Total Pageviews

Tuesday, August 25, 2026

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

RS.Manohar

நாடக நடிகரும், பிரபல சினிமா வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி நாடக உலகிற்குள் நுழைந்தார் என்று பார்ப்போம்.

பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் ஆர்எஸ்.மனோகருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததுன்னா அவரது நாடகங்கள் தான். நாடகக் காவலர் என்று போற்றப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் அவருடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்ததே ஒரு தனிக்கதை. 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று சென்னையிலே பாகிரதி தெருவில் அமைந்துள்ள தன் வீட்டில் அமர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஆர்எஸ்.மனோகர்.

அப்போது அவர்களுக்குள் ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் பிறந்தது. நாடகக் கம்பெனியை ஆரம்பிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதை இன்றைக்கே ஆரம்பித்து விடுவோம் என்றார் மனோகர். அன்றைய தினம் தேசிய தலைவரான நேருவின் பிறந்த தினம் என்றதால நாடகக் கம்பெனிக்கு நேஷனல் தியேட்டர் என்று பெயர் வைக்கலாம் என்று நண்பர்கள் எல்லோரும் முடிவு செய்தனர்.

நாடகக் குழு ஆரம்பித்த போது அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நவாப் ராஜமாணிக்கம், டிகே.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாம் போன்ற மேதைகள் நாடகம் போட்டுக் கொண்டு இருந்த காலகட்டம் அது. இவங்களுக்கு நடுவுல நாம் என்ன செய்யப் போறோம் அப்படிங்கிற அச்சம் எனக்குள்ள இருந்தது. இன்ப நாள், உலகம் சிரிக்கிறது ஆகிய சமூக நாடகங்களை முதலில் அரங்கேற்றினோம்.

இந்த ரெண்டு நாடகங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரறே;பு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் துறையூர் மூர்த்தி லங்கேஸ்வரன் நாடகத்தை எழுதிக் கொண்டு வந்தார். அந்த நாடகத்தைத் தமிழ்நாட்டுல போடுறதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தது. என்றாலும், இலங்கையில் அந்த நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுக்குப் பின், தமிழ்நாட்டிலும் அது தொடர்ந்தது.

அதன் காரணமாகத்தான் ஒரு காலகட்டத்தில என்னுடைய பெயரே லங்கேஸ்வரன் மனோகர் ஆகியது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எஸ்.மனோகர்.

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட தன்னம்பிக்கைக் கொண்ட மனிதராக இயக்குனர் கே.பாலசந்தர் இருந்தார் என்று பார்க்கலாமா...

சத்யா மூவீஸில் தெய்வத்தாய் என்ற படத்தை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. அந்தப் படத்துக்கான பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது அந்த அறையின் மூலையில் எப்போதும் ஒரு இளைஞர் நின்று கொண்டே இருந்தாராம்.

அதைப் பார்த்துள்ளார் எம்எஸ்.விஸ்வநாதன். ஒருநாள் தெய்வத்தாய் படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் எழுந்து போன பிறகு, தன் அருகில் இருந்த வாலியை அழைத்து யார் அந்த இளைஞன்னு கேட்டுள்ளார். அவர்தான் இந்தப் படத்தோட வசனகர்த்தா என்றார் வாலி.

உடனே அந்த இளைஞரைப் பக்கத்தில் அழைத்த எம்எஸ்வி. நான் உங்களைத் தினமும் பார்க்கிறேன். ஒருநாள் கூட நீங்கதான் இந்தப் படத்தோட வசனகர்த்தான்னு எங்கிட்ட சொல்லவே இல்லையேன்னு கேட்கிறார் எம்எஸ்வி.

பாலசந்தர், நான் யாருன்னு தெரிஞ்சி இந்தப் படத்துல உள்ள வசனங்களை நீங்க ரசிக்கிறதை விட எழுதிய வசனங்களை எல்லாம் ரசித்துப் பார்த்துவிட்டு இந்த வசனங்களை எல்லாம் எழுதினது யார்னு கேட்டு நீங்கத் தெரிஞ்சிக்கணும்னு நான் நினைச்சேன். அதனால்தான் நான் என்னைப்பற்றி உங்ககிட்ட சொல்லலன்னு அப்பவே பாலசந்தர் தன்னம்பிக்கையோட சொன்னாராம்.

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !

 

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?மனித உடல் என்பது மிகவும் அதிசயமான ஒரு இயற்கையின் படைப்பாகும். இந்த மனித உடலை நீண்ட காலம் நோய் நொடியின்றி பாதுகாத்து கொள்ள சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் . இன்முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.

மேலும் தாவர வேதியங்கள் அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது.

புற்றுநோயினை வராமல் தடுக்கிறது. தினசரி சிறதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்தஅழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் உள்ளது. உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது. செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். உயிரணு உற்பத்தி, ஜீரணம் ஆகியவற்றிலும் பங்கெடுக்கிறது.

சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களை வடிகட்டும் திறன் உண்டு. எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடலுக்கு நோயெதிர்ப்பு திறனைஅதிகரிக்க செய்கிறது. முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும். கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

நமது உடலில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மிகவும் அவசியம். முந்திரி பருப்பில் இவை இரண்டும் அதிகம் உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. எனவே அடிக்கடி முந்திரி சாப்பிடுவது நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

ஜெய்சங்கரை மக்கள் கலைஞர்னு சொல்றாங்களே... ஏன்னு இப்ப தெரியுதா!

 ஜெய்சங்கரை மக்கள் கலைஞர்னு சொல்றாங்களே... ஏன்னு இப்ப தெரியுதா?

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அந்தக் காலத்தில் வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தான் அழைப்பர். அவர் நடித்த ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு சில படங்கள் சாதாரண வெற்றியைப் பெற்றுள்ளன.

பல படங்கள் தோல்வியும் பெற்றுள்ளன. ஆனால் அந்தத் தோல்வியைப் பற்றியோ, வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தன்னை அழைத்தது பற்றியோ கவலைப்படாமல் ஜெய்சங்கர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படங்களின் விளைவாக யார் யாரெல்லாம் பயன்பெற்றார்கள் என்பதை பூரணமாக ஜெய்சங்கர் அறிந்து கொண்டதுதான்.

தமிழ்சினிமா உலகில் ஜெய்சங்கரைப் போல பல தயாரிப்பாளர்களை உருவாக்கிய நடிகர்களே இல்லை எனலாம். அந்தளவுக்குப் பலரைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தவர் ஜெய்சங்கர்.

அப்படிப் பல தயாரிப்பாளர்கள் உருவானதாலதான் பல இயக்குனர்களுக்கு வேலை கிடைத்தது. பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வேலை கிடைத்தது. உடன் நடிக்கும் பல நடிகர்களுக்கும் வேலை கிடைத்தது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஜெய்சங்கர் படங்களில் நடித்தாரே தவிர, தன்னுடைய படங்கள் எல்லாம் அதிகமான வெற்றியைக் கொடுக்கணும்.

தான் அதிகமாக சம்பளம் வாங்கணும். அப்படிங்கற ஆசை எந்தக் காலத்திலும் ஜெய்சங்கருக்கு இருந்ததில்லை. அதனால்தான் இன்று வரை ஜெய்சங்கர் மக்கள் கலைஞர் என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

 நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

  • நெய்க்காரப்பட்டி. இந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லம் தான்.
  • தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் இங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லத்துக்கு மவுசு அதிகம்.
  • பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது.
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வயல்களிலேயே ஆங்காங்கே அச்சுவெல்ல தயாரிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதனால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன.
  • இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
  • கரும்புகளை சாறு பிழிந்து, அதை நன்கு காய்ச்சுகின்றனர்.
  • பின்னர் காய்ச்சிய குழம்பு போன்ற வெல்லப் பாகுவை மரத்தினால் ஆன அச்சுக்கட்டையில் ஊற்றி சூடு ஆறியதும் காய வைத்து கீழே கொட்டுகின்றனர்.
  • இதன் பின், சுவையான அச்சு வெல்லம் விற்பனைக்கு தயாராகிறது.
  • நெய்க்காரப்பட்டியில் உற்பத்தியாகும் அச்சுவெல்லம், அங்குள்ள சந்தைகளிலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
  • இதில் தமிழக-கேரள வியாபாரிகள் கலந்து கலந்து கொண்டு போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்வர்.
  • தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது.
  • நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

 சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

K.Bhagyaraj

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட பாக்கியராஜ் நேற்று காலை [27.06.2026] காலமானார். இது தமிழ்த்திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாக இருந்தது. அவரைப் பற்றி சிறு கண்ணோட்டம்...

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலை சொந்த ஊராகக் கொண்டவர் பாக்கியராஜ். கலைத்துறையின் மேல் உள்ள ஈர்ப்பால் கல்லூரி காலத்தில் கோவையில் நண்பர்களுடன் நாடகம் நடத்தியவர். சினிமா கனவுகளுடன் தன்னம்பிக்கையோடு சென்னை வந்தார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் வெகுளித்தனமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஒரு கை ஓசை படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். மனைவி கணவன் மீதான சந்தேகம் கொண்ட மவுன கீதங்கள் படத்தை இயக்கி மகத்தான வெற்றி அடையச் செய்தார். 1981 முதல் 1986 வரை பாக்கியராஜ் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள், சின்ன வீடு என வரிசையாக வெள்ளிவிழாப்படங்களைக் கொடுத்தார் பாக்கியராஜ்.

அத்தனை படங்களிலும் இன்னசன்ட் ஹீரோவாக நடித்து இருந்ததால் அவரது படங்களைக் காண பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. இவரது புத்திசாலித்தனமான திரைக்கதை எழுதும் திறனைக் கண்டதால் எம்ஜிஆர் இவரைத் தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அத்தனைப் படங்களும் அவரது இன்னசன்ட் காமெடிக்காகவே திரும்ப திரும்ப பார்வையாளர்களை திரையரங்கிற்கு வரவழைத்தன.

படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

 படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

  • தமிழ் சினிமாவில் முதன்முதலாக முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடித்து ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
  • தன்னுடைய 14 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
  • கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இவரை அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது படையப்பா தான்.
  • படையப்பா. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு என்று தனியாக எதிரிகளே இருக்க மாட்டார்கள். திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய புள்ளியாக நீலாம்பரியே இருப்பார். திரைப்படத்தின் மொத்த கதையும் நீலாம்பரியை சுற்றியே பின்னப்பட்டு இருக்கும்.
  • திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை பழிவாங்கும் உணர்ச்சி சற்றும் குறையாத ஆக்ரோஷமான பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
  • அதுவரை சாதாரண நடிகையாக இருந்த இவரை மாபெரும் நடிகையாக அடையாளம் காட்டியது அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான்.
  • படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
  • 1999 இல் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் இன்று வரை மக்களால் அதிகமாக ரசித்துப் பார்க்கப்படக்கூடிய ஒரு எவர்கிரீன் திரைப்படமாக இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நிச்சயமாக இந்த நீலாம்பரி கேரக்டரை சொல்லலாம்.
  • அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர்.
  • இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.