தெரியாமல் யாராவது ஏமாற்றி விட்டால் அது அவர்கள் தப்பு இல்லை. தெரிந்தும் ஏமாற்றுவதே தப்பு. அவர்களுக்கு ஆதாயம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பொய்யும் புரட்டும் நிறைந்தது தான் வாழ்க்கையா?
அது சரி. ஏமாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு முடிவுதான் என்ன? காலம் சும்மா விடுமா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இதோ ஒரு அருமையான கதை...
பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக் காரத்தனம். கனவுகளை கட்டி இழுக்க நினைத்தாலும்.. எதார்த்தங்களையே அரவணைக்க வைக்கும் வாழ்க்கை. ஒரு நிஜத்தை சந்திக்க பல நிழல்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.
அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களைப் பார்த்து, "அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது? என்று கேட்டான்.
இந்தக் கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர் "வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது" என்றான். இரண்டாவது அறிஞர், "மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது" என்று பதிலளித்தார்.
மூன்றாவது அறிஞர் எழுந்து "அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்" என்று பதில் அளித்தார்
நான்காவது அறிஞர் "அரசே நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது" என்றான்.
ஐந்தாவது அறிஞர் "வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது" என்றார். இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து "அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்.
அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம் அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்".
ஆகவே. அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்கப் பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளைக் கொடுத்துப் பாராட்டினார். அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார், மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலைப் பாராட்டினர்.
நீதி: காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தைத் தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும். காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான
குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே. பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட. உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.
No comments:
Post a Comment