ரஜினி மற்றும் கமலை விட விஜயகாந்த் அதிகமான மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தார் என்பது உண்மையா?
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை.அந்த காலகட்டம் 1984 முதல் 1994 வரை என்று உறுதியாக கூறலாம்.
ஒருபுறம் கமலின் நடிப்பு,வித்தியாசமான படைப்புகள் மறுபுறம் ரஜினியின் ஸ்டைலில் அட்டகாசமான படங்கள் என்று ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவை ஆண்ட தருணம் அது.
அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த இரு ஆளுமைகளையும் மீறி தன் பாணியிலான கமர்சியல் படங்களில் கம்பீரமான வசனத்தாலும் ஆக்ரோஷமான கதாபாத்திரங்களினாலும் மக்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
முக்கியமாக இவரின் படங்கள் பி மற்றும் சி செண்டர்களில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் படங்களை விட வசூலில் சக்கை போடு போட்டது.
1984-இல் மட்டும் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து கொண்டிருந்தார்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 1984-ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் அசுர ஆட்டம் 1994-ஆம் ஆண்டு வரை வெளுத்து வாங்கியது.
அதன்பின் 1995 முதல் 2010 வரை சறுக்கல் இருந்த போதும் சில படங்கள் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.ஆனாலும் இவரை ரசித்த ரசிகர் கூட்டம் கடேசி வரை இவருடன் நிலைத்து நின்றது தான் ஆச்சர்யமாக இருந்தது.
சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கேப்டன் 1984 முதல் 1994 வரை மாஸ் ஹீரோவாய் உயர்ந்து மக்களின் மனதில் இடம்பெற காரணமாக இருந்த படங்களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு.
1984(நூறாவது நாள்,வைதேகி காத்திருந்தாள்)
1985(நானே ராஜா நானே மந்திரி)
1986(அம்மன் கோவில் கிழக்காலே,ஊமை விழிகள்)
1987(கூலிக்காரன்,உழவன் மகன்)
1988(பூந்தோட்ட காவல்காரன்,செந்தூர பூவே)
1989(பாட்டுக்கு ஒரு தலைவன்,பொன்மனச்செல்வன்)
1990(புலன் விசாரணை,சத்ரியன்)
1991(கேப்டன் பிரபாகரன் (100-வது படம்),மாநகர காவல்)
1992(சின்ன கவுண்டர்)
1994(சேதுபதி ஐ பி எஸ்,என் ஆசை மச்சான்)
இதன் பிறகு மிக பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்றால் வானதைப்போல,வல்லரசு,ரமணா மற்றும் சிலவற்றை சொல்லலாம்.
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் ஒரு முன்னணி நடிகர் கேப்டனை பற்றி 1998-ஆம் வருடம் ஒரு நேர்காணலில் சொன்ன சில வார்த்தைகள் .
"தமிழ்நாட்டை பொறுத்த வரை கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் மாஸ் ஆடியன்ஸ் என ரசிகர்களில் 2 வகை இருக்காங்க அதுல மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை நடிகனா ஒத்துக்கணும் அது ரொம்ப ரொம்ப முக்கியம். அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி ஒரு பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த் அவர்கள்.
அவரை வைச்சு எங்கப்பா ஒரு படம் எடுக்கும் போது அதுல அவரோட தம்பியா என்னை நடிக்க வைச்சாங்க.திரை அரங்கிற்கு விஜயகாந்த் சாரை பார்க்க வருபவர்கள் என்னையும் கவனிப்பார்கள் என்ற நோக்கத்துடன் தான் அந்த படம் எடுக்கப்பட்டது
முக்கியமாக இந்த காரணத்துக்காக தான் அந்த படம் பண்ணினோம் அந்த படமும் வெற்றி அடைஞ்சது அதுக்கு அப்புறம் நாங்க நினைச்சதெல்லாம் நடந்தது"
இவருடன் சேர்ந்து நாம் நடித்தால் மக்களுக்கு நம் முகம் பரிச்சயமாகி நமக்கு நல்ல எதிர்காலம் திரைத்துறையில் உண்டாகும் என்று ஒருவர் நினைக்கும் அளவுக்கு கேப்டன் இருந்திருக்கிறார் என்றால் அந்த நேரத்தில் கேப்டன் தன் திரைபடங்களால் மக்களை எந்தளவுக்கு கவர்ந்திருப்பார் மற்றும் முன்னணி நாயகனாக இருந்திருப்பார் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.
நன்றி:கூகிள்(படங்கள்)
No comments:
Post a Comment