Total Pageviews

Tuesday, August 25, 2026

கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன் !

 கல்யாண வீட்டில் கலாட்டா... கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன்

கொடுமுடி கோகுலம் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் மீது நடிகர் ஜெமினிகணேசனுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. அவரோடு எனக்கு நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. என்னை ஒரு பிள்ளை மாதிரிதான் என்னை அவங்க நடத்துனாங்க. ஒரு திருமண விழாவில் நாங்க இருவரும் கலந்து கொண்டோம்.

கே.பி.சுந்தராம்பாளும் அந்த திருமண விழாவில் அடி எடுத்து வைத்த உடன் அங்கு பாடல்கள் எல்லாம் ஒலிபரப்பிக் கொண்டு இருந்தன. ஒருவர் கேபி.சுந்தராம்பாளின் பாட்டை எடுத்துப் போட்டார். அந்தப் பாட்டைப் போட்டதுதான் தாமதம். மிகுந்த கோபத்துடன் அந்த மைக் செட் காரரிடம் போன கே.பி.சுந்தராம்பாள் முதல்ல அந்தப் பாட்டை நிறுத்துறீயான்னு கேட்டார். அந்த மைக் செட் காரருக்கு ஒண்ணும் புரியல.

அம்மா இது நீங்க பாடுன பாட்டுதான் என்றார். அதற்கு நான் பாடுன பாட்டு தான். அதுக்குக் கல்யாண வீட்டுல என்ன பாட்டைப் போடுறது? இந்தப் பாட்டு ஜவகர்லால் நேரு மறைந்தபோது பண்டிதர் நேருவை நாம் பறிகொடுத்து விட்டோமேன்னு நான் பாடுன பாட்டு. அந்தப் பாட்டைக் கல்யாண வீட்ல யாராவது போடுவாங்களா?

முதல்ல அந்தப் பாட்டை நிறுத்து. மங்களகரமான ஒரு பாட்டைப் போடப்பா என்றார். தான் பாடுன பாட்டைத்தான் அந்த மைக் செட் காரர் போட்டுருக்கார் என்று எளிதில் அதைக் கடந்து போகவில்லை. அதுதான் கேபி.சுந்தராம்பாள் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் ஜெமினிகணேசன் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment