Total Pageviews

Tuesday, August 25, 2026

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

RS.Manohar

நாடக நடிகரும், பிரபல சினிமா வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி நாடக உலகிற்குள் நுழைந்தார் என்று பார்ப்போம்.

பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் ஆர்எஸ்.மனோகருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததுன்னா அவரது நாடகங்கள் தான். நாடகக் காவலர் என்று போற்றப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் அவருடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்ததே ஒரு தனிக்கதை. 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று சென்னையிலே பாகிரதி தெருவில் அமைந்துள்ள தன் வீட்டில் அமர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஆர்எஸ்.மனோகர்.

அப்போது அவர்களுக்குள் ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் பிறந்தது. நாடகக் கம்பெனியை ஆரம்பிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதை இன்றைக்கே ஆரம்பித்து விடுவோம் என்றார் மனோகர். அன்றைய தினம் தேசிய தலைவரான நேருவின் பிறந்த தினம் என்றதால நாடகக் கம்பெனிக்கு நேஷனல் தியேட்டர் என்று பெயர் வைக்கலாம் என்று நண்பர்கள் எல்லோரும் முடிவு செய்தனர்.

நாடகக் குழு ஆரம்பித்த போது அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நவாப் ராஜமாணிக்கம், டிகே.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாம் போன்ற மேதைகள் நாடகம் போட்டுக் கொண்டு இருந்த காலகட்டம் அது. இவங்களுக்கு நடுவுல நாம் என்ன செய்யப் போறோம் அப்படிங்கிற அச்சம் எனக்குள்ள இருந்தது. இன்ப நாள், உலகம் சிரிக்கிறது ஆகிய சமூக நாடகங்களை முதலில் அரங்கேற்றினோம்.

இந்த ரெண்டு நாடகங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரறே;பு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் துறையூர் மூர்த்தி லங்கேஸ்வரன் நாடகத்தை எழுதிக் கொண்டு வந்தார். அந்த நாடகத்தைத் தமிழ்நாட்டுல போடுறதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தது. என்றாலும், இலங்கையில் அந்த நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுக்குப் பின், தமிழ்நாட்டிலும் அது தொடர்ந்தது.

அதன் காரணமாகத்தான் ஒரு காலகட்டத்தில என்னுடைய பெயரே லங்கேஸ்வரன் மனோகர் ஆகியது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எஸ்.மனோகர்.

No comments:

Post a Comment