Total Pageviews

Friday, August 28, 2026

அரசியலில் முக்கியமாக தேவை

 

அரசியலில் முக்கியமாக தேவை

"அனுபவம் "...

அனுபவம் இல்லாதவர் வர கூடாதா என்பது இல்லை... என் கருத்து உங்களை தெரிந்து கொள்ளுங்கள்...

அதற்கு ஒரு சிறு கதை...

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!

இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!

வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!

சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க ஒரு இளைஞர், ஒரு முதியவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!

இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!

ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!

ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.

பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.

ஒருநாள் இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !

இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்

அடித்து செல்லப்பட்டது!

ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை புயல் தாங்கி நின்றது!

மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட "இது எப்படி சாத்தியம்!

நான் தினம் நீர் ஊற்றி உரம் போட்டு நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில் அடித்துச் செல்லப்பட்டது!

நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை தாங்கி நிற்கிறது" என்று கேட்க !

அதற்கு அவர் சொன்னார் !

"நீ எல்லாத்தையும் அதற்கு கொடுத்ததால், அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.

நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்" என்றார்.

பெரியவர்கள் அனுபவத்தில் நமக்கு ஏதாவது ஒரு விஷயம் பற்றி எடுத்து சொன்னாலோ, கொஞ்சம் கஷ்டமான காரியம் செய்ய வைத்தாலோ "இந்த கிழத்துக்கு வேற வேலையில்லை சும்மா படுத்திக்கிட்டு இருக்குன்னு " சொல்லும் இளசுகள் தான் இப்போது அதிகம் இருக்கிறார்கள்.

புரிந்து கொள்ளுங்கள் உருக்கினால் தான் தங்கம் கூட தூய்மையான சொக்கத்தங்கம் ஆகும்...!

உளி தாங்கும் கற்கள் தான் சிலையாகும்...!!!

அரசியலில் நிலைத்து நிற்க என்ன வேண்டுமோ செய்யுங்கள்...

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...

 

தெரியாமல் யாராவது ஏமாற்றி விட்டால் அது அவர்கள் தப்பு இல்லை. தெரிந்தும் ஏமாற்றுவதே தப்பு. அவர்களுக்கு ஆதாயம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? பொய்யும் புரட்டும் நிறைந்தது தான் வாழ்க்கையா?

அது சரி. ஏமாற்றிக் கொண்டே இருப்பவர்களுக்கு முடிவுதான் என்ன? காலம் சும்மா விடுமா? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே என்ற எம்ஜிஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. இதோ ஒரு அருமையான கதை...

பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக கடனில் மூழ்குவது என்பது பைத்தியக் காரத்தனம். கனவுகளை கட்டி இழுக்க நினைத்தாலும்.. எதார்த்தங்களையே அரவணைக்க வைக்கும் வாழ்க்கை. ஒரு நிஜத்தை சந்திக்க பல நிழல்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களைப் பார்த்து, "அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது? என்று கேட்டான்.

இந்தக் கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர் "வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது" என்றான். இரண்டாவது அறிஞர், "மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது" என்று பதிலளித்தார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து "அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம் கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமை தான்" என்று பதில் அளித்தார்

நான்காவது அறிஞர் "அரசே நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்து தான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது" என்றான்.

ஐந்தாவது அறிஞர் "வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது" என்றார். இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து "அரசே, காலம் தான் அனைத்தையும் விட மிக மிக மதிப்பு வாய்ந்த பொருள். நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்.

அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம் அன்பு காட்டை ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்".

ஆகவே. அதனை வீணாக்காமல் நம்முடைய ஆக்கப் பணிகளுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தந்த வகையில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளைக் கொடுத்துப் பாராட்டினார். அது மட்டுமல்ல அவரை தனது அமைச்சராக நியமித்து கௌரவப்படுத்தினார், மற்ற ஐந்து அறிஞர்களும் அரசரின் செயலைப் பாராட்டினர்.

நீதி: காலம்தான் இவ்வுலகிலே விலைமதிக்க முடியாத பொருள். காலத்தைத் தவற விட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மாறுவேடம் கச்சிதமாய் போட்டாலும். காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான

குணத்தை வெளிக் கொண்டு வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மனிதப் பிறவியைப் பெறுவதற்கு நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் என்பதை மறவாதே. பொய்களை சொல்லி மாய இன்பத்தில் வாழ்வதை விட. உண்மையை சொல்லி மன நிம்மதியோடு வாழலாம்.

😇திண்ணை😇

😇திண்ணை😇

ஒரு காலத்துல ஒரு வீட்டோட அழகும், கம்பீரமும் அந்தந்த வீட்டோட திண்ணைய பொருத்ததாதான் இருக்கும்... அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த திண்ணைகள்😇

ஓட்டு வீடுன்னு சொன்னாலே அந்த வீட்டோட திண்ணைகள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும்... ஆமா வாசல்படிக்கு வெளில தாழ்வாரத்துக்கு மேல பெரிய திண்ணை ஒன்னும் சின்ன திண்ணை ஒன்னுமிருக்கும்... சுத்துக்கட்டு வீடுகள்ல ரெண்டுமே பெரிய திண்ணைகளாதான் இருக்கும்..

வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா காலார கொஞ்சநேரம் திண்ணைலதான் உட்காருவாங்க... வீட்ல உள்ளவங்களும் வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல காத்தாட திண்ணைல உட்கார்ந்துதான் பொழுத போக்குவாங்க..

மழை நேரங்கள்ல திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர்காத்து மேல பட கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மழைய ரசிக்கறது அவ்ளோ சுகமா இருக்கும்...

சில வீடுகளோட திண்ணைகள்ல தாயம் விளையாட கோடுகள்லாம் கிழிச்சி வச்சிருப்பாங்க... எங்க தாத்தா வீட்டுல சாய்மானம்லாம்(சாஞ்சிக்கற மேடை) இருக்கும்.. தலைவச்சி படுக்க வழு வழுப்பான மேடைலாம் இருக்கும்...

சின்ன வயசுல தாத்தா வீட்டு திண்ணைல அந்த தூணபிடிச்சி சுத்தி விளையாண்டது, மேல ஏறி நின்னுக்கிட்டு ஒரு குச்சிய மைக் போல கைல வச்சிக்கிட்டு பாட்டு பாடினதுலாம் இன்னைக்கும் என் நினைவுல இருக்கு 😍😍

வீடுகளோட திண்ணைகளுக்குதான் அந்த வீட்டோட இன்ப துன்பம் எல்லாமே முழுசா தெரிஞ்சிருக்கும் ஆமா திண்ணைகளும் ஒரு வீட்டோட அங்கங்கள்தான் 😇

காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்

 காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்..

  • கர்நாடகாவின் தலைகாவிரியாக உருவெடுத்து ஒற்றை காவிரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.
  • திருச்சியின் முக்கிய சுற்றுலா தலமாக முக்கொம்பு திகழ்கிறது.
  • முக்கொம்பில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா சிறுவர் பூங்கா,செயின்ட் வீல் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, படகு போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.
  • அருகில் கரிகாலச்சோழன் புகழை இன்று வரை சுமந்து நிற்கும் கல்லனணை உள்ளது.
  • பூங்காக்களில் உள்ள மரத்தடிகளில் அமர்வதற்கு ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்வது இனிமையாக இருக்கும்.
  • அருகில் உளள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வது அதைவிட சிறப்பு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீ போன்றவை கிடைக்கும்.
  • காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். நமக்கு காவிரி ஆற்றில் இருந்து மீன் பிடித்து சுடச்சுட வருத்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
  • சுற்றுலா இடம் தேடி எங்கெங்கோ செல்பவர்கள் முக்கொம்பு சுற்றுலா சென்று வந்தால் மனதுக்கு இதமாக இருக்கும்.
  • அப்படியே அருகில் உள்ள கல்லணை,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்,திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் என இவற்றையும் பார்வையிட்டு மகிழலாம்.

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

 

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஜெயிலர் என்ற மாபெரும் பெற்றிக்குப் பிறகு வேட்டையன் படத்தின் மூலம் களம் இறங்குகிறார். படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இதற்கான ஆடியோ லாஞ்ச் நேற்று நடந்தது. இதுல அவர் என்ன பேசினார்னு பார்க்கலாமா...

ஒரு விஷயம் நாம தொடர்ந்து பண்ணினோம்னா அடுத்தடுத்து என்ன என்ன என்ற கேள்விகள் நமக்குள்ள வந்துக்கிட்டே இருக்கும். ஒரு தோல்வியைப் பார்த்தா அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயம் நமக்கு வந்துடும். அதே மாதிரி தான் ஒரு பெரிய வெற்றியைப் பார்த்ததும் அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயமும் எனக்குள்ள வந்துச்சு.

ஏன்னா அடுத்தது வெற்றி பெறலைன்னா ஃபார்ம்ல இல்லன்னு சொல்லிடுவாங்க. அந்த மாதிரி மிகப்பெரிய வெற்றியை நான் ஜெயிலர் படத்துல பார்த்தேன். அதுக்கு அப்புறம் நான் முழுமையா நடிச்ச படம் தான் வேட்டையன். இடையில கெஸ்ட் அப்பியரன்ஸா லால் சலாம் படத்துல நடிச்சேன்.

ஜெயிலர்க்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டேன். ஆனா என்ன பண்றதுன்னு தெரியல. ஏன்னா நிறைய பிரஷர். பெரிய வெற்றி கொடுத்தாச்சு. அப்படி வந்தது தான் வேட்டையன் கதை. அதைக் கேட்டேன்.

ஆனா இதைக் கமர்ஷியலா மாற்றிக் கொண்டு வாங்கன்னு சொன்னேன். ஏன்னா கோடிகள்ல நம்மளை நம்பி படம் எடுக்குறாங்க. அவங்களுக்குப் போட்ட காசு திரும்ப கிடைக்கணும். அப்போ த.செ.ஞானவேல் சார் நான் நெல்சன் மாதிரியோ, லோகேஷ் மாதிரியோ கமர்ஷியலா கொடுக்க முடியாது.

ஆனா என் ஸ்டைல்ல கொடுக்குறேன். அது ரசிகர்களுக்கு ரொம்ப திருப்தியா இருக்கும்னு சொன்னாரு. அதைத் தான் நானும் சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் ரெண்டே நாளில் வந்து சொன்னார். முதல்ல கொஞ்சம் கதை சொன்னாரு. இதுக்கு அப்புறம் கமர்ஷியல் வந்துக்கிட்டே இருக்கும்னாரு. சார் கமர்ஷியலை சொல்லல. டப்பு வரணும்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெக்னீஷியன் எல்லாம் ரஜினி சாய்ஸ் தான்னு சுபாஷ்கரனே சொல்லிட்டாராம். அனிருத்துக்கும் ரஜினி டபுள் ஓகே சொன்னாராம். அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் எல்லாமே ரஜினி சாய்ஸ் தானாம். பகத்பாசில் எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஒன்றரை மாசம் டைம் கொடுங்கன்னு சொன்னாரு.

எங்கிட்ட வேணாம். நான் அடுத்து கூலி படத்துல வேற கமிட் ஆகிட்டேன். லோகேஷ்கிட்ட கேட்கணும்னு சொன்னேன். அவரும் டைம் எடுத்துக்கோங்க சார்னு சொல்லிட்டாரு. ஏன்னா அவர் இன்னும் கதையை ஒழுங்கா பண்ணல. அதான் டைம் கொடுத்துட்டாருன்னு லோகேஷை கலாய்த்தார் ரஜினி.

என்னைப் பழிவாங்கறதுக்காகவே மஞ்சுவாரியாரைக் கொண்டு வந்தீங்களான்னு ரஜினி கலாய்ச்சாராம். ஏன்னா அவரு தளதளன்னு ரொம்பவே அழகா இருந்தாராம். அமிதாப்பச்சன்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை அழகாக் கத்துக்கிட்டேன்னாரு.

முள்ளும் மலரும் படத்துல வர்ற ‘ரெண்டும் கையும் ரெண்டு காலும் இல்லன்னா கூட இந்தக் காளி பொழைச்சிக்குவான் சார்’னு ரஜினி அதே டயலாக்கைப் பேசிக்காட்டினாரு. ஆடியன்ஸ் மத்தியில பலத்த கைதட்டல்கள். இந்த உலகத்துல சகுனிகள் நிறைய பேர் இருக்காங்க. நல்லவனா இருந்தா பொழைச்சிக்கவே முடியாது.

கொஞ்சம் சாணக்கியத்தனமும், கொஞ்சம் சாமர்;த்தியமும் இருக்கணும். அதனால பார்த்துப் பத்திரமா இருந்துக்கோங்க. இப்படி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் முத்தாய்ப்பாக அட்வைஸ் உடன் விடைபெற்றது அரங்கத்தை அதிர வைத்தது.

13ம் நம்பர் வீடு பேய்ப்படம் !

 

பேய்ப்படங்களைப் பார்ப்பது என்றால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டினால் ஆர்வம் தானே. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பேய்ப்படங்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கத் தான் செய்கிறது. அப்போது ஜெகன் மோகினி, மாயமோகினின்னு ஆரம்பித்து இப்போது அரண்மனை 1, 2, 3, 4, சந்திரமுகி 1, 2, பேய்மாமா, முனி, காஞ்சனா1, 2, 3, 4 என தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

அந்த வகையில் எப்போதும் பேய்ப்படங்களை மிகவும் பயப்படுபவர்கள் தான் பார்ப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தனியாகப் போய்ப் பார்க்க மாட்டார்கள். ஒரு குரூப்பாகத் தான் போவார்கள். ஏன்னா பயம். அப்படி ஒரு பயம். இன்னும் ஒரு சிலர் குரூப்பாகப் போனாலும் கூட பேய் வரும்போதெல்லாம் பேயை விட மேலாகக் கத்திக் கூப்பாடு போடுவர்.

இது ஏன்னா தங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான். முக்கியமாக டிவியில் படத்தைப் பார்ப்பதை விட தியேட்டரில் சென்று பேய்ப்படத்தைப் பார்த்தால் தான் ஒரு தனி எபெக்ட் இருக்கும். அதிலும் திடீர் திடீர்னு மியூசிக்கே நம்மை பயமுறுத்தி விடும். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களைக் கதிகலங்கச் செய்த படம் ஒன்று உள்ளது.

அது இப்போது பார்த்தாலும் நமக்குள் ரத்தமே உறைந்து விடும். அப்படி ஒரு பயம் கொண்ட சினிமா தான் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் கூட தனியாக உங்கள் வீட்டு டிவியில் இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்கள். அப்போது உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான். அப்படி என்ன படம்?

13ம் நம்பர் வீடு தான். மலையாள இயக்குனர் பேபியின் இயக்கத்தில் நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே நமக்குத் திகிலூட்டும் வகையில் தான் இருக்கும். இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

13ம் நம்பர் வீடு படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நமக்குள் அப்படிப்பட்ட ஒரு பயத்தைத் தரும் படம் என்றால் அது இதுதான். அந்த சமயத்தில் இந்தப் படத்தை யார் தனியாக தியேட்டரில் போய் பார்க்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு என்று கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி - எம்ஜிஆர்

 

mgr, vaali

நவரத்தினம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டத்துல அந்த படத்தின் இயக்குனர் ஏபி.நாகராஜனிடம் இருந்து வாலிக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது. எம்ஜிஆர் உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாரு. அதனால உடனடியா சத்யா ஸ்டூடியோவுக்கு வாருங்கள் என்றார் ஏபி.நாகராஜன். அந்தக் காலகட்டத்துல வாலி எங்கே போனாலும் பாகவதர் என்று அழைக்கப்படுற நபர் கூடவே போவார்.

வாலியும் அவரை அழைத்துக் கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். எம்ஜிஆரின் மேக்கப் அறைக்கு வெளியில் பாகவதரை நிறுத்தி விட்டு, அவரை சந்திப்பதற்கு அறைக்குள் போனார் வாலி. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதற்குள் மதிய உணவு வேளை வந்தது. வாங்க சாப்பிடலாம்னு பக்கத்துல இருந்தவரைக் கூப்பிட்டு இலை போடச் சொன்னாரு எம்ஜிஆர்.

நடுவுல எம்ஜிஆர் இருந்தார். வலது பக்கத்துல லதாவும், இடது பக்கத்துல வாலியும் உட்கார, எம்ஜிஆருடைய உதவியாளர் பரிமாறத் தொடங்கினார். அப்போ திடீர்னு எழுந்தார் வாலி. என்ன எழறீங்கன்னு கேட்டார் எம்ஜிஆர். எங்கூட பாகவதர்னு ஒருத்தர் வந்துருக்காரு. அவரு வெளியே இருக்காரு. காசு கொடுத்து அவரை வெளியே சாப்பிட்டு வந்துட சொல்றேன். அப்படின்னு வாலி சொன்னதுதான் தாமதம். எம்ஜிஆர் உடனே தன்னோட இருப்பிடத்தில் இருந்து எழுந்து விட்டார்.

கதவை திறந்துகிட்டு வெளியே போய் இங்கே பாகவதர்னு வாலி கூட வந்தது யார்? அப்படின்னு கேட்க, அந்த பாகவதர் கூனி குறுகி, நான்தான் பாகவதர் என்றார். உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்த எம்ஜிஆர், லதாவை எழுந்திருக்கச் சொல்லி அந்த இடத்திலே அவரை அமரச் சொல்லி சாப்பாடு பரிமாறச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த வாலியின் கண்களிலே கண்ணீர். அண்ணே, மனிதர்களில் நான் எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதர் நீங்க தான் என்று எம்ஜிஆரைப் பார்த்து சொன்னார் வாலி. அவர் அப்படி சொன்னதும் எம்ஜிஆர் அதுக்குக் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா? வழக்கம்போல ஒரு புன்னகைதான்.