Total Pageviews

Tuesday, August 25, 2026

டிஆர்.மகாலிங்கம்!

 

TR.Mahalingam

பல முக்கியமான நடிகர்கள் தங்களது திரைவாழ்க்கையில் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். அதெல்லாம் அவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்ததுக்குப் பின்னால்தான் நடந்தது என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் மிக முக்கியமாக சுட்டிக்காட்டுவது ஒரு காலகட்டத்துல ஓகோ என்று இருந்த டிஆர்.மகாலிங்கத்தைப் பற்றித்தான்.

அவர் பிரபலமான கதாநாயகனாக ஒரு காலகட்டத்துல நடித்துக் கொண்டு இருந்தார். அப்போதுதான் நாம ஏன் சொந்தப்படம் ஆரம்பிக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. உடனே தன்னோட மகன் சுகுமார் பேருல சுகுமார் புரொடக்ஷன்ஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். மச்ச ரேகா, மோகன சுந்தரம், சின்னத்துரை, விளையாட்டுப்பிள்ளை ஆகிய 4 படங்களைத் தயாரித்தார்.

அதற்குப் பின்னால் செல்வ செழிப்பிலே இருந்த அவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார் என்பதுதான் உண்மை. மனைவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கூட அடமானம் வைக்கக் கூடிய சூழல் தான் அவருக்கு இருந்தது. கையில பணம் இருந்தது. தயாரிப்பாளர் என்ற அந்தஸ்து இருந்தது.

எனக்கு தலை கால் புரியல. வீண் செலவிலே பணம் கரையத் தொடங்கியது. 12 கார்களில் பெட்ரோலைத் தண்ணீர் மாதிரி போட்டுப் பறந்து கொண்டு இருந்தேன். எல்லா ஓட்டல்களிலும் அறைகள் என்னோட பேர்ல புக்காகி இருந்தன. இதுல மிகப்பெரிய சோகம் என்னன்னா நான் படத்தயாரிப்பாளர் ஆன உடனே, நான் தான் தயாரிப்பாளர் ஆகிட்டேனே என்று பல தயாரிப்பாளர்கள் தன்னோட படங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இப்படி நான் இழந்த செல்வத்தை எல்லாம் எனக்கு மீட்டுக் கொடுத்ததுன்னா அது என்னோட மாமனார்தான். அவர் இல்லன்னா என்னோட வாழ்க்கை எப்படி திசை மாறி இருக்கும் என்று என்னால சொல்ல முடியாது என ஒரு பத்திரிகை பேட்டியிலே பதிவு செய்துள்ளார் டிஆர்.மகாலிங்கம்.

No comments:

Post a Comment