Total Pageviews

Wednesday, September 2, 2026

என்னமோ போடா மாதவா’! உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...

 

  • அண்ணா நகர் முதல் தெரு 1988 - ல் நடிகர் சத்யராஜ், பிரபு, அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் நடிப்பில் வெளியான காலத்தால் அழியாததொரு தமிழ் திரைப்படம்.
  • இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கத்தில், சந்திரபோஸ் இசையமைப்பில் வெளியான இப்படம், மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற 'காந்திநகர் 2வது தெரு' படத்தின் ரீமேக்.

கதைக்களம்:

  • வேலை கிடைக்காமல் சிரமப்படும் சிவராமன் (சத்யராஜ்), தன் நண்பன் மாதவனைத் (ஜனகராஜ்) தேடி சென்னைக்கு வருகிறான்.
  • ‘தன் வீட்டில் அவன் நிரந்தரமாகத் தங்கி விடுவானோ’ என்று அச்சப்படும் மாதவன், நண்பனை வெளியில் கிளப்புவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்.
  • கடைசியில் தன் அலுவலகம் அமைந்திருக்கும் காலனியில் ‘காவலாளி’ வேலை வாங்கித் தருகிறான்.
  • ‘கூர்க்கா’வாக மாறி ஒருவழியாக வேலையில் நிலைபெறும் சிவராமனுக்கு ஓர் அதிர்ச்சி. அவனுடைய முன்னாள் காதலியான லதா (ராதா), அங்குக் குடிவருகிறாள்.
  • ஒரு பிரச்னையால் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். இவனைத் தெரிந்தது போலவே லதா காட்டிக் கொள்ளாததால் சிவராமன் மனம் உடைந்து போகிறான்.
  • அவனுடைய வேலையில் வேறு பிரச்னைகளும் சேர்கின்றன. மாறுவேடம் கலைகிறது. எனவே அந்த இடத்திலிருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்கிறான்.
  • இறுதியில் லதாவும் சிவராமனும் சேர்ந்தார்களா என்பதே திரைக்கதை.
  • மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு,என்ன கதை சொல்ல சொன்னா என பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
  • இதில் சத்யராஜ் மற்றும் ஜனகராஜ் ஆகியோரின் கூட்டணி மிகவும் பேசப்பட்டது.
  • “ஏண்டா மாதவா... உனக்கு மட்டும் எப்படிடா இப்படியல்லாம் தோணுது?! என்னமோ போடா...” என்று தன்னைத்தானே தற்புகழ்ச்சியுடன் ஜனகராஜ் பேசிக் கொள்ளும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
  • 1988 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியான இப்படம், திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் (சூப்பர்ஹிட்) பெற்றது.

Saturday, August 29, 2026

அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! !

 

🌹அபூர்வ ராகங்கள்

படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!

🌹சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த பாலச்சந்தர் அப்போது அவர் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க வைத்தார். சிவாஜி ராவ் என்கிற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார்.

🌹கதைப்படி ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்து சென்ற அவர் ஸ்ரீவித்யாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக புற்றுநோயுடன் திரும்பி வருவார். முதல் நாள் படப்பிடிப்பு. அதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் சிவாஜி ராவ் தூங்கவே இல்லை. விடுதி அறையில் தன்னிடம் தங்கியிருந்தவரிடம் காலை 5 மணிக்கு என்னை அழைத்து செல்ல கார் வரும். 4 மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள் என சொல்லிவிட்டார்.

🌹அவருக்கு தூக்கமே இல்லை. முதல்நாள் முதல் காட்சியில் பேச வேண்டிய ‘நான் பைரவியோட புருஷன்’ என்கிற வசனத்தை பலமுறை சொல்லிப்பார்த்துகொண்டே இருந்தார். எப்போது தூங்கினார் என அவருக்கே தெரியவில்லை. 4.30 மணிக்கு நண்பர்கள் எழுப்பிவிட குளித்துவிட்டு ரெடியாகி மொட்டை மாடியில் நின்றுகொண்டு கார் வருகிறா என்று பார்த்துகொண்டே இருந்தார் சிவாஜி ராவ். ஆனால், வரவில்லை.

🌹சுமார் 6 மணிக்கு கார் வந்தது. வேகமாக கீழே இறங்கி அதில் ஏறிய கார் படப்பிடிப்பு தளத்திற்கு போனது. அங்கு வந்த கமலிடம் ‘ஐ யம் சிவாஜி ராவ் ஃபிரம் பெங்களூர். நீங்கள் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தேன் சிறப்பாக நடித்திருந்தீர்கள்’ என ஆங்கிலத்தில் சொன்னார் சிவாஜி ராவ். புன்னகையுடன் கடந்து சென்றார் கமல்ஹாசன். அதுதான் ரஜினி கமலிடம் முதல் முறையாக பேசியது.

🌹இப்போது ரஜினிக்கு முதல் ஷாட். ‘நான் பைரவியோட புருஷன்’ என வசனம் பேச வேண்டும். ஆனால், ரஜினிக்கு வரவில்லை. அருகில் இருந்த நாகேஷோ அவரை நடிக்க விடாமல் கலாய்த்துக்கொண்டே இருந்தார். நாகேஷை சும்மா இருக்கும்படி அடக்கிவிட்டு ரஜினியை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். ரஜினிக்கு கூட்டத்தை பார்த்து எந்த பயமோ, பதட்டமோ இல்லை. பாலச்சந்தை பார்த்துதான் அவருக்கு பயம். ஒருவழியாக நடித்தார்.

🌹அதன்பின் படம் முடிந்து டப்பிங் வேலை நடந்தது. தனக்கு வேறு நடிகர் குரல் கொடுப்பார் என ரஜினி நினைத்த நிலையில் ரஜினியே பேசட்டும் என பாலச்சந்தர் சொல்லிவிட்டார். எடிட்டிங் அறையில் தன்னை முதன் முதலாக திரையில் பார்க்கிறார் சிவாஜி ராவ். இதற்குத்தானே தவம் கிடந்தார். ஆனால், பாலச்சந்தர் அங்கே இருந்ததால் டப்பிங் பேசவரவில்லை‌.

🌹அவரின் உதவியாளர்களிடம் ‘அவர் இருந்தால் எனக்கு பேசவரவில்லை’ என சொல்ல பாலச்சந்தர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் தான் நடித்த காட்சிகள் முழுவதுக்கும் டப்பிங் பேசி முடித்தார் சிவாஜி ராவ். அதன்பின் அவர்கள், மூன்று முடிச்சி என தொடர்ந்து சிவாஜி ராவை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். இப்படித்தான் ரஜினி என்கிற நடிகர் உருவானார்.

🌹முதல்நாள் ரஜினியை கிண்டலடித்த நாகேஷ் அதன்பின் ரஜினிக்கு சொல்லி கொடுத்தார். பாலு என்ன சொல்கிறானோ, அவர் எப்படி நடித்து காட்டுகிறானோ.. அதை அப்படியே உள்வாங்கி செய்துவிடு. அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என சொன்னார். ஆனால், ரஜினியோ பாலச்சந்தர் சொல்வதுடன் தனது ஸ்டைலையும் கலந்து பேசி பெரிய நடிகராக வளர்ந்துதான் வரலாறு

🌹Prashanth .

16 வயதினிலே !

 

🌹16 வயதினிலே

🌹பாரதிராஜா ஒருபேட்டியில்

🌹ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். '16 வயதினிலே' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன்.

🌹 ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை.

🌹என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி... அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே 'என்ன சார் சொல்றீங்க...' என்று அதிர்ந்தார், ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலை அலையாய் தோன்றி மறைந்தன.

🌹அதன்பின் ஒரு வழியாக '16 வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

என் முதலாளி ராஜ்கண்ணு '16 வயதினிலே' படத்தை முதலில் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்தபிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார்.

🌹கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கொண்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார்.

🌹 என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடித்தபோது மகிழ்ந்துபோனேன்.

🌹அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை.

.

🌹கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. 'மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...' என்று வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு ஸ்ரீதேவி

🌹 '16 வயதினிலே' படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய்

கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் '16 வயதினிலே'.

🌹நான் எத்தனையோ நாயகிகளை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறேன், ஶ்ரீதேவிக்கும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். யாரோடும் ஒப்பிடமுடியாத அபூர்வமான திறமை கொண்டவர் ஶ்ரீதேவி..

Prashanth

Friday, August 28, 2026

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது…

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹

 

சில தேவதைகளுக்கு இறக்கைகள் இருக்காது… ❤️

அவர்கள் நம்ம வாழ்க்கைக்குள் ஒரு சாதாரண மனிதராகத்தான் வருவார்கள். நமக்கு கஷ்டம் வந்த நேரத்தில் ஒரு கை கொடுப்பார்கள்…

மனம் உடைந்த நேரத்தில் ஒரு வார்த்தையால் நம்மை தூக்கி நிறுத்துவார்கள்…யாருமே இல்லன்னு நினைக்கிற நேரத்தில், “நான் இருக்கேன்”ன்னு நம்ம பக்கத்துல நின்னுடுவாங்க. 🥺❤️

அவர்கள் நம்ம வாழ்க்கையை முழுசா மாற்றணும்னு வருவதில்லை…

ஆனா அவர்கள் வந்த பிறகு, நம்ம வாழ்க்கை கொஞ்சம் அழகாகவும்… கொஞ்சம் நிம்மதியாகவும் மாறிடும்.

சில உறவுகள் ரத்தத்தால் உருவாகாது அன்பால் உருவாகும். ❤️

அப்படிப்பட்ட மனிதர்கள் நம்ம வாழ்க்கையில் கிடைத்தால்…

அவர்களை ஒருபோதும் இழந்துடாதீங்க.

Because some angels don’t have wings…

They simply walk into our lives and make everything better. ❤️‍🩹


அரசியலில் முக்கியமாக தேவை

 

அரசியலில் முக்கியமாக தேவை

"அனுபவம் "...

அனுபவம் இல்லாதவர் வர கூடாதா என்பது இல்லை... என் கருத்து உங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

அதற்கு ஒரு சிறு கதை...

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க ஒரு இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

ஒருநாள் இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட "இது எப்படி சாத்தியம்!

நான் தினம் நீர் ஊற்றி உரம் போட்டு நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது!

நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது" என்று கேட்க !

அதற்கு அவர் சொன்னார் !

"நீ எல்லாத்தையும் அதற்கு கொடுத்ததால், அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்" என்றார்.

பெரியவர்கள் அனுபவத்தில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் பற்றி எடுத்து சொன்னாலோ, கொஞ்சம் கஷ்டமான காரியம் செய்ய வைத்தாலோ "இந்த கிழத்துக்கு வேற வேலையில்லை சும்மா படுத்திக்கிட்டு இருக்குன்னு " சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள் உருக்கினால் தான் தங்கம் கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும்...!

உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்...!!!

அரசியலில் நிலைத்து நிற்க என்ன வேண்டுமோ செய்யுங்கள்...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

 

தெரியாமல் யாராவது ஏமாற்றி விட்டால் அது அவர்கள் தப்பு இல்லை. தெரிந்தும் ஏமாற்றுவதே தப்பு. அவர்களுக்கு ஆதாயம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பொய்யும் புரட்டும் நிறைந்தது தான் வாழ்க்கையா?

அது சரி. ஏமாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு முடிவுதான் என்ன? காலம் சும்மா விடுமா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இதோ ஒரு அருமையான கதை...

பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக் காரத்தனம். கனவுகளை கட்டி இழுக்க நினைத்தாலும்.. எதார்த்தங்களையே அரவணைக்க வைக்கும் வாழ்க்கை. ஒரு நிஜத்தை சந்திக்க பல நிழல்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களைப் பார்த்து, "அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது? என்று கேட்டான்.

இந்தக் கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர் "வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது" என்றான். இரண்டாவது அறிஞர், "மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது" என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து "அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்" என்று பதில் அளித்தார்

நான்காவது அறிஞர் "அரசே நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது" என்றான்.

ஐந்தாவது அறிஞர் "வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது" என்றார். இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து "அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்.

அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம் அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்".

ஆகவே. அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்கப் பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளைக் கொடுத்துப் பாராட்டினார். அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார், மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலைப் பாராட்டினர்.

நீதி: காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தைத் தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும். காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான

குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே. பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட. உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.

😇திண்ணை😇

😇திண்ணை😇

ஒரு காலத்துல ஒரு வீட்டோட அழகும், கம்பீரமும் அந்தந்த வீட்டோட திண்ணைய பொருத்ததாதான் இருக்கும்... அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த திண்ணைகள்😇

ஓட்டு வீடுன்னு சொன்னாலே அந்த வீட்டோட திண்ணைகள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும்... ஆமா வாசல்படிக்கு வெளில தாழ்வாரத்துக்கு மேல பெரிய திண்ணை ஒன்னும் சின்ன திண்ணை ஒன்னுமிருக்கும்... சுத்துக்கட்டு வீடுகள்ல ரெண்டுமே பெரிய திண்ணைகளாதான் இருக்கும்..

வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா காலார கொஞ்சநேரம் திண்ணைலதான் உட்காருவாங்க... வீட்ல உள்ளவங்களும் வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல காத்தாட திண்ணைல உட்கார்ந்துதான் பொழுத போக்குவாங்க..

மழை நேரங்கள்ல திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர்காத்து மேல பட கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மழைய ரசிக்கறது அவ்ளோ சுகமா இருக்கும்...

சில வீடுகளோட திண்ணைகள்ல தாயம் விளையாட கோடுகள்லாம் கிழிச்சி வச்சிருப்பாங்க... எங்க தாத்தா வீட்டுல சாய்மானம்லாம்(சாஞ்சிக்கற மேடை) இருக்கும்.. தலைவச்சி படுக்க வழு வழுப்பான மேடைலாம் இருக்கும்...

சின்ன வயசுல தாத்தா வீட்டு திண்ணைல அந்த தூணபிடிச்சி சுத்தி விளையாண்டது, மேல ஏறி நின்னுக்கிட்டு ஒரு குச்சிய மைக் போல கைல வச்சிக்கிட்டு பாட்டு பாடினதுலாம் இன்னைக்கும் என் நினைவுல இருக்கு 😍😍

வீடுகளோட திண்ணைகளுக்குதான் அந்த வீட்டோட இன்ப துன்பம் எல்லாமே முழுசா தெரிஞ்சிருக்கும் ஆமா திண்ணைகளும் ஒரு வீட்டோட அங்கங்கள்தான் 😇