Total Pageviews

Thursday, April 30, 2026

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

 

வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே போவதும் ! கீழே இருப்பவன் மேலே வருவதும் உலக இயல்பு தானே !

பதினாறு வயதினிலேயே சூட்டிங் ...

அப்போது, 4 வகையான உணவு வருமாம்.

முதல் தரம் கமலுக்கானது,

இரண்டாவது தரம் இயக்குனர் பாரதிராஜாவுக்கானது,

மூன்றாவது தரம் ஸ்ரீதேவி உடையது.

மற்றவர்களுக்கு 4வது தர சாப்பாடு. தரம் என்பது, உணவு வகைகளை பொருத்தது.

ரஜினி தினமும் சூட்டிங் வருவாராம்; தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு காட்சியே தரவில்லை.

உண்மையில் அப்போது ரஜினியின் நிலையும் அது தான்

கமல், ஸ்ரீதேவிக்கு அப்போதெல்லாம்

இலட்சங்களில் சம்பளம்,

ரஜினிக்கு அந்த படத்தில் மூன்று ஆயிரம் சம்பளம்

மற்றவர்களை போல அவரை அழைத்து வர அங்கு காரெல்லாம் வராது. அவராக எதையாவது பிடித்து சூட்டிங் ஸ்பாட் வந்து சேர வேண்டும். இதையெல்லாம் கடந்து மதியம் ஒருநாள் உணவுக்காக புரொடக்ஷனில் அமர்ந்துள்ளார்.

அவருடன் மேலும் பல துணை நடிகர்களும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அப்போது அசைவ உணவு கொண்டு வந்ததை அறிந்த ரஜினி, பரிமாறுபவர்களிடம், ‛முட்டை இருந்தா தாங்க...’ என்று கேட்டுள்ளார்.

இப்போ தான் கோழி அடைப்பு எடுத்திருக்கிறது...’ என கிண்டலாக பதிலளித்து, மறுத்து கடந்திருக்கிறார் அங்கு பரிமாறிய நபர். ரஜினி கேட்ட ஒரு முட்டையை அவர் தர மறுத்திருக்கிறார்.

காலங்கள் கடந்தது. ரஜினி...

பெரிய ஹீரோ என்பதை கடந்து,

சூப்பர் ஸ்டாராக நிற்கிறார். பிறகு ஒருபடத்தில் சூட்டிங்கில் 16 வயதினிலே படத்தில் பணியாற்றிய அதே பரிமாறிய நபர், முதல் தர உணவை ரஜினிக்கு பரிமாறியுள்ளார். அந்த நபரை அடையாளம் கண்ட ரஜினி, ‛முட்டை இருக்கிறதா...’ என்று கேட்டுள்ளார். அந்த நபரோ... ‛இதோ... இப்போ கொண்டு வர்றேன்...’ என ஓட முயற்சித்துள்ளார்.

உடனே அவரை அழைத்த ரஜினி, ‛கோழிக்கு இப்போ அடைப்பு எடுக்கலையா...’ என கிண்டலடிக்க, எதிரில் இருந்த நபருக்கு முகத்தில் ஈ ஆடவில்லை. ரஜினி பழசை மறக்கவும் இல்லை;

தன்னை ஒதுக்கப்பட்ட இடத்தில் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி யால்

பதிலடி கொடுத்தவர் ரஜினி

இன்றும் ஷுட்டிங் கில் சகமனிதனாக

அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுவது,

எல்லோரும் சாப்பிட்டார்களா என கேட்பார்

என்று அவருடன் பணியாற்றிவர்கள் சொல்ல கேட்டேன்

தான் கடந்த வந்த பாதை எதையும் மறக்காததால் தான் அவர் இன்றைக்கு இவ்வளவு முன்னேறவும் முடிந்தது.

யாரையும் எப்போதும் இவன் இப்படி தான் என்று

கணிக்க கூடாது என்பது நான் வாழ்க்கையில் கற்ற பாடம் என்று சொல்கிறார்.

உண்மை அது தானே!

முகநூல் பதிவு-பிரசாந்த்!

Monday, April 20, 2026

தஞ்சை பெரிய கோயில் !

 

தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோஷத்தில் ராஜா, ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவில் இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

'ராஜா ராஜா!' என்றழைக்க...

ராஜா ராஜா சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்... அதற்க்கு 'தஞ்சை பெரிய கோயில்' என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

ராஜா ராஜனின் கனவும் கலைந்தது.

விழித்தெழுந்த ராஜா ராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

கோயில் சிற்ப்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்... ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும், பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்... நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

எதோ இந்த ஏழை கிழவியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை... நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

அப்பொழுது இந்த மோர் விற்கும் மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்களும் கல் சரி ஆகாத விஷயத்தை சொன்னோம்.

அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன். அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார். நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

இதை கேட்டதும் ராஜா ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த மூதாட்டி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..."

என்று கண்ணீர் மல்கி...

பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

இந்த கோயில் கட்டியது அந்த அம்மையார் தான்... நான் அல்ல...

இதற்கு இறைவனே சாட்சி என்றான்..."

படித்ததில் பிடித்தது

10 வகையான கணவர்கள் ! உங்கள் கணவர் இதில் எந்த வகை ?

 1: பேச்சிலர் கணவர்

 மனைவியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக காரியங்களைச் செய்பவர். மனைவியை விட தன் நண்பர்களுடன் அதிகம் பழகுவார். திருமண வாழ்க்கைக்கு முக்கித்துவம் தராதவர்.

2: அமிலக் கணவர்

எப்பொழுதும் அமிலம் போல் கொதித்துக்கொண்டே இருப்பவர். எப்போதும் கோபமாக இருப்பவர். வன்முறை மனநிலை, ஆதிக்க மனப்பான்மை உள்ளவர். ஆபத்தானவர்.

3: அடிமை கணவர்

ராஜாவைப் போல தான் நடத்தப்பட வேண்டும் என நினைப்பவர், ஆனால் மனைவியை அடிமையாக நடத்துகிறவர். பழைய பஞ்சாங்கத்தில் ஊறி போனவர்.

4: சராசரி கணவர்

பெரும்பாலான பெண்ணுக்கும் அமையும் கணவர் இவர். மனைவியை விட தோழிகளை அதிகம் நேசிப்பவர். அவர்கள் மேல் ஆர்வம் காட்டுபவர். பெண் தோழிகளுக்கு செலவு செய்வது பிடிக்கும் மேலும் பெண் நண்பர்களும் இவர்களுக்கு அதிகம்.

5: உலர் கணவர்

மிகவும் உலர்ந்த மனநிலை மற்றும் கஞ்சத்தனம் மிக்கவர். மனைவியின் உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாதவர். உறவை சுவாரஸ்யமாக்குவதில்லை. ஊடல் இல்லை. நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லாதவர்.

6: சந்தர்ப்ப கணவர்

மனைவியை பிரச்சனை தீர்பவராகப் பயன்படுத்துகிறார், அவரிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே மனைவியை நேசிப்பார். புத்திசாலி மனைவியின் பலவீனங்களை அறிந்தவர். மனைவியிடமிருந்து வேண்டியதை பெற மனைவின் பலவீனங்களை பயன்படுத்துவார்.

7: ஒட்டுண்ணி கணவன்.

சோம்பேறி மற்றும் பணத்திற்காக மனைவியை மட்டுமே நேசிப்பவர். மனைவியின் பணத்தை காதலிகளுக்காக பயன்படுத்துபவர். எந்த ஆக்கபூர்வமான முன்முயற்சியும் இல்லை மற்றும் வீட்டுப் பொறுப்புகளில் கூட மனைவிக்கு உதவுவதில்லை.

8: குழந்தை கணவர்

பொறுப்பற்ற மற்றும் குழந்தைத்தனமானவர். அவரது தாய், உடன் பிறந்தவர்கள் அல்லது உறவினர்களை கேட்காமல் சொந்தமாக முடிவுகளை எடுக்க தெரியாது; மனைவியை உறவினர்களுடன் ஒப்பிட்டு, ஏதாவது தவறு நடந்தால் எப்போதும் உறவினர்களிடமோ, தாயிடமோ, உடன் பிறந்தவர்களிடமோ ஓடிவிடுவார்.

9: வருகை பதிவேடு கணவர்:

பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, பார்வையாளர் போல வருவார், போவார். குடும்பத்திற்கு அனைத்து பொருள்களையும் வழங்குவார். ஆனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காதவர்.

10: அக்கறையுள்ள கணவர்

அக்கறையும் அன்பும் கொண்டவர். உங்கள் உணர்ச்சிகளை சரியாக கையாள்பவர். குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்குபவர். குடும்ப உறுப்பினர்களுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பவர். மிகவும் பொறுப்பான மற்றும் மனைவியை துணையாகவும், உதவியாளராகவும் கருதுபவர்.

இப்போது உங்களுக்குத் தெரியும்,

உங்கள் கணவர் எந்த வகை என்று !

Saturday, April 18, 2026

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

 

சும்மா ‌படிச்சி தான் பாருங்களேன்..

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த #சும்மா.

அது சரி சும்மா என்றால் என்ன?

பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த சும்மா..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை நாம் அடிக்கடி கூறும் இந்த சும்மா எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்.

1 . கொஞ்சம் சும்மா இருடா?

( அமைதியாக/Quiet)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறிக் கொண்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது!

(அருமை/in fact)

4. இது என்ன சும்மா கிடைக்கும்னு

நினச்சியா?

(இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?

(பொய்/Lie)

6. சும்மா தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.

(உபயோகமற்று/Without use)

7. "சும்மா "சும்மா" கிண்டல் பண்ணுறான்.

(அடிக்கடி/Very often).

8.இவன் இப்படித்தான்.. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பான்.

(எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன்.

(தற்செயலாக/Just)

10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை சும்மா தான் இருக்கிறது.

(காலி/Empty)

11.சொன்னதையே சும்மா சொல்லாதே.

(மறுபடியும்/Repeat)

12.ஒன்றுமில்லாமல் சும்மா போகக் கூடாது.

(வெறுங் கையோடு/Bare)

13. சும்மா தான் இருக்கின்றோம்.

(சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன் சும்மா ஏதாவது உளறுவான்.

(வெட்டியாக/idle)

15.எல்லாமே சும்மா தான் சொன்னேன்.

(விளையாட்டிற்கு/Just for fun)

நாம் அன்றாடம் சொல்லும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல். நாம் பயன்படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது.

உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை. ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்

😏😏😏

Monday, April 13, 2026

நடிகர் விஜய்யை ஏன் பலர் வெறுக்கிறார்கள்?

விஜய் அவர்கள் சினிமாவில் அறிமுக ஆக பெற்றோர்கள் தேவைபடுகிறார்கள்.

விஜய் வளரும் போது ரஜினிகாந்த் தேவை படுகிறார்.

விஜய் தோல்வி பெரும் போது, அவரை ஊக்குவிக்க விஜயகாந்த் தேவை படுகிறார்.

விஜய் வளர்ந்த பிறகு தற்போது அரசியலுக்கு எம்ஜிஆர் தேவைபடுகிறார். இவர் முதல்வர் ஆனால் எம்ஜிஆர் கூட விஜய்க்கு தேவைப் பட மாட்டார் என்பதே நிதர்சனம்!!

ஆக மொத்தம், விஜய் என்னும் குதிரை வெற்றி பெற பலர் திரைக்கு பின்னால் உழைக்கிறார்கள்.

விஜய் வைத்திருக்கும் தளபதி பட்டமும் சரி, தற்போது ஆசைப்படும் சூப்பர் ஸ்டார் பட்டமும் சரி, ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமானது!

விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ரஜினிகாந்த் பாணி தான். விஜய் அவர்களுக்கு என்று தனிப்பட்ட பாதை இல்லை. சுயமாக சொல்ல ஒன்றுமில்லை!!

விஜய் அவர்கள் நல்ல நடிகர், அபாரமான உழைப்பு இதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் அவருடைய நன்றி மறந்த செயல்பாடுகளும் சுயமாக பாதையை உருவாக்காமல், ரஜினிகாந்த் பாதையை பின்பற்றி தற்போது நான் தான் தலைவர், சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களை உசிப்பிவிடுவதும், குட்டி கதைகள் சொல்வதும் தான் அவரை வெறுக்க காரணமாக இருக்கிறது!!

விஜயின் நடனம் பிடிக்கும் அவ்வளவே!!

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை இந்த படமாக தான் இருக்கும்!!

நடிகர் விவேக் !

 

சினிமாவுலகில் எந்த வலுவான பின்புலமும் இல்லாத சாமானியர்களும் திறமையிருந்தால் நுழைய முடியும், தாக்கு பிடித்து வெற்றி பெறலாம் என்று இன்னமும் துளிர் விட்டுக் கொண்டு இருக்கும் நம்பிக்கை விதையை விவேக் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் விதைத்தவர்.

  • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர். வகுப்பில் அடிக்காத லூட்டியில்லை.
  • மதுரை மக்களுக்கே உரிய லந்து, டைமிங் சென்ஸ் இவரிடமும் இருந்தது, கொஞ்சம் அதிகமாகவே..
  • சரியாக K.பாலசந்தரிடம் சென்று அடைக்கலம் ஆனார்.
  • கவுண்டமணியும் செந்திலும் கொடி கட்டி பறந்த காலம்.
  • Intellectual Comedy என்பது மக்களுக்கு தெரியாத நிலையில், மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவை கலைஞன் மனம் தளராது முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
  • சுற்றுசூழலை பாதுகாக்க, ஒரு கோடி மரங்கள் நடுவதை இலக்காக கொண்டு தீவிரமாக இயக்கம் நடத்தி வந்தார்.
  • கலாமின் தீவிர ரசிகர். கலாமுடன் இவரது பேட்டி மிகவும் கேஷுவலாக இருக்கும்.
  • சாலமன் பாப்பையா, பரவை முனியம்மா, பட்டிமன்றம் புகழ் ராஜா போன்றவர்கள் திரை துறையில் நுழைய ஒரு காரணியாக இருந்தார்.

நாகேஷ், மனோரமா, விவேக் இவர்களுக்குள் என்ன ஒற்றுமை தெரியுமா?

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலை தான்.

  • பிற நடிகர்கள் தங்கள் முக தோற்றத்துக்கு மேக்கப் போடுவார்கள்.
  • நகைச்சுவை கலைஞர்கள் மட்டும் தங்கள் மனசுக்கு மேக்கப் போட்டுக் கொண்டு தங்கள் சோகங்கள் வெளியே தெரியாதவாறு பிறரை மகிழ்விப்பார்கள்.

துக்கம் சில நேரம் பொங்கி வரும் போது

மக்கள் மனம் போலே பாடுவேன் நானே!

என் சோகம் என்னோடு தான்!

டெங்கு காய்ச்சலில் தன் அருமை மகனை வாரி கொடுத்து விட்டு, அதிலிருந்து மீண்டவர் போல தம்மை காட்டிக் கொண்டார்.

"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்?"

இவர் சொன்னது வெறும் நகைச்சுவை வசனமல்ல. ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தவை.

பொது வெளி என்றும் பாராமல் இவர் மகன் இறப்புக்கு வந்திருந்த அஜித் கதறி அழுதார். சில விஷயங்களை சிலரால் தான் உணர முடியும்.

"இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" - வாழ்க்கையின் நிதர்சனத்தை ஒரு வரியில் சொன்ன வசனம் இது.

இவர் நடத்தி வந்த மரம் நடும் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருவதே நாம் இவர்க்கு செலுத்தும் உண்மையான மரியாதை.

நடிகர் முரளி !

 

முரளி என்கிற நடிகர் நடித்து 'பூவிலங்கு' வந்த போது முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் கவரது இயல்பான நடிப்பு. இயல்பு என்றால் வாழ்க்கையின் வாசலுக்கு அருகிலே நிற்பது.

பூவிலங்கு படத்தில் எம்.எல்.ஏ மகன் என்கிற ஆணவத்துடன் அவர் திமிராக நடப்பதும் பின் காதலில் விழுந்து தந்தைக்கு எதிராக மாறுவதிலும் அவரிடம் உண்மைத்தன்மை இருந்தது. தன் தந்தையோடு உதவி இயக்குனராக இருந்து அவர் கற்ற பாடம் அந்த அழகான நடிப்புக்கு உதவி இருக்கலாம்.

ஆனந்தம் படத்திலேயே பாருங்கள். சகோதரர்கள் எல்லோரும் கொஞ்சம் சினிமாட்டிக்காக இருப்பார்கள். முரளி கேரக்டர் மட்டும் உண்மையாக இருக்கும். மளிகைக்கடையில் வேலை செய்து மளிகைக்கடை வாடையுடன், பழைய மளிகைக்கடை விளம்பர பனியனை அணிந்து கொண்டு அண்ணன் சொல் பேச்சு மீறாத தம்பி. பின் மனைவி பேச்சை கேட்டு தனியாக கடை வைப்பது என முரளி மனித வாழ்க்கையின் நிகழ்வுகளை அழகாக பிரதிபலித்திருப்பார்.

புதுவசந்தம் படத்தில் நான்கு பேர் நடித்திருந்தாலும் முரளி ஒருவர் மட்டும் நடிப்பில் நம்மை கரையச்செய்வார்.

பாலம் படத்தில் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் கோபக்கார இளைஞனாக அவர் தமிழ் சினிமாவில் செய்த ரீ-என்ட்ரி மகத்தானது. பாலம் மாதிரியான ஒரு படம் அன்றைய புதுமுக இயக்குனரின் அட்டகாசமான முயற்சி.

இதயம் படத்தில் காதலை கடைசி வரை சொல்லாமல் அவர் தவிக்கும் போது படம் முழுக்க நாமும் தவித்துப்போய் விடுவோம். அந்தக்காதல்கள் இன்று இல்லை.

அதர்மம் படத்தில் வீரப்பனின் தம்பியாக அவர் வந்த போது அந்த கிராமத்து கேரக்டருக்கு முரளி நன்றாக பொருந்தி இருந்தார்.

முரளிக்கு தொடக்கம் முதலே ஒரு ஆச்சர்ய நிகழ்வு தமிழ்சினிமாவில் நிகழ்ந்தது. அது முரளிக்காக டியூன் கம்போஸ் செய்து இளையராவே பாடியது. ராஜாபின்னணிப்பாடிய நடிகர்கள் என லிஸ்ட் போட்டால் அதில் முரளி முதலில் நிற்பார். 'ஆத்தாடி பாவாட காத்தாட(பூவிலங்கு)', 'ஒரு ஜீவன் அழைத்தது'(கீதாஞ்சலி), 'பூமாலையே தோள் சேரவா?(பகல் நிலவு)', மாதுளங்கனியே (சாமி போட்ட. முடிச்சு), பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா(இதயம்), 'என் பாட்டு என் பாட்டு'(பூமணி) என பெரிய லிஸ்ட்டே போடலாம்.

ராஜாவின் பாடல் உணர்வுகளை தன் முகத்தில் அழகாக பிரதிபலித்து நடித்த நடிகர்களில் முரளி முதலில் வருவார். பூந்தோட்டம் படத்தில் ஒரு பாடல் மிக அழகு. 'வானத்தில் இருந்து குதிச்சி வந்தேனா?' நல்ல ராஜாபாடல்.

நடிகர் முரளி மறைந்தது ரசிகர்களுக்கு பெரிய இழப்பு என்பதை விட தமிழ்த்திரையுலகுக்கே பெரிய இழப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

முரளியின் காலங்களில் கூட இருந்த மோகன், பிரபு, கார்த்திக் இவர்களை விட முரளி அதிக சம்பளம் வாங்கவில்லையென்றாலும் ஒரு விஷயத்தில் முரளி தான் நம்பர் ஒன்.

எந்த இணை, துணை இயக்குனரும் நேரடியாக சென்று கதை சொல்லி இயக்குனராக ப்ரமோஷன் பெற வேண்டுமானால் முரளி வீட்டு கதவை தட்டலாம். அப்படி அவர் வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் ஏராளம். இதனால் வேறு வேறு பார்வையுடைய திரைப்படங்கள் வரத்தொடங்கியது அப்போது.

இன்று எல்லா நடிகர்களும் வெற்றி பெற்றவரின் பின்னால் தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். முரளி இருந்திருந்தால் நிறைய இயக்குனர்கள் வந்திருக்கலாம்.

தன் சொந்த தந்தை சித்தராமலிங்கையாவையே தமிழில் அறிமுகப்படுத்திய சிறப்பு முரளிக்கு உண்டு.

பூவிலங்கு - அமீர்ஜான்

பகல்நிலவு - மணிரத்னம்

மனோஜ்குமார் - மண்ணுக்குள் வைரம்

வளையல் சத்தம் - ஜீவபாலன்

மீண்டும் மகான் - உத்தமன்

நினைவு சின்னம் - அனுமோகன்

புதுவசந்தம் - விக்ரமன்

பாலம் - கார்வண்ணன்

சிலம்பு - நேதாஜி

நானும் இந்த ஊரு தான் - சேகர் ராஜா

நம்மஊரு பூவாத்தா - மணிவாசகம்

இரவு சூரியன் - நாதன்

பூமணி - களஞ்சியம்

காலமெல்லாம் காதல் வாழ்க - பாலு

ரோஜாமலரே - ஜெயமுருகன்

மனுநீதி - தம்பி ராமையா

ஆனந்தம் - லிங்குசாமி

பாணா காத்தாடி - பத்ரி வெங்கடேஷ்

இதயம் - கதிர்

தினந்தோறும் - நாகராஜ்

சுந்தரா டிராவல்ஸ் - தாஹா.

கனவே கலையாதே - கௌதமன்.

அதர்மம் - ரமேஷ்

எங்கராசி நல்ல ராசி - ரவி-ராஜா

அறிவு மணி - எம்.ஏ.கென்னடி

காமராசு - பி.சி.அன்பழகன்

அள்ளி தந்த வானம் - அருண்பிரசாத்

கண்ணுக்கு கண்ணாக - தயாளன்

ஊட்டி -அன்வர்

ரத்னா - இளஞ்செழியன்

மஞ்சுவிரட்டு - வளையாபதி

மணிக்குயில் - ராஜவர்மன்

அவள் மெல்ல சிரித்தாள் - ஜெய்சுந்தர்

சிறையில் சில ராகங்கள் - ராஜேந்திரகுமார்

நாங்கள் புதியவர்கள் - இளங்கோவன்

நானும் இந்த ஊரு தான் - சேகர்ராஜா

90 படங்களே நடித்தாலும் பல டைரக்டர்களை திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவருக்கு அப்படி ஒரு ராசி இருந்தது. முரளி இன்னும் வாழ்ந்திருக்கலாம்.

...