற பத்திரிகைகள், இவரது சாதனையை, வெளி உலகிற்கு அடையாளம் காட்டினாலும், தனக்கும், அதற்கும், சம்பந்தமில்லாதவர் போல், மிகவும் எளிமையாகவே இருக்கிறார்.

"காய்கறி வியாபாரம் செய்யும் உங்களால், எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல், உதவ முடிந்தது?'என்ற, கேள்விக்கு, மிகவும் பொறுமையாக பதில் அளித்தார்...

"உணவு, உடை உள்ளிட்ட, என்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பணத்தை செலவிடுகிறேன். மற்ற அனைத்தையும், ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். அதனால் தான், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடிந்தது. என் உயிர் உள்ளவரை, தொடர்ந்து ஏழைகளுக்கு உதவுவேன். பீரோக்களில் பணத்தையும், நகைகளையும் அடுக்கி வைத்து, மனிதாபிமானத்தை மறந்து, குப்பையான மனதுடன், என்னால் வாழ முடியாது...' என, அழுத்தம், திருத்தமாக பேசுகிறார். உயர்ந்த லட்சியத்துடன் வாழும் இவர், ஒரு அதிசய பிறவி என்பதில், எந்த சந்தேகமுமில்லை.

Thanks to Dinamalar.com 

பணம் இல்லாதவனுக்கு வீடு  மட்டுமே  உலகம்.

பணம் இருப்பவனுக்கு உலகமே வீடு.


Thursday, September 6, 2012

துறவு என்றால் என்ன ?



வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப் படுகிற பொருள் ஒன்று உண்டு.

பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு.

வண்ணவண்ணமான ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு.

ருசி ருசியாண உணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு.

சம்பத்திக்கச் செல்லாமல் பிச்சை எடுத்து உண்பது துறவு,

குடும்பமாக வாழமல் தனி மனிதனாக வாழ்வது துறவு என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது.

எந்த ஒரு இடத்திலும் தேவைக்கு அதிகமாக செலவ்ழிப்பது ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான்

ஆடம்பரமாக வாழாதீர்கள் அது இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால் உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின் நலனையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது பொருளாதார தத்துவமாக மாறியிருக்கிறது இருக்கிறது.

ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும் பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின் பல்ஸையும் பாதிக்கிறது என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் “அந்த”தேசமும் வளம் பெறும்.

Thursday, July 26, 2012

பெருந்தலைவர் காமராஜர் - கதையல்ல நிஜம்

நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. – (பெருந்தலைவர் காமராஜர் சொன்ன‍து)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார்.

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்து காட்டச் சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள்.

முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்

தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டு ‘நான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.

சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது

தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்..

Tuesday, July 10, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
 

இல்லங்களில் இனிமை என்றும் நிலைத்திருக்க, 

துன்பங்கள் தொலைந்து அமைதியும் ஆனந்தமும் நிலைபெற்று, வாழ 

இறைவனை பிரார்த்திப்போம்!

தீபாவளி என்றால் என்ன?

 
 
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.



கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.