மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
1)பகுத்தறிவு
2)கல்வி
3)சிந்தனையில் உண்மை
4)அன்புடமை
5)நன்னடத்தை
6)கட்டுப்பாடு உள்ள குடும்பம்
7)நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க” - தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம். -புரட்சிக்கவிஞர்.
இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா -மகா கவி பாரதி.
நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள். -பிளாட்டோ
நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன். -கவிஞர் ஷெல்லி.
“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே. - வால்ட் விட்மல்
“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.
நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
No comments:
Post a Comment