🌹16 வயதினிலே
🌹பாரதிராஜா ஒருபேட்டியில்
🌹ஸ்ரீதேவி வீடு தேடி கதை சொல்லப் போனேன். '16 வயதினிலே' படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன்.
🌹 ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும்வரை அவர் கண்கள்மீது நிலைகுத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியவில்லை.
🌹என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி... அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே 'என்ன சார் சொல்றீங்க...' என்று அதிர்ந்தார், ஶ்ரீதேவி. அடுத்து மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்று நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலை அலையாய் தோன்றி மறைந்தன.
🌹அதன்பின் ஒரு வழியாக '16 வயதினிலே' படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
என் முதலாளி ராஜ்கண்ணு '16 வயதினிலே' படத்தை முதலில் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்தபிறகு வண்ணப்படமாக தயாரிக்க விரும்பினார்.
🌹கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குப் படப்பிடிப்புக்குப் போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய்விரித்துப் படுத்துக்கொண்டோம். அப்போது ரஜினிக்கு ஓய்வே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருப்பார்.
🌹 என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் 'செந்தூரப்பூவே...' பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடித்தபோது மகிழ்ந்துபோனேன்.
🌹அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது தனிக்கதை.
.
🌹கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. 'மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...' என்று வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு ஸ்ரீதேவி
🌹 '16 வயதினிலே' படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய்
கொடுத்தோம். மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் '16 வயதினிலே'.
🌹நான் எத்தனையோ நாயகிகளை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்திருக்கிறேன், ஶ்ரீதேவிக்கும் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷனை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். யாரோடும் ஒப்பிடமுடியாத அபூர்வமான திறமை கொண்டவர் ஶ்ரீதேவி..
Prashanth
No comments:
Post a Comment