Total Pageviews

Tuesday, August 25, 2026

நதி நீர் இணைப்பு !

பிரம்மபுத்திராவை காவேரி மற்றும் கோதாவரியுடன் இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று அமித் ஷா கூறுகிறார்.

சிலர்:

இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்புனு சொல்லி வடை சுட்டு ரொம்ப நாளாவுது.... மக்கள் மறந்து இருப்பாங்க.... வடையை திருப்பி சுடுங்க ஜி...... எவன் நம்மல கேப்பான்

நான்:

சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படாமல் திட்டம் நிறைவேற்றுவது இயலாத காரியமாகும்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!


ரஜினிகாந்த், இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த இடத்திற்கு அவர் வர பல காரணங்கள். அவரது ஸ்டைல், கதைத்தேர்வு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, அந்த இடத்தை நோக்கி நடத்திய பயணத்தில் முக்கிய மைல் கற்களாக பல படங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு படங்கள் அண்ணாமலை, பாட்ஷா.

அதுவரை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு, முதல் இடத்தில் இருந்த ரஜினியை அதற்கு அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்த மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம் 'அண்ணாமலை'. தமிழ் சினிமாவின் மாஸ் கமர்சியல், பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தில் ஒரு அப்டேட்டாக அமைந்தது 'அண்ணாமலை'.

ரஜினியின் பல படங்களில், டைட்டிலில் சூப்பர்ஸ்டார் என்று ஒரு மாஸான இசையுடன் வரும். அது உருவாக்கப்பட்டது அண்ணாமலை படத்தில்தான். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

முதலில் இந்தப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது. எதிர்பாராத விதமாக இயக்குனர் வசந்த் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் தயாரிப்பாளர் பாலச்சந்தர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்கு ஒத்துக் கொண்ட சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை மூன்றே மாதங்களில் முடித்தார். அதே ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளிவந்த அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

ஒரு ஹீரோயிஸப் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ படங்கள் உதாரணமாய் இருக்கின்றன. அப்படி ஹீரோயிஸத்துடன் வந்த படங்கள்தான், மாஸ் படங்கள் என்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கலெக்‌ஷனிலும் மக்களின் மனங்களுடனான கனெக்‌ஷனிலும் இன்றைக்கும் கொடிகட்டிப்பறக்கும் படங்களாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவின் அப்படியான அதிரிபுதிரி மாஸ் ஹீரொ படமாக இன்றைக்கும் ‘அண்ணாமலை’ படத்தை அண்ணாந்து பார்த்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

பால்கார அண்ணாமலைக்கும் பணக்கார அசோக்கிற்குமான நட்பில் ஆரம்பித்து பின்னர் துரோகத்தில் வெடித்து, தொழிலிலும் ஸ்டேட்டஸிலும் உயர்வுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுகிற டெம்ப்ளேட் ஹீரோயிஸக் கதைதான் ‘அண்ணாமலை’. ஆனால் இப்படி டெம்ப்ளேட் சதுரவட்டங்களுக்குள் நிறுத்திவிடாமல் மலையளவு உயர்ந்து நின்றதுதான் ரஜினியின் மேஜிக்.

படத்தின் முதல் பலமாக சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் இடம் பிடித்தது. ஒருபக்கம் ரஜினியின் குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்புப் பாசம், குஷ்புவைப் பார்ப்பதிலும் பாம்பு பார்ப்பதிலுமாக உள்ள காமெடி கலாட்டா, ராதாரவியின் சைலண்டான வில்லத்தனம், ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்துக்குள் என்னென்ன அடங்கவேண்டுமோ அவை அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதை காட்சியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்ததுதான் சுரேஷ்கிருஷ்ணாவின் சாமர்த்தியம்; திறமை.

பால்காரர், தோளில் துண்டு, சைக்கிள் எனும் விஷயங்கள் சி செண்டர் ஆடியன்ஸை படத்துடன் கனெக்ட் செய்வதற்கு பெரிதும் உதவின. ஆனால் பால்காரராக, தோளில் துண்டுடன் சைக்கிளில் சுற்றுவது ரஜினியாக இருந்ததால்தான் இவையெல்லாம் எடுபட்டது.

‘கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்’ என்கிற ராதாரவியின் அசால்ட் வசனம், மிகப்பிரபலம். வில்லனுக்கு மேனரிஸம், வில்லனுக்கு பஞ்ச் டயலாக் என வந்ததும் ‘அண்ணாமலை’யைப் போலவே பின்னர் விஸ்வரூபமெடுத்தது.

ஒரு மாஸ் படத்தில் என்ன இருக்கவேண்டுமோ அவையெல்லாம் ‘அண்ணாமலை’யில் உண்டு. ஒரு ஹீரோயிஸ படத்துக்கு என்ன தேவையோ அவையெல்லாம் இதில் இருந்தன. உயரத்தில் இருக்கும் ரஜினியை, மலையளவுக்கு ‘அண்ணாமலை’ உயர்த்தியது என்பதும் உண்மை.

ரஜினி - தேவா - வைரமுத்து கூட்டணி ஒன்று உருவானதும் இங்கேதான். சுரேஷ்கிருஷ்ணாவை கமர்ஷியல் இயக்குநர் விசிட்டிங்கார்டு கொடுத்து, அடுத்த உயரத்துக்கு அவரை அழைத்துச் சென்றதும் ‘அண்ணாமலை’தான்!

1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி வெளியானது ‘அண்ணாமலை’. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாள், இருநூறு நாளைக் கடந்து ஹவுஸ்புல் கலெக்‌ஷனைக் கொடுத்தது.

இன்னும் பல வருடங்கள் கழித்து, ‘அண்ணாமலை’ படத்தை எந்த ஹீரோவாவது ரீமேக் செய்ய ஆசைப்படலாம். 30 வருடங்கள் கழித்தும் இப்போதும் மனதில் மலையென அமர்ந்திருக்கிற ‘அண்ணாமலை’யின் வெற்றி, அப்படி ரீமேக் செய்யத் தூண்டலாம். ஆனால், ‘மல... அண்ணாமலை’ என்று அது ஹிட்டடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்குறிதான் ரஜினி எனும் மேஜிக் எனும் ஆச்சரியக்குறி!!
Credits to Writter ✍️ #Rajinism #Annamalai #51YearsOfRajinism

கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன் !

 கல்யாண வீட்டில் கலாட்டா... கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன்

கொடுமுடி கோகுலம் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் மீது நடிகர் ஜெமினிகணேசனுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. அவரோடு எனக்கு நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. என்னை ஒரு பிள்ளை மாதிரிதான் என்னை அவங்க நடத்துனாங்க. ஒரு திருமண விழாவில் நாங்க இருவரும் கலந்து கொண்டோம்.

கே.பி.சுந்தராம்பாளும் அந்த திருமண விழாவில் அடி எடுத்து வைத்த உடன் அங்கு பாடல்கள் எல்லாம் ஒலிபரப்பிக் கொண்டு இருந்தன. ஒருவர் கேபி.சுந்தராம்பாளின் பாட்டை எடுத்துப் போட்டார். அந்தப் பாட்டைப் போட்டதுதான் தாமதம். மிகுந்த கோபத்துடன் அந்த மைக் செட் காரரிடம் போன கே.பி.சுந்தராம்பாள் முதல்ல அந்தப் பாட்டை நிறுத்துறீயான்னு கேட்டார். அந்த மைக் செட் காரருக்கு ஒண்ணும் புரியல.

அம்மா இது நீங்க பாடுன பாட்டுதான் என்றார். அதற்கு நான் பாடுன பாட்டு தான். அதுக்குக் கல்யாண வீட்டுல என்ன பாட்டைப் போடுறது? இந்தப் பாட்டு ஜவகர்லால் நேரு மறைந்தபோது பண்டிதர் நேருவை நாம் பறிகொடுத்து விட்டோமேன்னு நான் பாடுன பாட்டு. அந்தப் பாட்டைக் கல்யாண வீட்ல யாராவது போடுவாங்களா?

முதல்ல அந்தப் பாட்டை நிறுத்து. மங்களகரமான ஒரு பாட்டைப் போடப்பா என்றார். தான் பாடுன பாட்டைத்தான் அந்த மைக் செட் காரர் போட்டுருக்கார் என்று எளிதில் அதைக் கடந்து போகவில்லை. அதுதான் கேபி.சுந்தராம்பாள் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் ஜெமினிகணேசன் பதிவு செய்துள்ளார்.

வாழை இலை பரோட்டா !

 வாழை இலை பரோட்டா - சேலம்…

  • நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள்.
  • வழக்கமான பரோட்டாவைத் தின்று அலுத்தவர்களுக்கு இலை பரோட்டா, ஸ்பெஷல்.
  • சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம், அஞ்சல் நிலையத்துக்கு எதிரில் இருக்கிறது அசோக் பரோட்டா கடை.
  • இலை பரோட்டா' சாப்பிட இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.
  • இலை பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தது 20 நிமிடமாவது உட்கார்ந்திருக்க வேண்டும்.
  • அந்த இடைவெளியில் சாப்பிட, கல்டா பரோட்டா, கோதுமை பரோட்டோ என சில வெரைட்டியான பரோட்டா வகைகள் வைத்திருக்கிறார்கள்.
  • கல்டா பரோட்டாவை முறுக வேகவைத்து, பிய்த்துப்போட்டு குழம்பில் ஊறவைத்துத் தருகிறார்கள்.

வாழை இலை பரோட்டா

  • இலை பரோட்டா ஒரு லேயர் வெரைட்டி.
  • அகன்ற வாலையிழையை எடுத்து, முதலில் மட்டன் குழம்பை ஊற்றி விரவுகிறார்கள்.
  • அது மேலே பூ மாதிரி ஒரு பரோட்டா. அதற்குமேல் எலும்பில்லாத சிக்கனை கிரேவியோடு அள்ளி வைத்துப் பரப்புகிறார்கள்.
  • மேலே வெங்காயம், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி அதற்கு மேல் ஒரு பரோட்டா வைத்து தளும்ப சிக்கன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
  • அப்படியே இலையை சதுரமாக மடித்துக் கட்டி பரோட்டா கல்லில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கிறார்கள்.
  • வாழையிலையும், பரோட்டாவும் சேர்ந்து வெளிவருகிற சூப்பரான வாசனைதான் வெந்ததற்கு அடையாளம்.
  • அப்படியே பாதி கருகிய இலையோடு சூடுபறக்க கொண்டு வந்து வைக்கிறார்கள்.
  • இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட்.

டிஆர்.மகாலிங்கம்!

 

TR.Mahalingam

பல முக்கியமான நடிகர்கள் தங்களது திரைவாழ்க்கையில் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். அதெல்லாம் அவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்ததுக்குப் பின்னால்தான் நடந்தது என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் மிக முக்கியமாக சுட்டிக்காட்டுவது ஒரு காலகட்டத்துல ஓகோ என்று இருந்த டிஆர்.மகாலிங்கத்தைப் பற்றித்தான்.

அவர் பிரபலமான கதாநாயகனாக ஒரு காலகட்டத்துல நடித்துக் கொண்டு இருந்தார். அப்போதுதான் நாம ஏன் சொந்தப்படம் ஆரம்பிக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. உடனே தன்னோட மகன் சுகுமார் பேருல சுகுமார் புரொடக்ஷன்ஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். மச்ச ரேகா, மோகன சுந்தரம், சின்னத்துரை, விளையாட்டுப்பிள்ளை ஆகிய 4 படங்களைத் தயாரித்தார்.

அதற்குப் பின்னால் செல்வ செழிப்பிலே இருந்த அவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார் என்பதுதான் உண்மை. மனைவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கூட அடமானம் வைக்கக் கூடிய சூழல் தான் அவருக்கு இருந்தது. கையில பணம் இருந்தது. தயாரிப்பாளர் என்ற அந்தஸ்து இருந்தது.

எனக்கு தலை கால் புரியல. வீண் செலவிலே பணம் கரையத் தொடங்கியது. 12 கார்களில் பெட்ரோலைத் தண்ணீர் மாதிரி போட்டுப் பறந்து கொண்டு இருந்தேன். எல்லா ஓட்டல்களிலும் அறைகள் என்னோட பேர்ல புக்காகி இருந்தன. இதுல மிகப்பெரிய சோகம் என்னன்னா நான் படத்தயாரிப்பாளர் ஆன உடனே, நான் தான் தயாரிப்பாளர் ஆகிட்டேனே என்று பல தயாரிப்பாளர்கள் தன்னோட படங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இப்படி நான் இழந்த செல்வத்தை எல்லாம் எனக்கு மீட்டுக் கொடுத்ததுன்னா அது என்னோட மாமனார்தான். அவர் இல்லன்னா என்னோட வாழ்க்கை எப்படி திசை மாறி இருக்கும் என்று என்னால சொல்ல முடியாது என ஒரு பத்திரிகை பேட்டியிலே பதிவு செய்துள்ளார் டிஆர்.மகாலிங்கம்.

இளையராஜா !

 

1976ல் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் இசைஞானி இளையராஜா. 1980ல் அவர் இசை அமைத்த 100வது படம் மூடுபனி. 

1987ல் அவர் இசை அமைத்த நாயகன் 400வது படம். 

1990ல் வெளியான அஞ்சலி அவருக்கு 500வது படம். 

1994ல் ராசையா அவருக்கு 700வது படம். 

2011ல் வெளியான தாரை தப்பட்டை தான் அவரது 1000மாவது படம்.

இது மட்டுமா...? இது போக பூஜை போட்டு கைவிடப்பட்ட படங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. சில பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமலும் உள்ளன. அந்த வகையில் 1000 படங்கள், 7000 பாடல்கள், 1000 படங்களின் பின்னணி இசை, ஒரு படத்துக்கு 2.30 மணி நேரம் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

தலை சுற்றுகிறதல்லவா? இத்தனைக்கும் அப்போது எல்லாம் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா தான். கணினி மயம் கிடையாது. அந்தவகையில் சூப்பர்ஹிட்டான பல பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா என்றால் மிகையில்லை.

இந்தப் பொங்கலையொட்டி ஜனவரி 17ல் நெல்லையில் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த மாதம் 26ம் தேதி லண்டன் சென்று சிம்பொனியை இசைக்க உள்ளார். 1976 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் திரைப்பயணம் செய்து வருகிறார்.

83 வயதிலும் கூட இளையராஜா இன்னும் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக இசை அமைத்து வருகிறார் என்றால் ஆச்சரியம்தான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே வசனம் சித்ராலயா கோபு !

Paatti sollai thattathe

ஒரு திருமண பத்திரிகை ஒரு திரைப்படத்துக்கான வாய்ப்பைப் பெற்றுத் தருமா? ஆனால் சித்ராலயா கோபுவுக்கு பெற்றுத் தந்தது. அந்த தரமான சம்பவம் என்னன்னு பாருங்க...

தன்னுடைய மகனின் திருமணத்துக்கு அழைப்பதற்காக ஏவிஎம்.சரவணனை சந்தித்தார் சித்ராயா கோபு. உங்க பையன் கல்யாணத்துக்கு நான் வராம இருப்பேனா என்று சித்ராலயா கோபுவிடம் சொன்ன சரவணன் உங்களைப் பார்த்த உடனே தான் நினைவுக்கு வருது. இப்ப நாங்க ஒரு நகைச்சுவை படம் எடுக்குறோம். அந்தப் படத்துக்கு நீங்கள் வசனம் எழுத முடியுமா என்று கோபுவை பார்த்துக் கேட்டார்.

எங்களுடைய வழக்கப்படி கல்யாணத்தில ஆண் வீட்டாருக்கு எந்த வேலையும் இருக்காது. எல்லாம் பெண் வீட்டாருடைய வேலைதான். அதனால நான் ப்ரீயா தான் இருப்பேன். தாராளமாக எழுதித் தருகிறேன் என்றார் சித்ராலயா கோபு. மறுநாளே தன்னை வந்து சந்திக்கும்படி ஏவிஎம் சரவணன் சொல்ல அவரை போய் சந்தித்தார் சித்ராலயா கோபு. ஏவிஎம் சரவணனை சித்ராலயா கோபு சந்தித்த போது அந்த அறையிலே ராஜசேகரும் இருந்தார்.

அடுத்து ஏவிஎம் நிறுவனத்துக்காக தான் இயக்கப் போகின்ற கதையை ராஜசேகர் சித்ராலயா கோபுவிடம் சொல்ல, இதே சாயல்ல நான் ஒரு டிராமாவை எழுதி இருக்கிறேன் என்று சொன்னார் சித்ராலயா கோபு. உங்களுடைய டிராமா இப்ப இவர் சொன் கதை இரண்டையும் இணைத்து நீங்களே இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருங்க என்று ஏவிஎம்.சரவணன் சொல்ல உருவானதுதான் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற திரைப்படம்.

அந்த படம் எப்படிப்பட்ட ஒரு வெற்றிப்படமாக அமைந்ததுன்னு எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 25 வாரத்தைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படத்துக்கு வசனம் எழுதுகின்ற வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது என்னுடைய மகனின் திருமணப் பத்திரிகை தான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் சித்ராலயா கோபு தெரிவித்துள்ளார்.No photo description available.