திருமண பத்திரிகையால் கிடைத்த பட வாய்ப்பு... நெகிழ்ச்சியுடன் சொன்ன கதாசிரியர்!
ஒரு திருமண பத்திரிகை ஒரு திரைப்படத்துக்கான வாய்ப்பைப் பெற்றுத் தருமா? ஆனால் சித்ராலயா கோபுவுக்கு பெற்றுத் தந்தது. அந்த தரமான சம்பவம் என்னன்னு பாருங்க...
தன்னுடைய மகனின் திருமணத்துக்கு அழைப்பதற்காக ஏவிஎம்.சரவணனை சந்தித்தார் சித்ராயா கோபு. உங்க பையன் கல்யாணத்துக்கு நான் வராம இருப்பேனா என்று சித்ராலயா கோபுவிடம் சொன்ன சரவணன் உங்களைப் பார்த்த உடனே தான் நினைவுக்கு வருது. இப்ப நாங்க ஒரு நகைச்சுவை படம் எடுக்குறோம். அந்தப் படத்துக்கு நீங்கள் வசனம் எழுத முடியுமா என்று கோபுவை பார்த்துக் கேட்டார்.
எங்களுடைய வழக்கப்படி கல்யாணத்தில ஆண் வீட்டாருக்கு எந்த வேலையும் இருக்காது. எல்லாம் பெண் வீட்டாருடைய வேலைதான். அதனால நான் ப்ரீயா தான் இருப்பேன். தாராளமாக எழுதித் தருகிறேன் என்றார் சித்ராலயா கோபு. மறுநாளே தன்னை வந்து சந்திக்கும்படி ஏவிஎம் சரவணன் சொல்ல அவரை போய் சந்தித்தார் சித்ராலயா கோபு. ஏவிஎம் சரவணனை சித்ராலயா கோபு சந்தித்த போது அந்த அறையிலே ராஜசேகரும் இருந்தார்.
அடுத்து ஏவிஎம் நிறுவனத்துக்காக தான் இயக்கப் போகின்ற கதையை ராஜசேகர் சித்ராலயா கோபுவிடம் சொல்ல, இதே சாயல்ல நான் ஒரு டிராமாவை எழுதி இருக்கிறேன் என்று சொன்னார் சித்ராலயா கோபு. உங்களுடைய டிராமா இப்ப இவர் சொன் கதை இரண்டையும் இணைத்து நீங்களே இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருங்க என்று ஏவிஎம்.சரவணன் சொல்ல உருவானதுதான் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற திரைப்படம்.
அந்த
படம் எப்படிப்பட்ட ஒரு வெற்றிப்படமாக அமைந்ததுன்னு எல்லாருக்கும் தெரிந்த
விஷயம். 25 வாரத்தைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படத்துக்கு வசனம்
எழுதுகின்ற வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது என்னுடைய மகனின் திருமணப்
பத்திரிகை தான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் சித்ராலயா கோபு
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment