தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!
திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட தன்னம்பிக்கைக் கொண்ட மனிதராக இயக்குனர் கே.பாலசந்தர் இருந்தார் என்று பார்க்கலாமா...
சத்யா மூவீஸில் தெய்வத்தாய் என்ற படத்தை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. அந்தப் படத்துக்கான பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது அந்த அறையின் மூலையில் எப்போதும் ஒரு இளைஞர் நின்று கொண்டே இருந்தாராம்.
அதைப் பார்த்துள்ளார் எம்எஸ்.விஸ்வநாதன். ஒருநாள் தெய்வத்தாய் படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் எழுந்து போன பிறகு, தன் அருகில் இருந்த வாலியை அழைத்து யார் அந்த இளைஞன்னு கேட்டுள்ளார். அவர்தான் இந்தப் படத்தோட வசனகர்த்தா என்றார் வாலி.
உடனே அந்த இளைஞரைப் பக்கத்தில் அழைத்த எம்எஸ்வி. நான் உங்களைத் தினமும் பார்க்கிறேன். ஒருநாள் கூட நீங்கதான் இந்தப் படத்தோட வசனகர்த்தான்னு எங்கிட்ட சொல்லவே இல்லையேன்னு கேட்கிறார் எம்எஸ்வி.
பாலசந்தர், நான் யாருன்னு தெரிஞ்சி இந்தப் படத்துல உள்ள வசனங்களை நீங்க ரசிக்கிறதை விட எழுதிய வசனங்களை எல்லாம் ரசித்துப் பார்த்துவிட்டு இந்த வசனங்களை எல்லாம் எழுதினது யார்னு கேட்டு நீங்கத் தெரிஞ்சிக்கணும்னு நான் நினைச்சேன். அதனால்தான் நான் என்னைப்பற்றி உங்ககிட்ட சொல்லலன்னு அப்பவே பாலசந்தர் தன்னம்பிக்கையோட சொன்னாராம்.
No comments:
Post a Comment