Total Pageviews

Tuesday, August 25, 2026

சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

 சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

K.Bhagyaraj

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட பாக்கியராஜ் நேற்று காலை [27.06.2026] காலமானார். இது தமிழ்த்திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாக இருந்தது. அவரைப் பற்றி சிறு கண்ணோட்டம்...

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலை சொந்த ஊராகக் கொண்டவர் பாக்கியராஜ். கலைத்துறையின் மேல் உள்ள ஈர்ப்பால் கல்லூரி காலத்தில் கோவையில் நண்பர்களுடன் நாடகம் நடத்தியவர். சினிமா கனவுகளுடன் தன்னம்பிக்கையோடு சென்னை வந்தார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் வெகுளித்தனமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஒரு கை ஓசை படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். மனைவி கணவன் மீதான சந்தேகம் கொண்ட மவுன கீதங்கள் படத்தை இயக்கி மகத்தான வெற்றி அடையச் செய்தார். 1981 முதல் 1986 வரை பாக்கியராஜ் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள், சின்ன வீடு என வரிசையாக வெள்ளிவிழாப்படங்களைக் கொடுத்தார் பாக்கியராஜ்.

அத்தனை படங்களிலும் இன்னசன்ட் ஹீரோவாக நடித்து இருந்ததால் அவரது படங்களைக் காண பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. இவரது புத்திசாலித்தனமான திரைக்கதை எழுதும் திறனைக் கண்டதால் எம்ஜிஆர் இவரைத் தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அத்தனைப் படங்களும் அவரது இன்னசன்ட் காமெடிக்காகவே திரும்ப திரும்ப பார்வையாளர்களை திரையரங்கிற்கு வரவழைத்தன.

No comments:

Post a Comment