ஜெய்சங்கரை மக்கள் கலைஞர்னு சொல்றாங்களே... ஏன்னு இப்ப தெரியுதா?
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அந்தக் காலத்தில் வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தான் அழைப்பர். அவர் நடித்த ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஒரு சில படங்கள் சாதாரண வெற்றியைப் பெற்றுள்ளன.
பல படங்கள் தோல்வியும் பெற்றுள்ளன. ஆனால் அந்தத் தோல்வியைப் பற்றியோ, வெள்ளிக்கிழமை ஹீரோன்னு தன்னை அழைத்தது பற்றியோ கவலைப்படாமல் ஜெய்சங்கர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படங்களின் விளைவாக யார் யாரெல்லாம் பயன்பெற்றார்கள் என்பதை பூரணமாக ஜெய்சங்கர் அறிந்து கொண்டதுதான்.
தமிழ்சினிமா உலகில் ஜெய்சங்கரைப் போல பல தயாரிப்பாளர்களை உருவாக்கிய நடிகர்களே இல்லை எனலாம். அந்தளவுக்குப் பலரைத் தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்த்தவர் ஜெய்சங்கர்.
அப்படிப் பல தயாரிப்பாளர்கள் உருவானதாலதான் பல இயக்குனர்களுக்கு வேலை கிடைத்தது. பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வேலை கிடைத்தது. உடன் நடிக்கும் பல நடிகர்களுக்கும் வேலை கிடைத்தது. இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் ஜெய்சங்கர் படங்களில் நடித்தாரே தவிர, தன்னுடைய படங்கள் எல்லாம் அதிகமான வெற்றியைக் கொடுக்கணும்.
தான் அதிகமாக சம்பளம் வாங்கணும். அப்படிங்கற ஆசை எந்தக் காலத்திலும் ஜெய்சங்கருக்கு இருந்ததில்லை. அதனால்தான் இன்று வரை ஜெய்சங்கர் மக்கள் கலைஞர் என்று எல்லோராலும் போற்றப்படுகிறார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment