😇திண்ணை😇
ஒரு காலத்துல ஒரு வீட்டோட அழகும், கம்பீரமும் அந்தந்த வீட்டோட திண்ணைய பொருத்ததாதான் இருக்கும்... அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த திண்ணைகள்😇
ஓட்டு வீடுன்னு சொன்னாலே அந்த வீட்டோட திண்ணைகள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும்... ஆமா வாசல்படிக்கு வெளில தாழ்வாரத்துக்கு மேல பெரிய திண்ணை ஒன்னும் சின்ன திண்ணை ஒன்னுமிருக்கும்... சுத்துக்கட்டு வீடுகள்ல ரெண்டுமே பெரிய திண்ணைகளாதான் இருக்கும்..
வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா காலார கொஞ்சநேரம் திண்ணைலதான் உட்காருவாங்க... வீட்ல உள்ளவங்களும் வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல காத்தாட திண்ணைல உட்கார்ந்துதான் பொழுத போக்குவாங்க..
மழை நேரங்கள்ல திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர்காத்து மேல பட கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மழைய ரசிக்கறது அவ்ளோ சுகமா இருக்கும்...
சில வீடுகளோட திண்ணைகள்ல தாயம் விளையாட கோடுகள்லாம் கிழிச்சி வச்சிருப்பாங்க... எங்க தாத்தா வீட்டுல சாய்மானம்லாம்(சாஞ்சிக்கற மேடை) இருக்கும்.. தலைவச்சி படுக்க வழு வழுப்பான மேடைலாம் இருக்கும்...
சின்ன வயசுல தாத்தா வீட்டு திண்ணைல அந்த தூணபிடிச்சி சுத்தி விளையாண்டது, மேல ஏறி நின்னுக்கிட்டு ஒரு குச்சிய மைக் போல கைல வச்சிக்கிட்டு பாட்டு பாடினதுலாம் இன்னைக்கும் என் நினைவுல இருக்கு 😍😍
வீடுகளோட திண்ணைகளுக்குதான் அந்த வீட்டோட இன்ப துன்பம் எல்லாமே முழுசா தெரிஞ்சிருக்கும் ஆமா திண்ணைகளும் ஒரு வீட்டோட அங்கங்கள்தான் 😇
No comments:
Post a Comment