Total Pageviews

Friday, August 28, 2026

😇திண்ணை😇

😇திண்ணை😇

ஒரு காலத்துல ஒரு வீட்டோட அழகும், கம்பீரமும் அந்தந்த வீட்டோட திண்ணைய பொருத்ததாதான் இருக்கும்... அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததுதான் இந்த திண்ணைகள்😇

ஓட்டு வீடுன்னு சொன்னாலே அந்த வீட்டோட திண்ணைகள்தான் முதல்ல நம்ம நினைவுக்கு வரும்... ஆமா வாசல்படிக்கு வெளில தாழ்வாரத்துக்கு மேல பெரிய திண்ணை ஒன்னும் சின்ன திண்ணை ஒன்னுமிருக்கும்... சுத்துக்கட்டு வீடுகள்ல ரெண்டுமே பெரிய திண்ணைகளாதான் இருக்கும்..

வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா காலார கொஞ்சநேரம் திண்ணைலதான் உட்காருவாங்க... வீட்ல உள்ளவங்களும் வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல காத்தாட திண்ணைல உட்கார்ந்துதான் பொழுத போக்குவாங்க..

மழை நேரங்கள்ல திண்ணைல உட்கார்ந்து அந்த குளிர்காத்து மேல பட கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மழைய ரசிக்கறது அவ்ளோ சுகமா இருக்கும்...

சில வீடுகளோட திண்ணைகள்ல தாயம் விளையாட கோடுகள்லாம் கிழிச்சி வச்சிருப்பாங்க... எங்க தாத்தா வீட்டுல சாய்மானம்லாம்(சாஞ்சிக்கற மேடை) இருக்கும்.. தலைவச்சி படுக்க வழு வழுப்பான மேடைலாம் இருக்கும்...

சின்ன வயசுல தாத்தா வீட்டு திண்ணைல அந்த தூணபிடிச்சி சுத்தி விளையாண்டது, மேல ஏறி நின்னுக்கிட்டு ஒரு குச்சிய மைக் போல கைல வச்சிக்கிட்டு பாட்டு பாடினதுலாம் இன்னைக்கும் என் நினைவுல இருக்கு 😍😍

வீடுகளோட திண்ணைகளுக்குதான் அந்த வீட்டோட இன்ப துன்பம் எல்லாமே முழுசா தெரிஞ்சிருக்கும் ஆமா திண்ணைகளும் ஒரு வீட்டோட அங்கங்கள்தான் 😇

காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்

 காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்..

  • கர்நாடகாவின் தலைகாவிரியாக உருவெடுத்து ஒற்றை காவிரியாக வரும் ஆறானது‌ இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.
  • திருச்சியின் முக்கிய சுற்றுலா தலமாக முக்கொம்பு திகழ்கிறது.
  • முக்கொம்பில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா சிறுவர் பூங்கா,செயின்ட் வீல் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, படகு போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.
  • அருகில் கரிகாலச்சோழன் புகழை இன்று வரை சுமந்து நிற்கும் கல்லனணை உள்ளது.
  • பூங்காக்களில் உள்ள மரத்தடிகளில் அமர்வதற்கு ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்வது இனிமையாக இருக்கும்.
  • அருகில் உளள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வது அதைவிட சிறப்பு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீ போன்றவை கிடைக்கும்.
  • காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். நமக்கு காவிரி ஆற்றில் இருந்து மீன் பிடித்து சுடச்சுட வருத்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
  • சுற்றுலா இடம் தேடி எங்கெங்கோ செல்பவர்கள் முக்கொம்பு சுற்றுலா சென்று வந்தால் மனதுக்கு இதமாக இருக்கும்.
  • அப்படியே அருகில் உள்ள கல்லணை,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்,திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் என இவற்றையும் பார்வையிட்டு மகிழலாம்.

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

 

சகுனிங்க நிறைய இருக்காங்க... அதுக்கு கொஞ்சம் சாமர்த்தியமும், சாணக்கியத்தனமும் வேணும்... பொளந்து கட்டிய ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஜெயிலர் என்ற மாபெரும் பெற்றிக்குப் பிறகு வேட்டையன் படத்தின் மூலம் களம் இறங்குகிறார். படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இதற்கான ஆடியோ லாஞ்ச் நேற்று நடந்தது. இதுல அவர் என்ன பேசினார்னு பார்க்கலாமா...

ஒரு விஷயம் நாம தொடர்ந்து பண்ணினோம்னா அடுத்தடுத்து என்ன என்ன என்ற கேள்விகள் நமக்குள்ள வந்துக்கிட்டே இருக்கும். ஒரு தோல்வியைப் பார்த்தா அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயம் நமக்கு வந்துடும். அதே மாதிரி தான் ஒரு பெரிய வெற்றியைப் பார்த்ததும் அடுத்து என்ன பண்ணப் போறோம்கற பயமும் எனக்குள்ள வந்துச்சு.

ஏன்னா அடுத்தது வெற்றி பெறலைன்னா ஃபார்ம்ல இல்லன்னு சொல்லிடுவாங்க. அந்த மாதிரி மிகப்பெரிய வெற்றியை நான் ஜெயிலர் படத்துல பார்த்தேன். அதுக்கு அப்புறம் நான் முழுமையா நடிச்ச படம் தான் வேட்டையன். இடையில கெஸ்ட் அப்பியரன்ஸா லால் சலாம் படத்துல நடிச்சேன்.

ஜெயிலர்க்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டேன். ஆனா என்ன பண்றதுன்னு தெரியல. ஏன்னா நிறைய பிரஷர். பெரிய வெற்றி கொடுத்தாச்சு. அப்படி வந்தது தான் வேட்டையன் கதை. அதைக் கேட்டேன்.

ஆனா இதைக் கமர்ஷியலா மாற்றிக் கொண்டு வாங்கன்னு சொன்னேன். ஏன்னா கோடிகள்ல நம்மளை நம்பி படம் எடுக்குறாங்க. அவங்களுக்குப் போட்ட காசு திரும்ப கிடைக்கணும். அப்போ த.செ.ஞானவேல் சார் நான் நெல்சன் மாதிரியோ, லோகேஷ் மாதிரியோ கமர்ஷியலா கொடுக்க முடியாது.

ஆனா என் ஸ்டைல்ல கொடுக்குறேன். அது ரசிகர்களுக்கு ரொம்ப திருப்தியா இருக்கும்னு சொன்னாரு. அதைத் தான் நானும் சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் ரெண்டே நாளில் வந்து சொன்னார். முதல்ல கொஞ்சம் கதை சொன்னாரு. இதுக்கு அப்புறம் கமர்ஷியல் வந்துக்கிட்டே இருக்கும்னாரு. சார் கமர்ஷியலை சொல்லல. டப்பு வரணும்னு சொன்னேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெக்னீஷியன் எல்லாம் ரஜினி சாய்ஸ் தான்னு சுபாஷ்கரனே சொல்லிட்டாராம். அனிருத்துக்கும் ரஜினி டபுள் ஓகே சொன்னாராம். அமிதாப்பச்சன், ராணா, பகத்பாசில் எல்லாமே ரஜினி சாய்ஸ் தானாம். பகத்பாசில் எனக்கு சம்பளம் கூட வேண்டாம். ஒன்றரை மாசம் டைம் கொடுங்கன்னு சொன்னாரு.

எங்கிட்ட வேணாம். நான் அடுத்து கூலி படத்துல வேற கமிட் ஆகிட்டேன். லோகேஷ்கிட்ட கேட்கணும்னு சொன்னேன். அவரும் டைம் எடுத்துக்கோங்க சார்னு சொல்லிட்டாரு. ஏன்னா அவர் இன்னும் கதையை ஒழுங்கா பண்ணல. அதான் டைம் கொடுத்துட்டாருன்னு லோகேஷை கலாய்த்தார் ரஜினி.

என்னைப் பழிவாங்கறதுக்காகவே மஞ்சுவாரியாரைக் கொண்டு வந்தீங்களான்னு ரஜினி கலாய்ச்சாராம். ஏன்னா அவரு தளதளன்னு ரொம்பவே அழகா இருந்தாராம். அமிதாப்பச்சன்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை அழகாக் கத்துக்கிட்டேன்னாரு.

முள்ளும் மலரும் படத்துல வர்ற ‘ரெண்டும் கையும் ரெண்டு காலும் இல்லன்னா கூட இந்தக் காளி பொழைச்சிக்குவான் சார்’னு ரஜினி அதே டயலாக்கைப் பேசிக்காட்டினாரு. ஆடியன்ஸ் மத்தியில பலத்த கைதட்டல்கள். இந்த உலகத்துல சகுனிகள் நிறைய பேர் இருக்காங்க. நல்லவனா இருந்தா பொழைச்சிக்கவே முடியாது.

கொஞ்சம் சாணக்கியத்தனமும், கொஞ்சம் சாமர்;த்தியமும் இருக்கணும். அதனால பார்த்துப் பத்திரமா இருந்துக்கோங்க. இப்படி ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் முத்தாய்ப்பாக அட்வைஸ் உடன் விடைபெற்றது அரங்கத்தை அதிர வைத்தது.

13ம் நம்பர் வீடு பேய்ப்படம் !

 

பேய்ப்படங்களைப் பார்ப்பது என்றால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமே ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டினால் ஆர்வம் தானே. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பேய்ப்படங்களுக்கு என்று ஒரு மவுசு இருக்கத் தான் செய்கிறது. அப்போது ஜெகன் மோகினி, மாயமோகினின்னு ஆரம்பித்து இப்போது அரண்மனை 1, 2, 3, 4, சந்திரமுகி 1, 2, பேய்மாமா, முனி, காஞ்சனா1, 2, 3, 4 என தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

அந்த வகையில் எப்போதும் பேய்ப்படங்களை மிகவும் பயப்படுபவர்கள் தான் பார்ப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தனியாகப் போய்ப் பார்க்க மாட்டார்கள். ஒரு குரூப்பாகத் தான் போவார்கள். ஏன்னா பயம். அப்படி ஒரு பயம். இன்னும் ஒரு சிலர் குரூப்பாகப் போனாலும் கூட பேய் வரும்போதெல்லாம் பேயை விட மேலாகக் கத்திக் கூப்பாடு போடுவர்.

இது ஏன்னா தங்கள் பயத்தைப் போக்கிக் கொள்ளத் தான். முக்கியமாக டிவியில் படத்தைப் பார்ப்பதை விட தியேட்டரில் சென்று பேய்ப்படத்தைப் பார்த்தால் தான் ஒரு தனி எபெக்ட் இருக்கும். அதிலும் திடீர் திடீர்னு மியூசிக்கே நம்மை பயமுறுத்தி விடும். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களைக் கதிகலங்கச் செய்த படம் ஒன்று உள்ளது.

அது இப்போது பார்த்தாலும் நமக்குள் ரத்தமே உறைந்து விடும். அப்படி ஒரு பயம் கொண்ட சினிமா தான் என்றே சொல்ல வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் கூட தனியாக உங்கள் வீட்டு டிவியில் இந்தப் படத்தைப் போட்டுப் பாருங்கள். அப்போது உங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தால் உண்மையிலேயே நீங்கள் தைரியசாலி தான். அப்படி என்ன படம்?

13ம் நம்பர் வீடு தான். மலையாள இயக்குனர் பேபியின் இயக்கத்தில் நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே நமக்குத் திகிலூட்டும் வகையில் தான் இருக்கும். இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

13ம் நம்பர் வீடு படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நமக்குள் அப்படிப்பட்ட ஒரு பயத்தைத் தரும் படம் என்றால் அது இதுதான். அந்த சமயத்தில் இந்தப் படத்தை யார் தனியாக தியேட்டரில் போய் பார்க்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு என்று கூட பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

வாலி - எம்ஜிஆர்

 

mgr, vaali

நவரத்தினம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டத்துல அந்த படத்தின் இயக்குனர் ஏபி.நாகராஜனிடம் இருந்து வாலிக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது. எம்ஜிஆர் உங்களைப் பார்க்கணும்னு விரும்புறாரு. அதனால உடனடியா சத்யா ஸ்டூடியோவுக்கு வாருங்கள் என்றார் ஏபி.நாகராஜன். அந்தக் காலகட்டத்துல வாலி எங்கே போனாலும் பாகவதர் என்று அழைக்கப்படுற நபர் கூடவே போவார்.

வாலியும் அவரை அழைத்துக் கொண்டு சத்யா ஸ்டூடியோவுக்குப் போனார். எம்ஜிஆரின் மேக்கப் அறைக்கு வெளியில் பாகவதரை நிறுத்தி விட்டு, அவரை சந்திப்பதற்கு அறைக்குள் போனார் வாலி. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதற்குள் மதிய உணவு வேளை வந்தது. வாங்க சாப்பிடலாம்னு பக்கத்துல இருந்தவரைக் கூப்பிட்டு இலை போடச் சொன்னாரு எம்ஜிஆர்.

நடுவுல எம்ஜிஆர் இருந்தார். வலது பக்கத்துல லதாவும், இடது பக்கத்துல வாலியும் உட்கார, எம்ஜிஆருடைய உதவியாளர் பரிமாறத் தொடங்கினார். அப்போ திடீர்னு எழுந்தார் வாலி. என்ன எழறீங்கன்னு கேட்டார் எம்ஜிஆர். எங்கூட பாகவதர்னு ஒருத்தர் வந்துருக்காரு. அவரு வெளியே இருக்காரு. காசு கொடுத்து அவரை வெளியே சாப்பிட்டு வந்துட சொல்றேன். அப்படின்னு வாலி சொன்னதுதான் தாமதம். எம்ஜிஆர் உடனே தன்னோட இருப்பிடத்தில் இருந்து எழுந்து விட்டார்.

கதவை திறந்துகிட்டு வெளியே போய் இங்கே பாகவதர்னு வாலி கூட வந்தது யார்? அப்படின்னு கேட்க, அந்த பாகவதர் கூனி குறுகி, நான்தான் பாகவதர் என்றார். உடனே அவரது கையைப் பிடித்துக் கொண்டு அழைத்து வந்த எம்ஜிஆர், லதாவை எழுந்திருக்கச் சொல்லி அந்த இடத்திலே அவரை அமரச் சொல்லி சாப்பாடு பரிமாறச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த வாலியின் கண்களிலே கண்ணீர். அண்ணே, மனிதர்களில் நான் எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கேன். நடிகர்களில் நான் பார்த்த முதல் மனிதர் நீங்க தான் என்று எம்ஜிஆரைப் பார்த்து சொன்னார் வாலி. அவர் அப்படி சொன்னதும் எம்ஜிஆர் அதுக்குக் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா? வழக்கம்போல ஒரு புன்னகைதான்.

Tuesday, August 25, 2026

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

என்ன இலங்கேஸ்வரனா? ஆர்எஸ்.மனோகருக்கு கடும் எதிர்ப்பு... அப்புறம் நடந்த அதிசயம்!

RS.Manohar

நாடக நடிகரும், பிரபல சினிமா வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ்.மனோகர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி நாடக உலகிற்குள் நுழைந்தார் என்று பார்ப்போம்.

பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் ஆர்எஸ்.மனோகருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்ததுன்னா அவரது நாடகங்கள் தான். நாடகக் காவலர் என்று போற்றப்பட்ட ஆர்.எஸ்.மனோகர் நேஷனல் தியேட்டர் என்ற பெயரில் அவருடைய நாடகக் கம்பெனியை ஆரம்பித்ததே ஒரு தனிக்கதை. 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று சென்னையிலே பாகிரதி தெருவில் அமைந்துள்ள தன் வீட்டில் அமர்ந்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார் ஆர்எஸ்.மனோகர்.

அப்போது அவர்களுக்குள் ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பித்தால் என்ன என்ற ஒரு எண்ணம் பிறந்தது. நாடகக் கம்பெனியை ஆரம்பிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம். அதை இன்றைக்கே ஆரம்பித்து விடுவோம் என்றார் மனோகர். அன்றைய தினம் தேசிய தலைவரான நேருவின் பிறந்த தினம் என்றதால நாடகக் கம்பெனிக்கு நேஷனல் தியேட்டர் என்று பெயர் வைக்கலாம் என்று நண்பர்கள் எல்லோரும் முடிவு செய்தனர்.

நாடகக் குழு ஆரம்பித்த போது அதுபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நவாப் ராஜமாணிக்கம், டிகே.சகோதரர்கள், எஸ்.வி.சகஸ்ரநாம் போன்ற மேதைகள் நாடகம் போட்டுக் கொண்டு இருந்த காலகட்டம் அது. இவங்களுக்கு நடுவுல நாம் என்ன செய்யப் போறோம் அப்படிங்கிற அச்சம் எனக்குள்ள இருந்தது. இன்ப நாள், உலகம் சிரிக்கிறது ஆகிய சமூக நாடகங்களை முதலில் அரங்கேற்றினோம்.

இந்த ரெண்டு நாடகங்களுக்குமே மக்கள் மத்தியில் நல்ல வரறே;பு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் துறையூர் மூர்த்தி லங்கேஸ்வரன் நாடகத்தை எழுதிக் கொண்டு வந்தார். அந்த நாடகத்தைத் தமிழ்நாட்டுல போடுறதுக்கு கொஞ்சம் எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தது. என்றாலும், இலங்கையில் அந்த நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுக்குப் பின், தமிழ்நாட்டிலும் அது தொடர்ந்தது.

அதன் காரணமாகத்தான் ஒரு காலகட்டத்தில என்னுடைய பெயரே லங்கேஸ்வரன் மனோகர் ஆகியது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எஸ்.மனோகர்.

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? அப்போ பாலசந்தரைப் பார்த்துக் கத்துக்கோங்க!

திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் எப்படிப்பட்ட தன்னம்பிக்கைக் கொண்ட மனிதராக இயக்குனர் கே.பாலசந்தர் இருந்தார் என்று பார்க்கலாமா...

சத்யா மூவீஸில் தெய்வத்தாய் என்ற படத்தை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. அந்தப் படத்துக்கான பாடல் கம்போசிங் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது அந்த அறையின் மூலையில் எப்போதும் ஒரு இளைஞர் நின்று கொண்டே இருந்தாராம்.

அதைப் பார்த்துள்ளார் எம்எஸ்.விஸ்வநாதன். ஒருநாள் தெய்வத்தாய் படத் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் எழுந்து போன பிறகு, தன் அருகில் இருந்த வாலியை அழைத்து யார் அந்த இளைஞன்னு கேட்டுள்ளார். அவர்தான் இந்தப் படத்தோட வசனகர்த்தா என்றார் வாலி.

உடனே அந்த இளைஞரைப் பக்கத்தில் அழைத்த எம்எஸ்வி. நான் உங்களைத் தினமும் பார்க்கிறேன். ஒருநாள் கூட நீங்கதான் இந்தப் படத்தோட வசனகர்த்தான்னு எங்கிட்ட சொல்லவே இல்லையேன்னு கேட்கிறார் எம்எஸ்வி.

பாலசந்தர், நான் யாருன்னு தெரிஞ்சி இந்தப் படத்துல உள்ள வசனங்களை நீங்க ரசிக்கிறதை விட எழுதிய வசனங்களை எல்லாம் ரசித்துப் பார்த்துவிட்டு இந்த வசனங்களை எல்லாம் எழுதினது யார்னு கேட்டு நீங்கத் தெரிஞ்சிக்கணும்னு நான் நினைச்சேன். அதனால்தான் நான் என்னைப்பற்றி உங்ககிட்ட சொல்லலன்னு அப்பவே பாலசந்தர் தன்னம்பிக்கையோட சொன்னாராம்.