🌹வெண்ணிற ஆடை மூர்த்தி!
பேட்டி ஒன்றில்
🌹என் மனைவி மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
🌹மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.
🌹சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று உள்ளேன்.
🌹எனக்கு மனோ என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் என்ஜீனியரிங் முடித்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பணி செய்கிறார். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான்
Prasanth
Srinivas
No comments:
Post a Comment