Total Pageviews

Sunday, November 20, 2011

மார்ச்சில் டீசல் நானோ காரை அறிமுகப்படுத்த டாடா திட்டம் 2017



பெரும் ஆவலைத் தூண்டியுள்ள டீசல் நானோ காரை வரும் மார்ச்சில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்கெட்டில் டீசல் நானோ நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் டீசல் கார்களை அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அதிக மைலேஜ், மிகக்குறைந்த விலை என்ற அஸ்திரத்தோடு டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ள டீசல் நானோ கார் மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஏஆர்ஏஐ நடத்திய சோதனை ஓட்டங்களில் டீசல் நானோ கார் லிட்டருக்கு 30கிமீ முதல் 34 கிமீ வரை மைலேஜ் தருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்திய மார்க்கெட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் நானோ டீசல் மாடல் இருக்கும் என மார்க்கெட் பரபரக்கிறது.

இந்த நிலையில், வரும் மார்ச்சில் டீசல் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் அறிமும் செய்ய உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோல் மாடலை விட கூடுதல் விலை கொண்டதாக நானோ வந்தாலும் மற்ற நிறுவனங்களின் டீசல் கார்களின் விலையை ஒப்பிடும்போது நானோ டீசல் விலை குறைந்ததாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment